Thursday, January 30, 2014

கற்கண்டு சாப்பிடுங்கள் கற்கண்டு!!



கற்கண்டை விட இனிமையானது எது? அந்த கிருஷ்ணனின் நாமம்தான். அதை சொல்லுவதால் நாக்கில், மனதில் எவ்வளவு இனிமை பரவுகிறது என்று சொல்கிறார் புரந்தர தாசர். 

இந்தப் பாடல் முழுக்க கற்கண்டையும், ஸ்ரீ கிருஷ்ணனின் பெயரையும் ஒப்பிட்டு, பின்னதின் இனிமையை அழகாக விவரிக்கிறார். 

கற்கண்டுன்னா எறும்பு வரும், நிறைய இருந்தா திருட்டு போயிடும், சந்தையில் வாங்கலாம், விற்கலாம், வண்டி கட்டி எடுத்துப் போயிடலாம் - ஆனால், கற்கண்டை விட மிகமிக இனிமையானதாக இருந்தாலும், ஸ்ரீகிருஷ்ணனின் நாமத்தை மேற்கண்ட எதாலும் எதுவும் செய்ய முடியாது என்கிறார். 

இன்று புரந்தர தாசரின் புண்ய தினம். அடுத்த சீசனை இந்த அருமையான பாட்டுடன் துவக்குவோம். புரந்தர விட்டலா.... வாங்க கற்கண்டு சாப்பிடலாம்...

கல்லு சக்கரே கொள்ளீரோ நீவெல்லரு
கல்லு சக்கரே கொள்ளீரோ
கல்லு சக்கரே சவி பல்லவரே பல்லரு
புல்ல லோசன ஸ்ரீ கிருஷ்ண நாமவெம்ப (கல்லு)

கற்கண்டு சாப்பிடுங்கள் கற்கண்டு - நீங்க எல்லோரும்
கற்கண்டு சாப்பிடுங்கள் கற்கண்டு
கற்கண்டை சாப்பிட்டவருக்கே தெரியும் (அது எவ்வளவு இனிமையென்று)
மலர்க் கண்களை உடைய ஸ்ரீ கிருஷ்ணனின் பெயர் என்னும் (கற்கண்டு)

எத்து ஹேருகளிந்தா ஹொத்து மாருவதல்லா
ஒத்தொத்தி கோணியளு தும்புவதல்லா
எத்த ஓதரு பாடிகே சுங்க இதக்கில்லா
உத்தம சரக்கிது அதி லாப பருவந்தா... (கல்லு)

எருமைகளால் இதை இழுத்துப் போகமுடியாது
எடுத்துப் போட்டு கோணியில் நிரப்பமுடியாது
எங்கு எடுத்துப் போனாலும் இதற்கு வாடகை, சுங்கம் (வரி) கிடையாது
உத்தமமான சரக்கு (பொருள்) இது, அதிகமான லாபம் தரும் பொருளான (கற்கண்டு)

நஷ்ட பீடுவதல்லா நாத ஹுட்டுவதல்லா
எஷ்டு ஒய்தரு பெலே ரொக்க இதக்கில்லா
கட்டிருவெய திந்து கடிமே ஆகுவதில்லா
பட்டணதொளகே பிரசித்த ஆகிருவந்தா.. (கல்லு)

(இதனால்) நஷ்டமே வராது.. (எவ்வளவு சேர்த்தாலும்) துர்நாற்றம் வராது
(உங்களிடமிருந்து) யாராவ்து எடுத்துப் போனாலும் மதிப்பு குறையாதது
கட்டெறும்பு தின்றாலும் குறையவே குறையாதது
பட்டணத்தில் மிகவும் பிரசித்தமானதாக இருக்கும்... (கற்கண்டு)

சந்தே சந்தேக்கே ஹோகி சிரம படிசுவதல்லா
சந்தே ஒளகேயிட்டு மாருவதல்லா
சந்தத பக்தர நாலகே சவிகொம்ப
காந்த புரந்தர விட்டல நாமவெம்ப.. (கல்லு)

சந்தை சந்தையாக போய் விற்க முடியாதது
சந்தையில் வைத்து வாங்கவும் முடியாதது
எப்போதும் (அவர் பெயர் சொல்லும்) பக்தரின் நாக்கில் இனிமையை தரும்
புரந்தர விட்டலா என்னும் நாமமான ... (கற்கண்டு)

***

இந்தப் பாடலை மிக அருமையாக உணர்ந்து பாடும் வித்யாபூஷணர்.

http://www.youtube.com/watch?v=NGzXqZcJzYk

***