Thursday, September 17, 2015

பிள்ளையாரப்பா!


நம்மம்ம சாரதே!

மிகவும் பிரபலமான இந்தப் பாடலை இயற்றியவர் கனகதாசர். இன்றைய நாயகனான விநாயகரைக் குறித்து பாடியதாகும். அவரின் தாயான பார்வதியிடம், விநாயகரின் பெருமைகளைக் கூறி, இப்படிப்பட்டவர் யார் - அது நம் கணபதிதானே என்று பதில் கூறுவதைப் போல் அமைந்துள்ளது இப்பாடல்.


நம்மம்ம சாரதே உமா மகேஸ்வரி
நிம்மொளகிவன் யாரம்மா (நம்மம்ம)

எங்கள் தாயே சாரதே, உமா மகேஸ்வரி,
உன் உள் உறைபவன் யாரம்மா (நம்மம்ம)

கொம்மகொளன வைரி சுதனாத சொண்டில
ஹெம்மெய கணநாதனே கணம்மா (நம்மம்ம)

பூக்களால் ஆன வில் ஏந்திய மன்மதனின் எதிரியான சிவனின் மகன்,
நம் பெருமைமிகு கணபதிதான் அவன் (நம்மம்ம)

மோரெ கப்பின பாவ மொரத கலத கிவி
கோரெ தாடெயன் யாரம்மா
மூரு கண்ணன சுத முரிதிட்ட சந்திரன
தீரத கணநாதனே அம்மய்யா ( நம்மம்ம)

கருப்பு நிற (யானை போன்ற) முகம், முறத்தைப் போன்ற காதுகள்,
தந்தங்களை உடையவன் யாரம்மா?
மூன்று கண்களை உடையவனின் மகன், சந்திரனை முறித்தவன்,
வீரமான கணபதியே, நம் கணபதியே ( நம்மம்மா)

உட்டதட்டியு பிகிதுட்ட சல்லனதா திட்டதான் இவன் யாரம்மா
பட்டதா ராணி பார்வதியா குமாரனு
ஹொட்டேயா கண நாதனே கணம்மா (நம்மம்மா)

இடுப்பில் வேட்டியை இறுக்கி கட்டியவன், (அவனை வணங்குபவர்களின்)
எதிர்மறை எண்ணங்கள் அனைத்தையும் அகற்றுபவன்,
சிவனின் ராணி பார்வதியின் குமாரன் தொந்தியை உடைய கணபதியே, நம் கணபதியே ( நம்மம்மா)

ராசி வித்யேய பல்ல ரமணி கொம்பலனொல்ல பாஷிக இவன்யாரம்மா
லேசாகி ஜனர சலகுவ காகி நெலெயாதி கேசவ தாச காணே (நம்மம்மா)

அளவில்லா ஞானத்தை உடையவன்
பெண்களின் மேல் மோகம் கொள்ளாதவன்
மக்களின் துன்பங்களைப் போக்கும் காகிநெலெ
ஆதிகேசவனின் தாசன், இந்த கணபதி.. (நம்மம்மா)

***

வித்யாபூஷணரின் குரலில் இந்த அருமையான பாடலைக் கேளுங்கள்.



No comments: