Wednesday, September 23, 2015

வாராய் நீ வாராய், கிருஷ்ணா!



இன்றைய பாடலை இயற்றியது ஸ்ரீவாதிராஜர். மிகவும் எளிமையான பாடல். அஷ்டோத்திரத்தை அப்படியே பக்கத்து பக்கத்தில் போட்டு பாட்டு வரிகளில் எழுதியதைப் போல் உள்ளது. ஆகவே ஒவ்வொரு சொல்லுக்கும் பொருளைக் கொடுத்து விட்டால், பாட்டு எளிதாகப் புரிந்துவிடுகிறது.



ராமனை, கிருஷ்ணனை வரவேற்கும் இந்தப் பாடல் இதோ.

பாரோ பேக பாரோ நீல மேக வர்ணா
பாரோ பேக பாரோ பேலபுரத சென்னா (பாரோ)

வாராய் வேகமாய் வாராய், கருமை நிறத்தவனே
வாராய் வேகமாய் வாராய், பேலூரின் சென்ன கேசவனே (பாரோ)

இந்திரெ ரமண கோவிந்தா பேக பாரோ
நந்தன கந்த முகுந்தா பேக பாரோ (பாரோ)

இலக்குமியின் கணவனே கோவிந்தனே வேகமாய் வாராய்
நந்தகோபனின் மகனே முகுந்தனே வேகமாய் வாராய் (பாரோ)

தீர உதார கம்பீர பேக பாரோ
ஹார அலங்கார ரகுவீர பேக பாரோ
ருத்தா அனிருத்தா நிரவத்யா பேக பாரோ
ஹத்தா நேரித்தா சுப்ரசித்தா பேக பாரோ (பாரோ)

வீரனே தயாளனே கம்பீரமான தோற்றம் உடையவனே
மாலை அலங்காரத்துடன் காணப்படும் ராமனே
எங்கும் வியாபித்திருப்பவனே, அனிருந்த்தனே, எவ்வித களங்கமும் இல்லாதவனே
யானையின் மேலேறி வரும், மிகவும் பிரபலமானவனே (பாரோ)

ரங்கா உத்துங்கா நரசிங்கா பேக பாரோ
மங்கள மஹிம சுபாங்கா பேக பாரோ
ஐயா விஜய சஹாயா பேக பாரோ
அஹ்யத்ரி வாசா ஹயவதனா பேக பாரோ (பாரோ)

ரங்கனே அழகிய சிங்கனே
மங்களகரமான மகிமை பொருந்தியவனே, அழகிய அங்கங்களைக் கொண்டவனே
தலைவனே, (பக்தர்களைக்) காத்திட வேகமாய் வருபவனே
பாம்பின் மேல் படுத்திருப்பவனே, ஹயவதனனே, வேகமாய் வாராய் (பாரோ)

***

வித்யாபூஷணரின் குரலில் இந்த அருமையான பாடல்:

***










1 comment:

maithriim said...

அரங்கன் மேலேயே பெரும்பாலான பாடல்கள் உள்ளனவோ? அருமையானப் பாட்டு. இசையும் அருமை.

amas32