Wednesday, April 20, 2011

சுத்தி சுத்தி குழப்பியடிக்கும் ஒரு கண்ணன் பாட்டு!

ஈதநீக வாசுதேவனு லோகதொடேயா
தாசகொலிது தேரலேறி தேஜி பிடிது நடேசிதாத (ஈதநீக)

பாடல் மற்றும் அதன் விளக்கத்திற்கு கண்ணன் பாடல்களுக்கு செல்லவும்.

http://kannansongs.blogspot.com/2011/04/blog-post_18.html

Thursday, April 14, 2011

ஸ்ரீ ராகவேந்திரைக் குறித்த இன்னொரு பாடல்.

ஸ்ரீ ராகவேந்திரரைக் குறித்து ஹரிதாஸர்கள் பற்பல பாடல்கள் பாடியுள்ளனர். இன்று பார்க்கப் போகும் இந்த பாடலை இயற்றிவர் ஸ்ரீ அபினவ ஜனார்த்தன தாஸர். கிபி1727ம் ஆண்டு அவதரித்த இவர், ஏகப்பட்ட பாடல்களை பாடியுள்ளார். அதில் பல ஸ்ரீ ராகவேந்திரரைக் குறித்தே ஆகும். இந்த தளத்தில் ஸ்ரீ அபினவ ஜனார்த்தன தாஸரின் முதல் பாடல் இதுவாகும்.


***


ஸ்ரீ ராகவேந்திரருக்கு அறிமுகம் தேவையில்லை. துங்கபத்ரா நதிக்கரையில், மந்திராலயத்தில் சமாதி அடைந்திருக்கும் ஸ்ரீ ராகவேந்திரர், பற்பல பேர்களுக்கு கற்பகவிருட்சமாய், காமதேனுவாய், கேட்கும் வரங்களை தவறாது கொடுக்கும் வள்ளலாய் இருக்கிறார்.


இப்போது பாடல்.


***


துங்கா தீரதி நிந்த சுயதிவரன் யாரே பேளம்மையா

சங்கீதப்ரிய மங்கள சுகுணித ரங்க முனிபுலோத்துங்கா கணம்மா

துங்கா நதி தீரத்தில் வீற்றிருக்கும் அந்த முனி யாருன்னு சொல்லம்மா இசையைப் பிடித்தவராய், மங்களகரமாய் நல்ல குணத்துடன் இருக்கும் அந்த முனிவர் யாருன்னு சொல்லம்மா

செல்வ சுமுக பனியல்லி திலக நாமகளு பேளம்மையா

ஜலஜ மணிய கொரளலு துளசி மாலேகளு பேளம்மையா

சுலலித கமண்டல தண்டவன்ன தரிதிஹனே பேளம்மையா

குலஹிரண்யகனல்லி ஜனிசித ப்ரஹ்லாதனு தானில்லிதனம்மா (துங்கா)

அமைதி தவழும் முகத்தில், நெற்றியில் திலகம் இருக்கும் கலகலக்கும் மணிகளையுடைய துளசி மாலைகள் கழுத்தில் இருக்கும் கைகளில் கமண்டலமும், தண்டமும் ஏற்றிருப்பார் ஹிரண்யாசுரனின் குலத்தில் உதித்த பிரகலாதனின் அவதாரமே இவர் (துங்கா)

சுந்தரசரணரவிந்த சுபகுதியலிந்தா பேளம்மையா

வந்திஸி ஸ்துதிசுவ பூசுரரூ பலுவிருந்தா பேளம்மையா

ஜண்ட தளங்க்ரிதியிந்த ஷோபிசுவ ஆனந்தா பேளம்மையா

ஹிந்தே வியாசமுனியெந்தெணிசித கர்மந்திகளரசனதிந்த ரஹிதனே (துங்கா)

அவருடைய அழகான பாதங்களில் மிகவும் பக்தியுடன் வணங்கி, போற்றி, பாடும் மக்கள் அனைவருக்கும் எண்ணிக்கையிலடங்கா ஆனந்தத்தைத் தரும் இவர் முன்னர் வியாச பகவானாய் அவதரித்தவரே, என்று சொல்லம்மா (துங்கா)

அபினவ ஜனார்த்தன விட்டலன தியானிசுவ பேளம்மையா

அபிவந்திபரிகே அகிலார்த்தவ சல்லிசுவ பேளம்மையா

நபமணி யந்ததி பூமியல்லிராஜிசுவ பேளம்மையா

சுபகுண நிதி ஸ்ரீ ராகவேந்திரயதி அபுஜபவண்டதல்லி ப்ரபலகணம்மா (துங்கா)

அபினவ ஜனார்த்தன விட்டலனை தியானிப்பவர்களுக்கு பூஜிப்பவர்களுக்கு உலகத்தில் இருக்கும் சந்தோஷங்கள் அனைத்தும் கிடைக்கும் இந்த பூமியை ஆளும் நற்குணங்களையுடைய ஸ்ரீ ராகவேந்திரர், உலகம் முழுக்க பிரபலமானவரென்று சொல்லம்மா (துங்கா)

***

இந்த பாடலை ஆழ்ந்த பக்தியுடன் பாடும் நம்ம பீமண்ணர்.

***

Sunday, April 10, 2011

ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே

ஒரே சமயத்தில் பல இடங்களில் இருப்பது,

எல்லா குழந்தைகளும் ஒருவராகவே தெரிவது -

இந்த மாயையெல்லாம் இறைவன் எப்போது காட்டுகிறார்?

டக்குன்னு சொல்லிடுவீங்க.

சிறுவனாக மாயைகளை காட்டுவதும்; பின்னாளில் (கீதையை உபதேசித்து) மாயைகளை நீக்குவதும் கிருஷ்ண அவதாரத்தில்தானே. இதைத்தான் நம்ம விசாகா ஹரி எப்படி அருமையா சொல்றாங்கன்னு ஒரு தடவை கேட்டுடுங்க.

http://www.youtube.com/watch?v=eHA9oKVxkFw

நிற்க.

இந்த மாயாஜாலங்களை கிருஷ்ண அவதாரத்துக்கு ரிசர்வ் செய்து வைத்திருந்தாலும், ரொம்ப நாளைக்கு முன், ராமாவதாரத்திலேயே நமக்கு ஒரு ச்சின்ன முன்னோட்டம் கிடைத்து விடுகிறது.

அட, அது எப்படி?

அதுதான் இன்றைய பாடல். ஸ்ரீ புரந்தரதாசருடையது.

***

ராம ராவண யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. இந்திரஜித் மரணமடைந்த தருணத்திற்கு வருவோம். ராவணன் தன்னுடைய core சேனையை யுத்தத்துக்கு அனுப்புகிறான். இந்த சேனையில் இருக்கும் ஒவ்வொருவரும் ராவணன் அளவுக்கு பலம் வாய்ந்தவர்கள். இந்த சேனை நகர்ந்து வரும்போது தூசி பறந்து அந்த இடத்தையே மறைத்ததாம். ஈட்டிகளின் உரசல்கள் காட்டுத்தீ அளவுக்கு தீயை வளர்த்ததாம்.

எண்ணிக்கையில் மிகவும் அதிகமான இந்த ராவண சேனையைக் கண்டு, வானர சேனைகள் பயந்து ஓடின. சுக்ரீவன், நீலன், அங்கதன் ஆகியோர் வானர சேனையை கட்டுப்படுத்த முயற்சி செய்தனர். அவர்களால் முடியவில்லை. மெல்ல மெல்ல ராவண சேனை, வானரர்களை அழித்துக் கொண்டே வந்து, ராமனையும் நெருங்கியது.

தனியொருவனாக ராமன், மிகப்பெரிய ராவண சேனையை எப்படி எதிர்கொள்வான்? அவனால் முடியுமா, முடியாதா என்று மற்றவர்கள் எண்ணிக் கொண்டிருக்க, ராமன் யுத்தத்தை துவக்குகிறான். ராமன் விட்ட அம்புகள் மழை போல் தொடர்ந்து சென்று ராவண சேனைகளை அழிக்க ஆரம்பித்தன. எப்போது அம்பை எடுக்கிறான், எப்போது வில்லில் தொடுக்கிறான், எப்போது அதை விடுவிக்கிறான் என்பதே தெரியாமல் மிகமிக வேகமாக யுத்தம் செய்கிறான் ராமன்.

ஆனாலும், ராவண சேனைகள் மிக அதிகமான எண்ணிக்கையில் இருப்பதால் வேறொரு உபாயம் செய்தே அவர்களை முடிக்க வேண்டும் என்று எண்ணுகிறான். இப்போதுதான், மேலே சொன்ன அந்த 'முன்னோட்டம்' வருகிறது.

பூம்.




திடீரென்று சண்டையிட்டுக் கொண்டிருக்கும் அனைத்து வீரர்களும், மற்றவர்களுக்கு ராமனைப் போலவே காட்சி தருகின்றனர். இங்கே பார்த்தால் ராமன். அங்கே ராமன். யாரைப் பார்த்தாலும் ராமனைப் போலவே தெரிகிறது. யுத்தகளத்தில் இடமே இல்லாமல், எல்லா இடத்திலும் ராமன். திடீரென்று எப்படி இவ்வளவு ராமன் வந்தான் என்று அனைவருக்கும் குழப்பம்.

ராவண சேனைகளுக்கு பயங்கர கோபம். ராமனாக தெரிபவர்களை எல்லாம் கொல்ல ஆரம்பித்தனர். அதாவது தங்கள் சேனையிலிருப்பவர்களையே கொன்றனர். இப்படியே எதிரிகள் தங்களை தாங்களே கொன்று அழிய ஆரம்பித்தனர்.

இந்தப் பக்கம், வானரர்கள். ஒரே ஒரு ராமன் இருந்தாலே அவனுக்கு சேவைகள் செய்து மகிழ்பவர்கள். இப்போது பற்பல ராமன்கள். ஆனந்தம் தாங்கவில்லை அவர்களுக்கு. ஆடுகின்றனர். பாடுகின்றனர். தலைகால் புரியவில்லை. இப்படி அனைத்து ராவண சேனையும் அழிந்தபிறகு, ராமன் இந்த மாயையை நிறுத்தி, மறுபடி ஒருவனாக நின்றான். ராமாயணத்தில் வரும் இந்த யுத்தக் காட்சியை, ஸ்ரீ புரந்தரதாசர் அப்படியே தன எளிமையான கன்னடத்தில் பாடியிருக்கிறார்.





***

அல்லி நோடலு ராம இல்லி நோடலு ராம

எல்லெல்லி நோடிதரல்லி ஸ்ரீ ராம

அங்கு பார்த்தாலும் ராமன் இங்கு பார்த்தாலும் ராமன்

எங்கெங்கு பார்த்தாலும் அங்கு ஸ்ரீ ராமன்

ராவணன மூலபல கண்டு கபிசேனே

ஆவாகலே பெதரி ஓடிதவு

ஈவேளே நரனாகி இரபார தென்தெணிசி

தேவ ராமச்சந்திர ஜகவெல்ல தானாத (அல்லி)

ராவணனின் முக்கிய படையினரின் பலத்தைப் பார்த்த வானர சேனைகள் உடனடியாக அடித்துப் பிடித்து ஓடியது இனிமேல் (சாதாரண) மனிதனாக இருக்கக்கூடாது என்றெண்ணிய ராமன் உலகம் முழுக்க அவனே வியாபித்தான். (பற்பல அவதாரங்கள் எடுத்தான்).

அவனிகே இவ ராம இவனிகே அவ ராம

அவனியோள்ளுபரி ரூப உண்டே

லவ மாத்ரதி அசுர துருவலெல்லரு

அவரவர் ஹோடெதாடி ஹதராகி ஹோதரு (அல்லி)

அவனுக்கு இவன் ராமன் இவனுக்கு அவன் ராமன் உலகத்தில் ராமனைத் தவிர இன்னொரு ரூபமும் உண்டோ இது நடந்த உடனே, அசுரர்களின் பக்கத்தில் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டு வீழ ஆரம்பித்தனர்

ஹனுமதாதி சாது ஜனரு அப்பி கொண்டு

குணிகுனி தாடிதரு ஹருஷ திந்தா

க்ஷண தல்லி புரந்தர விட்டல ராயனு

கொனேகொனேயனு தானொப்பனாகி நிந்தா (அல்லி)


அனுமன் முதலாத வானர சேனைகள் (ஒருவரையொருவர்) கட்டிப் பிடித்துக் கொண்டு குதித்து குதித்து ஆடினர் சந்தோஷத்துடன் உடனே (ஒரு நிமிடத்தில்) புரந்தர விட்டலனான ஸ்ரீ ராமன் தன் அனைத்து ரூபங்களையும் மறைத்துக் கொண்டு ஒருவனாகி நின்றான்.


***


Dr.பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் தன் அருமையான குரலில் இந்த பாடலை பாடியிருக்கிறார்.




**



Dr. நாகவல்லி நாகராஜ் அவர்கள் பாடியது.




***


ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே!

சஹஸ்ர நாம தத்துல்யம் ஸ்ரீ ராம நாம வரானனே!!


***


Wednesday, April 6, 2011

கேசவ முதலான 24 நாமாக்கள் - பகுதி 2 of 2

சென்ற பதிவில் கேசவன் முதலான 24 நாமங்களில், முதல் 12 மட்டும் பார்த்தோம். இந்த பதிவில் மீதம் 12 ஐ பார்ப்போம். அதாவது:


பார்த்தது:


கேசவ நாராயண மாதவ கோவிந்தா விஷ்ணு மதுசூதன


திரிவிக்கிரம வாமன ஸ்ரீதர ரிஷிகேஷ பத்மநாபா தாமோதர


பார்க்கப் போவது:


சங்கர்ஷன வாசுதேவ பிரத்யும்ன அநிருத்த புருஷோத்தமா அதோக்ஷஜா


நரசிம்ஹா அச்யுத ஜனார்த்தன உபேந்திரா ஹரி ஸ்ரீகிருஷ்ணா.


***


இந்த பாடலை கேட்பதற்கு இங்கே செல்லவும்:


http://music.raag.fm/Carnatic_Movies/songs-19128-Udaya_Raaga-Sri_Vidyabhushana


இந்த சுட்டியில் உள்ள பட்டியலில் இரண்டாவது பாடலே நாம் மேலே பார்த்தது. கேட்டு மகிழுங்கள். பாடியவர் வித்யாபூஷணர்.


***


அந்த நாராயணனின் அருமை பெருமைகளை எழுதுவதால் என்ன பயன்? இதற்கு ஸ்ரீ கனகதாசர் அருமையாக ஒரு பயனை சொல்கிறார், இந்த பாடலின் கடைசி பத்தியில்.


யாரொருவர் ஹரியின் பெயர்களை மறக்காமல் கேட்கிறார்களோ, எழுதுகிறார்களோ, காகிநெலே ஆதிகேசவன் அவர்களை கூப்பிட்டு முக்தி கொடுப்பான்.


கூப்பிட்டு கொடுப்பான் என்று சொல்கிறார். இதைவிட பேரானந்தம் வேறு ஏதாவது இருக்கமுடியுமா என்ன?


***


இப்போ பாடலின் தொடர்ச்சி:


பங்கஜாக்‌ஷ நேனு என்னா மந்த புத்தியன்னு பிடிசி கிங்கரன்னா மாடிகொள்ளோ சங்கர்ஷணா!


தாமரைக் கண்ணனே, என் மந்த புத்தியை நீக்கி என்னை உன் வேலையாளாக வைத்துக்கொள் சங்கர்ஷணா.


யேசு ஜன்ம பந்தரேனு தாசனல்லவேனொ நானு காசி மாடதிரு இன்னு வாசுதேவனே!


எவ்வளவு ஜென்மம் எடுத்தாலென்ன, நான் உன் வேலையாள்தானே, என்னை காயப்படுத்தாதே வாசுதேவனே.


புத்தி சூன்யனாகி என்ன பத்த கார்ய குஹகமனவ தித்தி ஹ்ருதய சுத்தி மாடோ ப்ரத்யும்னனே!


ஞானமில்லாமல் செய்த கெட்ட செயல்களினால், என் மனதில் கெட்ட எண்ணங்கள் வந்துவிட்டது. அதை சுத்தப்படுத்து பிரத்யும்னனே.


ஜனனிஜனக நீனே எந்து நெனெவேனய்யா தீனபந்து எனகே முக்தி பாலிசய்யா அனிருத்தனே!


என் தாயே, தந்தையே, கஷ்டப்படுபவர்களுக்கு உதவுபவனே, எனக்கு முக்தியை கொடு அநிருத்தனே.


ஹருஷதிந்தா நின்ன நாமா ஸ்மரிசுவந்தே மாடு நேமா விரிசு சரணதல்லி புருஷோத்தமா!


தூய்மையான மனதுடனும், சந்தோஷத்துடனும் என்றும் உன் பெயரை ஜபித்து உன் காலடியில் நான் இருக்குமாறு செய்வாய் புருஷோத்தமா.


சாதுசங்க கொட்டு நின்ன பாதபஜனெயிட்டு என்ன பேதமாடி நோடதிரோ ஸ்ரீ அதோக்‌ஷஜா!


என்னை வேற்று மனிதராக நினைக்காமல், நல்ல மனிதர்களின் நட்பைத் தருவாய், உனக்கு சேவை செய்யும் பாக்கியத்தை தருவாய் அதோக்ஷஜனே.


சாரு சரண தோரி எனகே பாருகாணிசய்யா கொனேகே பார ஹகுதிருவே நினகே நாரசிம்ஹனே!


உன் காலடியை காட்டி எனக்கு, கடைசியில் முக்தியை கொடுப்பாய், உன்னையே நம்பியிருக்கிறேன் நாரசிம்ஹனே.


சஞ்சிதார்த்த பாபகளனு கிஞ்சிதாத பீடேகளனு முஞ்சிதவாகி களேது பொரெயோ ஸ்வாமி அச்சுதா!


சென்ற ஜென்மங்களில் சேர்ந்துவிட்ட பாவங்களையும், மீதமிருக்கும் கஷ்டங்களையும் களைந்து என்னை நீயே காப்பாற்ற வேண்டும் அச்சுதனே.


ஞான பக்தி கொட்டு நின்னா த்யானதல்லி இட்டு சதா ஹீனபுத்தி பிடிசு முன்ன ஸ்ரீ ஜனார்த்தனா!


ஞானத்தையும் பக்தியையும் கொடுத்து, உன்னைப் பற்றிய தியானத்திலேயே என்னை இருக்கச் செய்து, என் மனதில் இருக்கும் கெட்ட எண்ணங்களை விலக்கிடுவாய் ஸ்ரீ ஜனார்தனா.


ஜபதபானுஷ்டான வில்லதே குபதாகமியாத என்ன க்ருபேயமாடி க்‌ஷமிசபேகு உபேந்திரனே!


ஜபங்கள், தபங்கள் எதுவும் செய்யாது, கெட்ட வழியில் சென்ற என்னை தயவு செய்து மன்னித்து அருளவேண்டும் ஸ்ரீ உபேந்த்ரனே.


மொரெய இடுவெனய்யா நினகே ஷரதி சயன சுபமதிய இரிசு பக்தனெந்து பரமபுருஷ ஸ்ரீ ஹரி!


பாற்கடலில் படுத்திருக்கும் பரமபுருஷனே, உன்னை வேண்டிக் கொள்கிறேன், என்னை உன் பக்தனென்று எண்ணிக் கொண்டு, எனக்கு நல்ல புத்தியைக் கொடுப்பாய், ஸ்ரீ ஹரியே.


புட்டிசலேபேட இன்னு புட்டிசிதகே பாலிசென்னா இஷ்டு மாத்ர பேடிகொம்பே ஸ்ரீ கிருஷ்ணனே!


என்னுடைய ஒரே ஒரு வேண்டுகோள் என்னவென்றால், எனக்கு இன்னொரு ஜென்மமே வேண்டாம்; இந்த ஜென்மம் கொடுத்துவிட்டாய், அதனால் நீயே காப்பாற்றியும்விடு, ஸ்ரீ கிருஷ்ணனே.


சத்யவாத நாமகளனு நித்யதல்லி பதிசுவவரா அர்தியிந்தா சலஹுவனு கர்த்ரு கேசவா!


(மேற்கூறிய) கடவுளின் பெயர்களை யார் சொல்கிறார்களோ, சந்தேகமில்லாமல் அவர்களை காப்பான் ஸ்ரீ கேசவன்.


மரேயதலே ஹரியநாம பரெது ஓடி கேளிதவகே கரெது முக்தி கொடுவா நெலெ ஆதிகேசவா!


யாரொருவர் ஹரியின் பெயர்களை மறக்காமல் கேட்கிறார்களோ, எழுதுகிறார்களோ, காகிநெலே ஆதிகேசவன் அவர்களை கூப்பிட்டு முக்தி கொடுப்பான்.


***


Tuesday, April 5, 2011

கேசவ முதலான 24 நாமாக்கள் - பகுதி 1 of 2


விஷ்ணுவின் சஹஸ்ர நாமத்தில் 24 நாமங்கள் மிக முக்கியமாக கருதப்படுகின்றது. அவை என்ன?


கேசவ நாராயண மாதவ கோவிந்தா விஷ்ணு மதுசூதன



திரிவிக்கிரம வாமன ஸ்ரீதர் ரிஷிகேஷ பத்மநாபா தாமோதர



சங்கர்ஷன வாசுதேவ பிரத்யும்ன அநிருத்த புருஷோத்தமா அதோக்ஷஜா



நரசிம்ஹா அச்யுத ஜனார்த்தன உபேந்திரா ஹரி ஸ்ரீகிருஷ்ணா.


எந்த காரியத்தை செய்வதானாலும், மனத்தூய்மையுடன் கடவுளை வணங்கி செய்தால் அந்த காரியம் சுபமாக முடியும் என்பது நம்பிக்கை. அதற்காகவே பூஜை, சந்தியாவந்தனம் ஆகியவைகளை துவக்கும்போது 'ஆசமனம்' செய்யவேண்டுமென்றும், அப்படி செய்யும்போது மேற்கூறிய கடவுளின் 24 நாமாக்களையும் சொல்ல வேண்டும் என்றும் நிர்ணயித்திருக்கிறார்கள். பொருள் அறிந்தோ அறியாமலோ இந்த நாமாக்களை சொல்வதால் உள்ளே இருக்கும் பாவங்கள் போகும், மோட்சம் கிட்டும் என்பது அஜாமிளன் கதையிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

இந்த நாமாக்களின் மகிமையை நமக்கு தெரிவிக்க வேண்டுமென்று ஸ்ரீ கனகதாஸர் ஒரு பெரிய்ய்ய பாடலை பாடியிருக்கிறார். ஒவ்வொரு நாமாவுக்கும் கடவுளிடம் ஒரு வேண்டுகோள், இரண்டு வரி. வேண்டுகோள்னா உங்களுக்கே தெரிஞ்சிருக்கும் - கிரைண்டர், மிக்சி இதெல்லாம் கிடையாது. அவன் கருணைப் பார்வை மட்டுமே.


மிகப் பெரிய பாடல் ஆகையால், இரண்டு பகுதியா பிரிச்சி போடறேன். இதற்கு சரியான காணொளியும் கிடைக்கலை. வெறும் ஒலிதான். அதை இரண்டு பதிவிலும் இணைத்திருக்கிறேன். கேட்டு ரசிங்க. வித்யாபூஷணரின் குரலில் இந்த மிக மிக அழகான பாடலை கேட்டு மகிழுங்கள்.



***


ஈச நின்ன சரண பஜனே ஆசேயிந்தா மாடிதேனோ தோஷராசி நாச மாடோ ஸ்ரீச கேசவ!

ஈசனே உன் பாதத்தை ஆசையுடன் வணங்கி பஜனை செய்தேன் நான் செய்த பாவத்தை நாசம் செய்வாம் ஸ்ரீ கேசவனே.

சரணு ஹொக்கேனய்யா என்ன மரண சமயதல்லி நின்ன சரண ஸ்மரணே கருணிசய்யா நாராயணா!


உன் பாதத்தை விடமாட்டேன், என்னை மரண சமயத்தில் உந்தன் சரணத்தை நினைக்கும்படி வைப்பாய் நாராயணா.

சோதிசென்ன பவத கலுஷ போதிசய்யா ஞானவெனகே பாதிசுவ யமன பாதே பிடிசு மாதவா!


வாழ்க்கையின் கஷ்டங்களை போக்கி, ஞானத்தை கொடுப்பாய் யமனால் ஏற்படும் துன்பத்திலிருந்து விடுவிப்பாய் மாதவா.


ஹிந்தனேக யோனிகளல்லி பந்து பந்து நொந்தேனய்யா இந்து பவத பந்த பிடிசோ தந்தே கோவிந்தா!


நிறைய பிறவிகள் எடுத்து வந்து நொந்து போயுள்ளேன் இந்த பந்த பாசத்திலிருந்து என்னை விடுவிப்பாய் கோவிந்தா.


ப்ரஷ்டனெனிச பேட கிருஷ்ணா இஷ்டு மாத்ர பேடிகொம்பே சிஷ்டரொடனே இஷ்டு கஷ்ட பிடிசு விஷ்ணுவே!

சுயநலவாதி என்றெண்ணாமல் இது மாத்திரம் செய்துவிடு நல்லவர்களுக்கு கஷ்டத்தை கொடுக்காதே விஷ்ணுவே.


மதனனய்யா நின்ன மஹிமே வதனதல்லி நுடியுவந்தே ஹ்ருதயதொளகே ஹுதுகிசய்யா மதுசூதனா!

மன்மதனின் தந்தையே, உன் மகிமையை என் வாயால் எப்போதும் பாடுவதற்கு இதயத்திலே (உன் மகிமையை) வைத்திருப்பாய் மதுசூதனா.


கவிதுகொண்டு இருவ பாப சவிது போகுவந்தே மாடோ ஜவன பாதேயன்னு பிடிசோ ஸ்ரீ த்ரிவிக்ரம!

என்னை சூழ்ந்திருக்கும் பாபத்தை ஓடஓட விரட்டுவாய் யமனின் செயல் தரும் கஷ்டத்திலிருந்து என்னை காப்பாய் திரிவிக்ரமா.


காமஜனக நின்ன நாமா ப்ரேமதிந்தா பாடுவந்தா நேமவெனகே பாலிசய்யா ஸ்வாமி வாமனா!


மன்மதனின் தந்தையே உன் நாமத்தை ப்ரேமத்துடன் பாடுவதை ஒரு வழக்கமாக வைத்துக்கொள்ள அருள்வாய் வாமனா.


மொதலு நின்ன பாத பூஜே ஒதகுவந்தே மாடோ என்ன ஹ்ருதயல்லி சதன மாடோ முததி ஸ்ரீதரா!

காலையில் (முதல்வேலையாக) உன் பாதபூஜை செய்ய அருள்வாய் என் இதயத்தில் வாசம் செய்வாய் ஸ்ரீதரா.


ஹுசியனாடி ஹொட்டே ஹொரெவ விஷயதல்லி ரசிகனெந்து ஹுசிகே ஹாகதிரோ என்ன ரிஷிகேசனே!

வெறும் பொய்களைச் சொல்லி (சம்பாதித்து) வயிற்றை ரொப்பும் மனிதனென்று எண்ணி என்னை புறக்கணித்துவிடாதே ரிஷிகேசனே.


பித்து பவதனேக ஜனும பத்தனாகி கலுஷதிந்தா கெத்துபோப புத்தி தோரோ பத்மனாபனே!


எல்லா ஜென்மங்களிலும் பாவங்களையே செய்து வந்திருக்கிறேன் - இதை வெல்லும் புத்தியைக் கொடு பத்மநாபனே.


காமக்ரோத பிடிசி நின்ன நாம ஜிஹ்வெயொளகே நுடிசோ ஸ்ரீ மஹானுபாவனாத தாமோதரா!


காம, க்ரோதங்களிலிருந்து விடுவித்து, உன் பெயரையே என் நாவில் இருக்கச் செய்வாய் எல்லோருக்கும் தலைவனான தாமோதரனே.


*****


http://music.raag.fm/Carnatic_Movies/songs-19128-Udaya_Raaga-Sri_Vidyabhushana இந்த சுட்டியில் உள்ள பட்டியலில் இரண்டாவது பாடலே நாம் மேலே பார்த்தது. கேட்டு மகிழுங்கள். பாடியவர் வித்யாபூஷணர்.


***