Tuesday, August 29, 2017

உலகத்தில் யார் சிறந்தவர்?


உலகத்தில் யார் சிறந்தவர்?

கர்னாடக ஹரிதாசர்கள் - ஸ்ரீமத்வாச்சாரியர் தோற்றுவித்த த்வைத சித்தாந்தத்தைச் சேர்ந்தவர்கள். அந்த சித்தாந்தத்தின் சிறப்புகளை - சமஸ்கிருதத்தில் இருந்த தத்துவங்களை - எளிய கன்னடத்தில் மொழிபெயர்த்து அனைவருக்கும் புரியுமாறு பாடியவர்கள். 



த்வைத சித்தாந்தத்தின் முதல் தத்துவம் - ஹரி சர்வோத்தமன். ஸ்ரீஹரியே அனைவரைவிட உயர்ந்தவன். இந்த தத்துவத்தை வைத்தே பற்பல பாடல்களை தாசர்கள் பாடியுள்ளனர். அந்த ஸ்ரீஹரியின் சிறப்புகளை புரந்தரதாசர் விளக்குவது போல் பாடி, தத்துவத்தை நமக்குப் புரிய வைப்பதே இன்றைய பாடல். 

***

ஈ பரிய சொபகாவ தேவரலி நா காணே
கோபி ஜனப்ரிய கோபாலகல்லதே (ஈ பரிய)

இந்த (கீழ்க்கண்ட) சிறப்புகளை வேறு எந்த தேவரிடத்திலும் நான் கண்டதில்லை;
கோபியர்களின் மனங்களைக் கவர்ந்த கோபாலனைத் தவிர (ஈ பரிய)

தொரெயதனதலி நோடே தரணிதேவிகே ரமணா
சிரியதனதலி நோடே ஸ்ரீகாந்தனு
ஹிரியதனதலி நோடே சரசிஜோத்பவனய்யா
குருவுதனதலி நோடே ஜகதாதி குருவு (ஈ பரிய)

முதலாளிகளில் யார் பெரிய முதலாளி என்று பார்த்தால் இவர் உலகத்திற்கே முதலாளி
செல்வந்தர்களில் யார் பெரிய செல்வந்தர் என்று பார்த்தால் இவர் இலக்குமிக்கே கணவன்
மூத்தவர்களில் யார் மூத்தவர் என்று பார்த்தால் இவர் பிரம்மாவிற்கே தந்தை
ஆசான்களில் யார் பெரிய ஆசான் என்று பார்த்தால் இவர் உலகத்திற்கே ஆசான் (ஈ பரிய)

பாவனத்வதி நோடே அமர கங்கா ஜனக
தேவத்வததி நோடே திவிஜரொடெயா
லாவண்யதலி நோடே லோகமோஹகனய்யா
ஆவ தைர்யதி நோடே அசுராந்தகா (ஈ பரிய)

புனிதர்களில் யார் மிகப் புனிதர் என்று பார்த்தால் இவர் புனிதமான கங்கையின் தந்தை
தேவர்களில் யார் பெரியவர் என்று பார்த்தால் இவர் தேவாதி தேவர்
அழகானவர்களில் யார் சிறந்தவர் என்று பார்த்தால், இவர் உலகத்தையே மயக்குபவர்
தைரியமானவர்களில் யார் மேலானவர் என்று பார்த்தால், இவர் பல அசுரர்களையே வென்றவர்

ககனதலி சஞ்சரிப கருட தேவனே துரக
ஜகதீதரசேஷ பரியங்க சயன
நிகம கோசர புரந்தர விட்டலகல்லதே
மிகிலாத தைவகளிகே ஈ பாக்யவுண்டே (ஈ பரிய)

வானத்திலேயே பறக்கும் கருட தேவனே இவனது வாகனம்
சேஷமே இவனது வாகனம்
வேதங்களில் பாடப்பட்டிருக்கும் இந்த புரந்தரவிட்டலனைத் தவிர
(மேலே சொன்ன) இந்த தகுதிகள் வேறு யாருக்கு உண்டு? யாருக்கும் இல்லை (ஈ பரிய)

***

இந்த அழகான பாடல் புத்தூர் நரசிம்ம நாயக் அவர்களின் இனிய குரலில்:



Monday, August 28, 2017

நடந்தவை எல்லாமே நன்மைக்கே

நடந்தவை எல்லாமே நன்மைக்கே

நவகோடி நாராயணனாக இருந்த புரந்தரதாசர், ஒரு முதியவருக்கு உதவாமல் போக - அவர் நாராயணனின் மனைவியிடம் மூக்குத்தி வாங்கி - அதை நாராயணனிடமே அடகு வைக்க வந்து - அதன் மூலம் நாராயனனுக்கு வைராக்கியம் பிறக்கிறது. இந்த சம்பவச் சுருக்கம் இந்தப் பதிவில் உள்ளது. 


ஸ்ரீவிஜயதாசரைப் பார்த்து - புரந்தரவிட்டலா என்ற அங்கிதம் பெற்ற தாசர் பாடிய முதல் பாடல் இது என்று கருதப்படுகிறது. தாசர் என்றால் எப்படி இருக்கவேண்டும் என்று இந்த பாடலில் தெரிந்துகொள்லலாம்.



* சன்யாசியைப் போல் எதிலும் பற்றற்று இருக்க வேண்டும்
* தினமும் பலரிடம் பிட்சை எடுத்தே உண்ண வேண்டும்
* துளசி மாலை அணிந்து எப்போதும் விட்டலனின் தியானத்தில் இருக்க வேண்டும்.

தான் அரசன் (செல்வந்தன்) என்ற அகந்தையில் யாருக்கும் வணங்காமல் இருந்த நிலை மாறி, தற்போது அந்த ஸ்ரீதரனின் சேவை செய்யப் புறப்பட்டதற்கு - இந்த மாற்றத்திற்குக் காரணமாக இருந்த தன் மனைவிக்கு நன்றி செலுத்தும் வகையில் இந்த பாடல் இயற்றியுள்ளார். 

இப்போது பாடல்.

ஆதத்தெல்லா ஒளிதே ஆயித்து
நம்ம ஸ்ரீதரன சேவேகெ சாதன சம்பதாயித்து

நடந்ததெல்லாம் சரியாகவே நடந்தது
நம்ம ஸ்ரீதரனுக்கு சேவை செய்வதற்கு காலம் கனிந்தது (ஆதத்தெல்லா)

தண்டிகே வெத்த ஹிடியுவுதக்கே
மண்டெ பாகி நாசுதலித்தே
ஹெண்டத்தி சந்ததி சாவிரவாகலி
தண்டிகே வெத்த ஹிடிசிதளய்யா (ஆதத்தெல்லா)

(சன்யாசிகள் பிடித்துக் கொள்ளும்) தண்டத்தைப் பிடிப்பத்தற்கு
தலை குனிந்து வெட்கப்பட்டுக்கொண்டிருந்தேன்
(என்) மனைவியின் குலம் தழைக்கட்டும்
தண்டத்தை என்னை பிடிக்க வைத்தாளய்யா (ஆதத்தெல்லா)

கோபாள புட்டி ஹிடிவுதக்கே
பூபதி எந்து கர்விசுதித்தே
ஆபத்னீ குல சாவிரவாகலி
கோபாள புட்டி ஹிடிசிதளய்யா (ஆதத்தெல்லா)

பிட்சை எடுப்பவர்கள் பிடித்துக் கொள்ளும் பாத்திரத்தை பிடிப்பதற்கு
நானே உயர்ந்தவன் என்ற அகந்தையில் (பிடிக்காமல்) இருந்தேன்
அந்த மனைவியின் குலம் தழைக்கட்டும்
அந்த பாத்திரத்தைப் பிடிக்க வைத்தாளய்யா (ஆதத்தெல்லா)

துளசி மாலே ஹாகுவுதக்கே
அரசனெந்து திருகுதலித்தே
சரசிஜாக்‌ஷ புரந்தரவிட்டலனு
துளசி மாலே ஆகிசிதனு (ஆதத்தெல்லா)

துளசி மாலை அணிந்துகொள்வதற்கு
நான் அரசன் ( நான் ஏன் அணியவேண்டும்) என்ற (அகந்தையில்) இருந்தேன்
தாமரைக் கண்ணனாகிய அந்த புரந்தரவிட்டலன்
எனக்கு துளசி மாலை அணிவித்தான் (ஆதத்தெல்லா)

***

வித்யாபூஷண் அவர்கள் பாடிய இந்தப் பாடல்:







Thursday, August 24, 2017

மடி மடி மடி என்றால் என்ன?

மடி மடி மடி என்றால் என்ன?

மடி (ஆசாரம்) அப்படியென்றால் என்ன? வெறும்னே ஈரத்துணியை அணிந்துகொள்வதா? செய்ய வேண்டிய கடமைகளை செய்யாமல், மடி மடி என்று சொல்லிக் கொண்டிருந்தால் அது சரியா?

எதையும் தொடாமல் பூஜை செய்யவேண்டும் என்று துவங்கி, எதையாவது தொட்டு விடுவோமோ - எதாவது நம் மீது பட்டுவிடுமோ என்பதிலேயே கவனம் செலுத்தி, பூஜை செய்வதையே மறந்து - இப்படிதான் பலரும் (ஆசாரம் செய்பவர்கள்) இன்று.



இது பற்றி இன்றைக்கு நாம் எதிர்கொள்ளும் கேள்விகளுக்கு அன்றே புரந்தரதாசர் விடை அளித்துவிட்டார். இன்றைய பாடலில் பார்ப்போம். நிஜமான மடி என்றால் என்ன என்று தெரிந்து, அதன்படி நடப்போம்.

***

மடிமடிமடி எந்து அடிகடிஹாருவே
மடி மாடுவே பகே பேருண்டு
பொடவி பாலகன பாத த்யானவனு
பிடதே பாடுவுது அது மடியு (மடி)

மடிமடிமடி என்று அடிக்கடி சொல்வார்கள்
மடி செய்வதற்கு வேறு வழி உண்டு
ஓடி விளையாடும் சிறுவனின் (ஸ்ரீகிருஷ்ணனின்) திருவடிகளை
விடாமல் நினைத்து, அதைப்பற்றி பாடுவதே நிஜமான மடியாகும் (மடி)

பட்டெய நீருளகத்தி ஒணகிஸி
உட்டுகொண்டரே அது மடியல்லா
ஒட்டெயொளகின காம க்ரோத 
மத மத்ஸர பிட்டு நடெதரே அது மடியு (மடி)

(கட்டிக்கொள்ளும்) ஆடையை நீரில் நனைத்து, காய வைத்து
அணிந்து கொண்டால், அது மடியல்ல
நம் உடம்பில் இருக்கும் காமம், குரோதம் (கோபம்)
மதம் (கர்வம்), மத்ஸரம் (பொறாமை) ஆகியவற்றை விட்டுவிட்டாலே அது மடிதான் (மடி)

தசமி த்வாதசி புண்ய தினதலி
வசுதேவ சுதனனு பூஜிசதே
தோஷகே அஞ்சதே பரரனு புஞ்சிசதே
யம பாஷக்கே சிலுகுவுது அது மடியே (மடி)

தசமி, த்வாதசி மற்றும் இதர புண்ய தினங்களில்
ஸ்ரீகிருஷ்ணனை பூஜிக்காமல்
எந்தவித பாவங்களும் அஞ்சாமல், அன்னதானம் செய்யாமல்
(இறுதியில்) யமதூதர்களிடம் சிக்குவது - இது மடியா? இல்லை (மடி)

ஹிரியர குருகள ஹரிதாசருகள
சரணகெரகி பலு ஹரிபக்தியலி
பாலிசு எந்து புரந்தரவிட்டலன
இருளு ஹகலு ஸ்மரிசுவுது அது மடியு (மடி)

சான்றோர்களின் குருவின் ஹரிதாசர்களின்
பாதங்களை வணங்கி - எனக்கு ஹரிபக்தி வருவதற்கு
உதவி செய்யுங்கள் என்று - புரந்தரவிட்டலனை
எந்நேரமும் நினைத்துக் கொள்வது - இதுதான் மடியாகும் (மடி)

***



Wednesday, August 23, 2017

எதைக் கண்டு மயங்கினாய்?


எதைக் கண்டு மயங்கினாய்?


நிந்தா ஸ்துதி: இறைவனின் சிறப்புகளை நேரடியாகப் பாடுவது போல்; அவனை திட்டுவது போல் திட்டி, அவனின் சிறப்புகளைப் பாடுவது - நிந்தா ஸ்துதி எனப்படும். பல தாசர்கள் இந்த மாதிரி பல பாடல்களைப் பாடியுள்ளனர். இன்றைய பாடலும் - புரந்தரதாசர் பாடிய, நிந்தா ஸ்துதியே ஆகும்.


இந்தப் பாடல், இறைவனின் மனைவி இலக்குமி தேவியைப் பார்த்து - நீ ஏன் இந்த இறைவனை - ஸ்ரீமன் நாராயணனை - திருமணம் செய்து கொண்டாய்? அவனிடம் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது? எனக் கேட்டு - நாராயணனின் பத்து (முக்கிய) அவதாரங்களைப் பற்றியும் பாடுகிறார். அப்படிப் பாடும்போது, அந்த அவதாரங்களைப் பற்றி திட்டுவதைப் போல் சொற்களைப் பயன்படுத்திப் பாடுகிறார்.

அந்தந்த அவதாரங்களின் பெயர்களும் கீழே பொருளை விளக்கும் வரிகளில் கொடுக்கப்பட்டுள்ளன.



***

ஏனு மெச்சிதே ஹெண்ணெ ஏனு மருளாதே

(ஸ்ரீமன் நாராயணனிடத்தில்) எதைக் கண்டு நீ புகழ்ந்தாய் பெண்ணே,
எதனால் மயங்கினாய் (ஏனு)

நோடதி செலுவனிவ னெம்பனே சஞ்சல
மாடதி செலுவ நெம்பனெ பென்னு முகுடு
கூடதந்த ஹல்லு மொளதுத்தத மோரே
பூடகதனதி பாயி தெரெது அஞ்சிபகே (ஏனு)

மத்ஸ்யம் -> பார்ப்பதற்கு அழகாய் இருக்கிறானோ? ஓரிடத்தில் நிற்காமல் ஓடிக்கொண்டிருப்பவன்
கூர்மம் -> பேசும் பேச்சு அழகாய் இருக்கிறதோ? முதுகில் இவ்வளவு பெரிய மேடு இருப்பவன்
வராகம் -> பெரிய பல்லுடன்; முழ நீளத்தில் முகம் கொண்டவன்
நரசிம்மம் -> பயங்கரமான முகத்தைக் காட்டி பயமுறுத்துபவன் (ஏனு)

அணுரூபதவனிவ நிலுவுள்ள நரனல்லா
பனவதரிவவனந்தே கையல்லி கொடலி
மனுஜரனு தாபிட்டு கபிகளனு கூடுவ
மனெமனெயனு பொக்கு கத்து திம்புவகே (ஏனு)

வாமனன் -> ஒரு சமயத்தில் சிறுவன்; ஒரு சமயத்தில் மிகப் பெரியவன்; ஒரு நிலையில் நிற்கும் மானிடன் அல்லவே?
பார்கவ -> வனத்தை வெட்டி அழிக்கப்போவதுபோல் கைகளில் கோடரியுடன் சுற்றுபவன்
ராமன் -> (தன் உதவிக்கு) மனிதர்களை விட்டுவிட்டு, குரங்குகளைக் கூப்பிட்டவன்
கிருஷ்ணன் -> வீடுவீடாகப் போய் திருடித் தின்பவன் (ஏனு)

கம்பீர புருஷனிவ எம்பனே திகம்பர
அம்பரதொளகெ குதுரெயனு குணிஸுவ
அம்புஜாக்‌ஷ ஸ்ரீ புரந்தர விட்டலன
சம்ப்ரமதி நீ மெச்சி மதுவெயாத்யல்லே (ஏனு)

பௌத்த -> கம்பீரமாக இருக்கிறான் என்று சொல்லாமோ? திகம்பரமாக (அம்மணமாக) இருப்பவன்
கல்கி -> வானத்தில் குதிரையுடன் ஏறுபவன்
தாமரைக் கண்ணனான ஸ்ரீ புரந்தரவிட்டலனை
மிகவும் மகிழ்ந்து, காதலித்து நீ திருமணம் செய்துகொண்டாயே (ஏனு)

***

வித்யாபூஷணரின் குரலில் இந்தப் பாடல்:


Tuesday, August 22, 2017

இந்த தற்காலிகமான வாழ்க்கையில்...

இந்த தற்காலிகமான வாழ்க்கையில்...

இந்த வாழ்க்கை தற்காலிகமானது. இதில் கிடைக்கும் சுகங்கள் தற்காலிகமானவை. எப்போது யாருக்கு மரணம் வரும் என்பது யாரும் அறியாதது. அப்படி நிலையில்லாத வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் - என்ன செய்யக்கூடாது என்று புரந்தரதாசர் விளக்குகிறார்.



***

அந்தகன தூதரிகே கிஞ்சித்து தயவில்லா
சிந்தெயனு பிட்டு ஸ்ரீஹரிய நெனெயோ (அந்தகன)

யம தூதர்களுக்கும் கொஞ்சம்கூட ஈவு இரக்கம் கிடையாது
ஆகவே (அவர்களைப் பற்றிய) கவலையைவிட்டு நீ ஸ்ரீஹரியை நினை (அந்தகன)

தினராத்ரி என்னதலெ விஷயலம்படனாகி
சவியூடகள உண்டு ப்ரமிசபேடா
அவன கொந்திவன கொந்தர்த்தவனு களிசுவரெ
யமன தூதரு பருவ ஹொத்த நீனரியே (அந்தகன)

நாள்தோறும் இந்த உலக விஷயங்களில் (சபலப்பட்டு) ஏமாறாமல்
சுவையான உணவினை உண்டு (அனுபவித்து), அதில் மூழ்காதே
அவை (சபலங்கள்) அனைவரையும் கொன்று, அப்படிக் கொல்வதில் ஆனந்தப்படும்
யமதூதர்கள் வரும் வேளை நீ அறியமாட்டாய் (அந்தகன)

ஹொஸ மனெய கட்டிதேனு
க்ருஹ ஷாந்தி மனெயொளகெ
பசிரி ஹெண்டத்தி மகன மதுவே நாளே
ஹசனாகிதே பதுகு சாயலாரெனு எனலு
குசுரிதரியதே பிடரு யமனபடரு (அந்தகன)

புதிய வீடு கட்டியிருக்கிறேன்
அதற்கான கிருகப்பிரவேசம் நாளை
மனைவி கர்ப்பிணி; மகனுக்கு நாளை திருமணம்
இப்போ என் வாழ்க்கை மிகவும் இனிமையாக உள்ளது - நான் சாகவே மாட்டேன்
எதுவும் அறியாத மனிதர் இப்படி சொல்லலாம் - ஆனால் யமதூதர்கள் விடமாட்டார்கள் (அந்தகன)

புத்ர ஹுட்டித திவச ஹாலு ஊடத ஹப்ப
மத்தொப்ப மகன உபநயன நாளே
அர்த்தியாகிதே பதுகு சாயலாரெனு எனலு
ம்ருத்யு ஹெடதலெயெல்லி நகுதிர்பளு (அந்தகன)

இன்று என் மகனின் பிறந்த நாள்; பாயசம் சாப்பிடும் நாள் (பண்டிகை)
இன்னொரு மகனின் உபநயனம் நாளை
வாழ்க்கையில் இன்னும் (அனுபவிக்க வேண்டியது நிறைய) இருக்கிறது - அது வரை நான் சாகமாட்டேன்
சாவின் நிழலில் இப்படி சொல்வதைக் கேட்டு, அவன் (இறைவன் / எமன்) சிரிக்கிறான் (அந்தகன)

அட்டடிகே உணலில்லா இஷ்ட தருஷனவில்லா
கொட்ட சாலவ கேள்வ ஹொத்தனரியே
கத்ளே தும்பித மேலே க்‌ஷணமாத்ர இரலில்லா
அஷ்டரொளு புரந்தரவிட்டல நெனெ மனவே (அந்தகன)

இன்னும் பிடித்த உணவை உண்ணவில்லை; போக நினைத்த ஊருக்குப் போகவில்லை
கொடுத்த கடனை (இந்தப் பிறப்பை) திருப்பிக் கேட்கும் நேரம் எப்போதென்று தெரியாது
(மரணம் என்னும்) இருள் சூழும் நேரத்தில் எதற்கும் நேரம் இருக்காது
அத்தகைய நேரம் வருவதற்குள் புரந்தரவிட்டலனை நினைத்துவிடு மனமே (அந்தகன)

***