Tuesday, March 6, 2012

எப்போதும் என் இதயத்திலேயே வசிப்பாயாக.

இந்த உடம்பே ஆலயம்; என் இதயமே உன் கோயில்; இங்கேயே இருந்துவிடு. ஆரத்தி எடுத்து, பாட்டு பாடி, உன்னை வணங்கியவாறே இருப்பேன். என்னை விட்டு போய்விடாதே. என்னை காப்பாற்று.


இதைத்தான் ஸ்ரீ விஜயதாசர் இந்த பாடலில் பாடுகிறார்.



***

சதா என்ன ஹ்ருதயத்தல்லி
வாச மாடோ ஸ்ரீ ஹரி (சதா)

எப்போதும் என் இதயத்திலேயே
வசிப்பாயாக, ஸ்ரீ ஹரியே (சதா)

நாதமூர்த்தி நின்ன பாத
மோததிந்தா பஜிசுவே (சதா)

நாத வடிவானவனே, உன் பாதங்களை
மகிழ்ச்சியுடன் (உணர்ச்சி வசப்பட்டு) வணங்குவேன் (சதா)

ஞானவெம்போ நவரத்னத மண்டபத மத்யதல்லி
கானலோலன குள்ளிரிசி த்யானதிந்தா பஜிசுவே (சதா)

அறிவு என்னும் நவரத்தின மண்டபத்தின் நடுவே
பாடல்களின் ரசிகனே உன்னை உள்ளிறுத்தி, த்யானம் செய்து, வணங்குவேன் (சதா)

பக்தி ரசவெம்போ முத்து மாணிக்யத ஹரிவாணதி
முக்தனாக பேகு எந்து முத்தினாரதி எத்துவே (சதா)

முத்து மற்றும் மாணிக்கத்தால் ஆன,
பக்தி என்னும் இந்த கூடையால்,
முக்தி வேண்டும் என்று வேண்டி ஆரத்தி எடுப்பேன் (சதா)

நின்ன நானு பிடுவேனல்லா என்ன நீனு பிடது சல்லா
பன்னக சயன விஜயவிட்டல நின்ன பகுதர கேளோ சொல்லா (சதா)

உன்னை நான் விடப்போவதில்லை; என்னை நீயும் விட்டுவிடாதே ஆதிசேஷன் மேல் சயனித்திருக்கும் விஜயவிட்டலனே,
உன் பக்தர்களின் குரலை கேட்பாயாக (சதா)

***

பீமண்ணர் மிக அற்புதமாக பாடியுள்ள இந்த பாடல்.


***

இதே பாடல் மற்றொரு ராகத்தில்

.

***