Monday, March 11, 2013

ஸ்ரீ ராம ஜெயராம ஜெய ஜெய ராமா.



கேட்டதில் பிடித்தது:
ராம், ராமன் என்கிற பெயர்களை வைத்தால், சொல்லவும்/கூப்பிடவும் மிகவும் எளிது. போகிற வழிக்கு புண்ணியமும் சேரும். சிலருக்கு நாராயணன், லட்சுமி நாராயணன், நரசிம்மன் என்றெல்லாம் பேர் வைக்கிறார்கள். அதை அப்படியே கூப்பிட்டால், ராம நாமத்தைப் போல பலனைப் பெறலாம். ஆனால் கூப்பிடுவதோ, முறையே, நாணா, லச்சு, நர்ஸு என்று கூப்பிடுகிறார்கள். அதுவே ராமன் என்று பெயர் வைத்தால், அதை சுருக்கினாலும் ராம் என்றே ஆகும். ஆகவே, அனைத்து வகையிலும் ராம நாமம் சுலபமானது, சிறந்தது.

***

பார்வதி சிவபெருமானிடம் கேட்கும் கேள்வி:

கேனோபாயேன லகுனா விஷ்ணோர் நாம சஹஸ்ரகம்
பட்யதே பண்டிதைர் நித்யம் ஸ்ரோதும் இச்சாம்யஹம் ப்ரபோ.

இறைவனின் ஆயிரம் நாமங்களை கற்று, மனப்பாடம் செய்து தினம்தோறும் சொல்வது கற்றறிந்த பண்டிதர்களால் மட்டுமே முடியும். அப்படியில்லாதவர்கள் இறைவனை நினைக்க சுலபமான வழி எது?

அதற்கு சிவபெருமான் சொன்னது:

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
சஹஸ்ர நாம தத் துல்யம் ராம நாம வரானனே

’ஸ்ரீராம ராம ராமா’ என்ற அழகான நாமத்தை சொன்னால், 1000 திருநாமங்களை சொன்னதன் பலன் கிடைக்கும்.

***

எந்தவொரு விஷயத்தையும் பெரியவர்கள் சொன்னால், ‘அவரே சொல்லிட்டார்’னு சொல்வதைக் கேட்டிருக்கலாம். அதைப் போல் தாசரும், ராம நாமத்தின் மகிமையை சொல்லும்போது, பரமசிவன் தன் மனதுக்கு இனியவளிடம் சொன்ன மந்திரம் என்று இதன் பெருமையை எடுத்துரைக்கிறார். நாம் சாதாரணமாக அது இது என்று பேசுவதைப் போல், அந்த மந்திரம், இந்த மந்திரம்னு எதையாவது சொல்லிக்கிட்டிருக்காமல், ‘இந்த’ மந்திரத்தை சொல்லுங்கள் என்கிறார். பாடலையும் அதன் பொருளையும் பாருங்கள். அவ்வப்போது ‘ராம ராம’ என்று சொல்லுங்கள்.

***

ராம மந்தரவ ஜபிஸோ, ஹே மனுஜா
ராம மந்த்ரவ ஜபிஸோ
ஆ மந்த்ர ஈ மந்த்ர மெச்சி கெடலுபேடா
சோம சேகர தன்ன பாமெகே ஹேளித மந்த்ர (ராம)

ராம நாமத்தை ஜபியுங்கள், ஹே மக்களே
அந்த நாமம், இந்த நாமத்தையெல்லாம் பெரிதென்று சொல்லி கெட்டுப் போக வேண்டாம்
அந்த சிவபெருமான் தன் மனதிற்கு இனியவளிடம் (பார்வதியிடம்) சொன்ன நாமம் இதுவே (ராம)

குலஹீனனாதரு கூகி ஜபிஸுவ மந்த்ர
சல பீதியொளு உச்சரிப மந்த்ர
ஹலவு பாபங்கள ஹதகெடிசுவ மந்த்ர
சுலபதிந்தலி ஸ்வர்க சூரெகொம்புவ மந்த்ர (ராம)

அனைவரும் கூடி சொல்லக்கூடிய மந்திரம்
சாலை/தெருக்களில் போகும்போதும் சொல்லக்கூடிய மந்திரம்
எண்ணிலடங்கா பாவங்களை தொலைத்துக் கட்டும் மந்திரம்
சுலபமாக சொர்க்கத்தை அடைய வைக்கும் மந்திரம் (ராம)

மருதாத்மஜ நித்ய ஸ்மரணெ மாடுவ மந்த்ர
சர்வ ரிஷிகளிலி சேரித மந்த்ர
துரித கானனகிது தாவானல மந்த்ர
பொரெது விபீஷணனிகே பட்ட கட்டித மந்த்ர (ராம)

வாயு மைந்தன் (அனுமன்) தினமும் நினைத்து பூஜிக்கும் மந்திரம்
அனைத்து முனிவர்களும் ஜபிக்கும் மந்திரம்
பிரச்னைகளுக்கு விரைவாக தீர்வு அளிக்க உதவும் மந்திரம்
உச்சரித்த விபீஷணனுக்கு ஆட்சியைப் பெற உதவிய மந்திரம் (ராம)

ஞானநிதி நம்ம ஆனந்த தீர்த்தரு 
சானுராகதி நித்ய சேவிப மந்த்ர
பானுகுலாம்புதி சோம நேனிப மந்த்ர
தீன ரக்‌ஷக புரந்தர விட்டலன மந்த்ர (ராம)

ஞான நிதியாகிய நம்ம ஆனந்த தீர்த்தர் (ஸ்ரீ மத்வாச்சாரியர்)
காலை எழுந்ததிலிருந்து முழு நாளும் (எப்போதும்) வணங்கும் மந்திரம்
சூரிய குலத்தில் உதித்த (ராமச்)சந்திரனை நினைக்க வைக்கும் மந்திரம்
(நமது) கஷ்டத்தில் எப்போதும் உதவும் புரந்தரவிட்டலனின் மந்திரம் (ராம)

***


043/365
***


Thursday, March 7, 2013

பிள்ளையார்பட்டி ஹீரோ

விநாயகர். அனைவருக்கும் மிகவும் பிடித்தமானவர். வெறும் மஞ்சளைப் பிடித்துக் கூப்பிட்டாலும் ஓடோடி வருவார் என இவரது பெருமைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.

தாரதம்யம். ஆங்கிலத்தில் Hierarchy. தமிழில் படிநிலை. த்வைதத்தில் கடவுள்கள் ஒரு படிநிலையில் அடுக்கப்பட்டுள்ளனர். (பார்க்க: விக்கி சுட்டி) நிலையின் மேல் ஸ்ரீவிஷ்ணு. அவருக்கு அடுத்து மகாலட்சுமி. பிறகு பிரம்மா. இப்படியான படியில் சற்று கீழே வருபவரே விநாயகர். ஆனாலும் இவர் மேல் புரந்தரதாசர் முதலான அனைத்து தாசர்களும் பற்பல பாடல்களைப் பாடியுள்ளனர்.

விநாயகர் முதல் இந்த படிநிலையில் உள்ள அனைத்து கடவுள்களுமே ஸ்ரீவிஷ்ணுவை வணங்குகின்றனர் என்பதால், தாசர் இத்தகைய பாடல்களின் இறுதியில், புரந்தரவிட்டலனின் பக்தனே, தாசனே என்று விளித்துவிடுவார். இன்றைய பாடலிலும் இதை கவனிக்கவும்.

தாசர் பாடிய இன்னொரு பிள்ளையார் பாடலை ஏற்கனவே பார்த்திருக்கிறோம். சுட்டி: http://dasar-songs.blogspot.in/2012/01/blog-post.html

சரணு சித்தி விநாயகா - மிகவும் புகழ்பெற்ற பாடல்.

சரணு சித்தி விநாயகா சரணு வித்ய பிரதாயகா
சரணு பார்வதி தனைய மூர்த்தி சரணு மூஷிக வாகனா (சரணு)

மோட்சத்தை, கல்வியை கொடுப்பவனே விநாயகா, உன்னை வணங்குகிறேன்
பார்வதியின் மைந்தனே, மூஞ்சுறு வாகனனே, உன்னை வணங்குகிறேன் (சரணு)

நித்தில நேத்ரனே தேவி சுதனே நாகபூஷண பிரியனே
கடிகடாங்கத கோமளாங்கனே கர்ண குண்டல தாரணே (சரணு)

நெற்றியில் கண் இருப்பவரின் (சிவனின்) மனைவியின் புதல்வனே,
பாம்பை ஆபரணமாக அணியப் பிரியப்படுபவனே,
பெரிய பானையைப் போல் வயிறு உடையவனே,
குண்டலங்கள் அணிந்த காது உடையவனே (சரணு)

பட்ட முத்தின பதக ஹாரனே பாஹு ஹஸ்த சதுஸ்தனே
இட்ட தோடுகயா ஹேம கங்கண பாஷாங்குஷ தரனே
குக்ஷி மகா லம்போதரனே இக்ஷு சாப கேளிதனே
பக்ஷி வாகன ஸ்ரீ புரந்தர விட்டலன நிஜ தாசனே (சரணு)

வட்டமான முத்துமாலையை அணிபவனே,
நான்கு கரங்கள் உடையவனே,
தங்க வளையல்கள், ஆபரணங்கள் அணிந்தவனே,
கயிறு, அங்குச ஆயுதங்களை தரித்தவனே,

பெரிய வயிறு உடையவனே,
இக்‌ஷு சாபனை (என்னும் அரக்கனை) வென்றவனே
கருட வாகனான ஸ்ரீ புரந்தர விட்டலனின்
நிஜமான தாசனே (சரணு)

***

MLV அம்மா மிகவும் அருமையாக பாடுவதை பார்க்கலாம். காணொளியில் 50க்கும் மேற்பட்ட பிள்ளையார்களை கண்டு களிக்கலாம்.


***

மிக அழகாகவும் தெளிவாகவும் பாடும் ஒரு குழுவினர்.


***

042/365

Monday, March 4, 2013

இறைவனின் திருவடிக்காக எதையெல்லாம் இழக்க முடியும்?

கனகதாசர். இவரது வரலாற்றை ஏற்கனவே இந்த பதிவில் பார்த்துட்டோம். அதில் இருக்கும் கமெண்ட்ஸ்களையும் பார்த்துடுங்க. அருமையான தகவல்கள் அங்கு இருக்கின்றன.

கனகதாசருடைய பெரும்பாலான பாடல்களில் வைராக்கியம் நிரம்பியிருக்கும். அதாவது, மனைவி, மக்கள், ஊர், உலகம் அனைத்தையும் விட்டுடறேன் - எனக்கு நீதான் வேண்டும். உன் திருவடிகளே போதும். வேறு எதையும் நாம் விரும்ப மாட்டேன். எதுவுமே எனக்கு வேண்டாம். இப்படி.

இன்றைய பாடலும் அப்படியே. இறைவா, உன் திருவடிகளுக்காக, அவற்றை பார்த்துக் கொண்டேயிருப்பதற்காக, நான் எதையும் விடத் தயாராக இருக்கிறேன்னு அவர் சொல்ற பட்டியலைப் பார்த்தால் பெரும் மலைப்பாக இருக்கிறது. இவ்வளவையும் சொல்றவர் அடக்கத்துடன் ‘இவற்றை நான் தற்பெருமைக்காக சொல்லவில்லை. நிஜமாவே (அனுபவத்திலும்) சொல்றேன். உன்னை விட்டு என்னால் ஒரு நொடியும் இருக்கவே முடியாது என்று பாடுகிறார்.

இதில் (பட்டியலில்) இருக்கும் எதுவும் என்னால் முடியாதுன்னு எனக்குத் தெரியும். நீங்க பாத்துட்டு சொல்லுங்க.

***

தொரெது ஜீவிஸபஹுதே ஹரி நின்ன சரணவ
பரிதே மாதேகின்னு அரிது பேளுவேனய்யா (தொரெது)

உன் காலடியை விட்டு (யாராலும்) சந்தோஷமாய் வாழமுடியுமா (முடியாது)
தற்பெருமைக்காக சொல்லவில்லை; அனுபவத்தில் சொல்கிறேன் ஐயா (தொரெது)

தாயி தந்தெயா பிட்டு தபவு மாடலு பஹுது
தாயாதி பந்துகள பிடலு பஹுது
ராய முனிதரே ராஜ்யவ பிடபஹுது
காயஜாபித நின்ன அடிய பிடலாகது (தொரெது)

தந்தை தாயை விட்டுப் போய் தவம் செய்யவும் முடியும்
தாயாதி (பங்காளிகள்) உறவினர்களை உதறவும் முடியும்
அரசன் (நம் மேல்) கோபப்பட்டால், ஊரை விட்டுப் போய்விடவும் முடியும்
என்னை இந்தப் பிறப்பை அளித்தவனே, உன் அடியை விடவே முடியாது (தொரெது)

ஒடலு ஹசிதரே அன்னவ பிடபஹுது
படெத க்‌ஷேத்ரவ பிட்டு ஹொரடலுபஹுது
மடதி மக்கள கடெகே தொளகிஸி பிடபஹுது
கடலொடெய நிம்மடியா களிகே பிடலாகது (தொரெது)

பசித்த வயிறாயினும் உணவை விட்டு (பட்டினியாக) இருக்க முடியும்
இருக்கும் இடத்தை விட்டு கிளம்பவும் முடியும்
மனைவி மக்களை (குடும்பத்தை) விட்டு போகவும் முடியும்
பாற்கடலில் இருப்பவரே, உன் அடியை ஒரு நொடியும் விடமுடியாது (தொரெது)

பிராணவா பரரிகே பேடிதரே கொடபஹுது
மானாபிமானவ தக்கிச பஹுது
ப்ராணதாயகனாத ஆதிகேசவராய
ஜான ஸ்ரீ கிருஷ்ணா நின்னடிய பிடலாகது (தொரெது)

யாராவது (என்) உயிரைக் கேட்டாலும் கொடுக்க முடியும்
(என்) கௌரவம் / சுயமரியாதையை குறைத்துக் கொள்ளவும் முடியும்
எனக்கு உயிரைக் கொடுத்த ஆதிகேசவனே
தலைசிறந்தவனே, கிருஷ்ணனே, உன் அடியை விடவேமுடியாது (தொரெது)

***
***



***

041/365

***