Wednesday, October 21, 2015

நல்லவங்ககூட சண்டை போடலாமா?

நல்லவங்ககூட சண்டை போடலாமா?

இன்றைய பாடலை எழுதியவர் கனகதாசர். வாழ்க்கையில் பல சமயங்களில், நாம் செய்வது சரியா தவறா என்று தெரியாமலே முழித்திருப்போம். அந்த இடங்களில் என்ன செய்யலாம் என்று தாசர் சொல்கிறார்.

மற்றவர்களைப் புகழ்ந்து பேசி, வெட்டி அரட்டை அடித்து காலத்தைக் கழிப்பதற்கு பதில், ஏதாவது ஒரு காட்டில் போய் தலைமறைவு வாழ்வு வாழலாம் என்கிறார்.





***

அஞ்ஞானிகளகூட அதிக ஸ்னேஹக்கிந்தா
சுஞ்ஞானிகளகூட ஜகளவே லேசு (அஞ்ஞானி)

முட்டாள்களுடன் நட்பு கொண்டாடுவதை விட
ஞானிகளுடன் கருத்து வேறுபாடு கொண்டிருப்பதே மேல் (அஞ்ஞானி)

உம்புடுவதக்கில்லத அரசனோலகக்கிந்தா
தும்பிதூரொளகே திரிதும்புவுதே லேசு
ஹம்பலிஸி ஹாள் ஹரட்டே ஒடயுவுதக்கிந்தா
ஹரி எம்ப தாசர கூட சம்பாஷணெயே லேசு (அஞ்ஞானி)

உடுக்க, உண்ண (இந்த) தேவைகளுக்காக அரசனை (புகழ்ந்து பாடி) அவனுடன் இருப்பதற்கு
மக்கள் நிறைந்த ஊரில் பிச்சை எடுத்துப் பிழைக்கலாம்
வேலையில்லாமல் அரட்டை அடித்துக் கொண்டிருப்பதைவிட
ஹரியின் தாசர்களுடன் பேசிக் கொண்டிருக்கலாம் (அஞ்ஞானி)

ஒடனே ஹங்கிசுவனு கரவ நுங்குதகிந்தா
குடிநீரு குடிதுகொண்டு இருவுதே லேசு
பிடதே பாந்தவரொடனே கடிதாடுவுதக்கிந்தா
அடவியொள் அஞ்ஞாதவாசவே லேசு (அஞ்ஞானி)

செய்யும் உதவிக்கு பிரதிபலன் எதிர்பார்ப்பவரின் கைகளில் சாப்பிடுவதற்கு பதிலாக
குடிநீர் குடித்துக்கொண்டு இருப்பதே மேல்
உறவினர்களுடன் (அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களுடன்) சண்டை சச்சரவுடன் இருப்பதற்கு
காட்டில் அஞ்ஞாதவாசம் (யாருக்கும் தெரியாமல் ஒளிந்து) வாழ்வதே மேல் (அஞ்ஞானி)

மசெயுதிஹ மத்சரத நெரெயொளகே இருவகிந்தா
ஹசனில்லத ஹாளு குடியே லேசு
பிசஜாக்‌ஷ காகிநெலெ ஆதி கேசவ ராயா
வசுமதியொளு நின்ன தாசத்வவே லேசு (அஞ்ஞானி)

பொறாமையுடன் வாழ்பவர் நடுவில் இருப்பதற்கு பதிலாக
(ஆளில்லாத) பாழடைந்த கோயிலில் வசிப்பதே மேல்
தாமரைக் கண்ணனாக காகிநெலெ ஆதிகேசவனே,
நல்ல புத்தியுடன் உன் தாசனாக இருப்பதே மேல் (அஞ்ஞானி)

***





Tuesday, October 20, 2015

தர்மத்தின் வாழ்வுதனை..


தர்மத்தின் வாழ்வுதனை..

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். இறுதியில் தர்மமே வெல்லும்.
இந்த வாக்கியத்தின் பொருளையே இந்த முழுப்பாடலில் சொல்லியிருக்கிறார் புரந்தரதாசர்.

நமக்கு கெட்டது நினைப்பவர்கள், நம் எதிரிகள், இப்படி அனைவருக்கும் நாம் என்ன செய்ய வேண்டும்? பாடலைக் கேட்டு, விளக்கத்தைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள். இப்படியெல்லாம் செய்ய முடியுமா? செய்யவும் வேண்டுமா என்ற கேள்விகளுக்கு பதில்? தாசர் சொன்னபிறகு அதற்கு எதிராக ஏதேனும் சொல்ல முடியுமா? அதனால் அவர் சொன்னதேதான் பதில்.



***

தர்மவே ஜயவெம்ப திவ்ய மந்த்ர
மர்மவனரிது மாடலு பேகு தந்த்ர (தர்மவே)

தர்மம் வெல்லும் - இதுவே உண்மையான மந்திரம் ஆகும்
அது எப்படி என்று தெரிந்து கொள்வது சுலபமல்ல (சில வழிகளைக் கையாள வேண்டும்)

விஷவிக்கிதவகே ஷட்ரசவனுணிசலு பேகு
த்வேஷ மாடிதவன போஷிசலு பேகு
புசியாடி கெடிசுவன ஹாடி ஹரசலு பேகு
மோச மாடுவன ஹெசரு மகனிகிட பேகு (தர்மவே)

விஷம் கொடுத்தவருக்கு அறுசுவை உணவுகளையும் கொடுக்க வேண்டும்
விரோதம் செய்தவனிடம் நட்பு பாராட்ட வேண்டும்
பொய்களைச் சொல்லி (நம்மை) கெடுப்பவனை, பாடிப் புகழ்ந்து பாராட்ட வேண்டும்
மோசம் செய்பவனின் பெயரை நம் வாரிசுக்கு வைக்க வேண்டும் (தர்மவே)

ஹிந்தே நிந்திபரன்னு வந்திசுதலிரபேகு
பந்தனதொளிட்டவர பெரெய பேகு
கொந்த வைரிய மனெகே நடெது ஹோகலு பேகு
குந்தெணிசுவவர கெளெதன மாட பேகு (தர்மவே)

நம் பின் நம்மைப் பற்றி புரளி பேசுபவரை எப்போதும் வணங்கிக் கொண்டிருக்க வேண்டும்
நம்மை கைது செய்ய வைத்தவரை (பிரச்னைகளிலிருந்து) காப்பாற்ற வேண்டும்
எதிரியின் வீட்டுக்கு நடந்து சென்று (அவரிடம்) பேச வேண்டும்
நமக்கு கெட்டது நடக்கவேண்டும் என்று நினைப்பவருக்கு நல்லதே செய்ய வேண்டும் (தர்மவே)

கொண்டைது படியுவர கொண்டாடுதிர பேகு
கண்டு சஹிசதவர கரெய பேகு
புண்டரீகாக்‌ஷ ஸ்ரீ புரந்தர விட்டலன்ன
கொண்டாடி தான் தன்யனாக பேகு (தர்மவே)

நமக்கு துன்பம் கொடுப்பவரை, புகழ்ந்து கொண்டாட வேண்டும்
நம்மைக் கண்டு பொறாமை கொள்பவரை வீட்டுக்குக் கூப்பிட்டு (உபசரிக்க) வேண்டும்
புண்டரிகாட்சனான ஸ்ரீ புரந்தர விட்டலனை
கொண்டாடி, மகிழ்ச்சி பெற வேண்டும் (தர்மவே)


***



***

Monday, October 19, 2015

வழியைக் காட்டு கோபாலா!

ஸ்ரீ வாதிராஜர் எழுதிய பாடல். அவர் எழுதும் பாடல்களில் 'ஸ்ரீ ஹயவதன' என்னும் அவரது முத்திரை காணப்படும். இலக்குமியுடன் கூடிய ஸ்ரீ ஹயவதனன், ஞான பக்தி வைராஞத்தை அளிக்கக்கூடியவனாக இருக்கிறான்.

இந்த தளத்தில் நாம் பார்க்கும் இந்தப் பாடல், ஸ்ரீ வாதிராஜரின் மூன்றாவது பாடல்.



தாரிய தோரோ கோபாலா
வாரிஜனாபஸ்ரீ வைகுண்ட லோலா (தாரிய)

வழியைக் காட்டு கோபாலா
இலக்குமியின் தலைவனே, வைகுண்ட வாசனே (தாரிய)

சிக்கிதே பவ பாஷ தொளகே நான்
லெக்கவில்லத ஜந்துகளிகே
திக்கொப்பரில்லா எனகே, என்னா
திக்கேடிகள களெது கருணிசு எனகே (தாரிய)

வாழ்க்கை என்னும் காட்டில் மாட்டிக் கொண்டேன்
கணக்கற்ற மிருகங்களினால் (காயப் பட்டேன்)
என்னைக் காப்பாற்றுபவர் யாருமில்லை, எந்தன்
கஷ்டங்களை தீர்த்து, எனக்கு கருணை காட்டு (தாரிய)

கஜரக்ஷகனு நீனெந்து தேவா
அஜருத்ராதிகளெந்து
நிஜவாகி பொகளிதரெந்து
சுஜனர நோடய்யா பேடிதே நானெந்து (தாரிய)

கஜேந்திரனைக் காப்பாற்றியவன் நீ என்று
பிரம்மா, சிவன் முதலானோர்
உண்மையிலேயே சொன்னார்கள்  (அப்படிப்பட்ட நீ)
நல்லவர்களை பாருய்யா, உன்னை வேண்டினேன் நான் (தாரிய)

வரத ஸ்ரீ ஹயவதனனே பாரை
கரெதன்ன தாரிய தோரை
பரம பக்தரொளின் யாரை செலுவ
பரபுருஷ நீனல்லதே இன் யாரை (தாரிய)

ஸ்ரீ ஹயவதனனே, இங்கு வாராய்
என்னை அழைத்து, எனக்கு நல்வழி காட்டுவாய்
உந்தன் பக்தனான எனக்கு வேறு யார் உளர்?
சிறந்த தெய்வமான உன்னைத் தவிர இங்கு யாரிடம் போய்க் கேட்பேன்? (தாரிய)

****

வித்யாபூஷணர் குரலில் இந்த அருமையான பாடல்.


***


Thursday, October 15, 2015

தூக்கி விடு அல்லது மூழ்கடித்து விடு

தூக்கி விடு அல்லது மூழ்கடித்து விடு

சம்சார சாகரத்தில் மூழ்கி, என்னென்ன செய்யக் கூடாதோ அதையெல்லாம் செய்துவிட்டு, இறைவனை எள்ளளவும் நினைக்காமல் நேரத்தைக் கழித்தேனே, ஒன்று என்னை கை கொடுத்து தூக்கி விடு அல்லது ஒரேடியாக மூழ்கடித்து விடு என்று தாசர் இறைஞ்சுகிறார்.



தேளிசோ இல்லா முளுகிசோ
காலிகே பித்தேனோ பரமக்ருபாளோ (தேளிசோ)

(என்னை) தூக்கிவிடு அல்லது மூழ்கடி
(உன்) காலில் விழுந்தேன் கருணை கொண்டவனே (தேளிசோ)

சதிசுத தனதாசே எந்தெம்ப மோஹதி
ஹிததிந்த அதினொந்து பெண்டாதேனோ
கதியகொடுவவர காணே மதிய பாலிசோ லக்‌ஷ்மி
பதி நின்ன சரணத ஸ்மரணேயிட்டு எனகே (தேளிசோ)

மனைவி, மக்கள், செல்வம் ஆகியவற்றின் மேல் கொண்ட மோகத்தால்
உழைத்து உடல் நொந்து, துவண்டு போனேன்;
என்னைக் காப்பாற்றுபவர் யாருமில்லை; நல்ல புத்தியைக் கொடு
லக்‌ஷ்மிபதியே, உன் பாதங்களை எப்போதும் நினைக்கும்படி இருக்கச் செய் (தேளிசோ)

ஜரரோக தாரித்ரய கஷ்மலவ எந்தெம்ப
ஷரதியொளகே பித்து முளுகிதேனோ
ஸ்திரவல்ல ஈ தேஹவு நெரெனம்பிதெ நின்ன
கருணா பயவித்து பாலிசோ ஹரியே (தேளிசோ)

ஜுரம், வியாதி, ஏழ்மை, அசுத்தங்கள் நிறைந்த இந்த
(சம்சாரம் என்னும்) கடலில் விழுந்து மூழ்கினேனே
இந்த உடம்பு நிலையானதல்ல; உன்னையே நித்தமும் நம்பினேன்
கருணையும் எனக்கு அபயமளித்து காப்பாற்று ஹரியே (தேளிசோ)

தோஷவுள்ளவ நானு, பாஷெயுள்ளவ நீனு
மோசஹோதேனோ பக்திரசவ பிட்டு
சேஷசயன ஸ்ரீ புரந்தரவிட்டலனே
தாசர சங்கவித்து பாலிசோ ஹரியே (தேளிசோ)

குறைகள் உள்ளவன் நான், வாக்கு தவறாதவன் நீ
பக்தி மார்க்கத்தை விட்டு, மோசம் போனேனே
பாம்புப் படுக்கையைக் கொண்ட புரந்தர விட்டலனே
உன் பக்தர்களின் நட்பைக் கொடுத்து எனக்குக் கருணை காட்டு ஹரியே (தேளிசோ)

***



Wednesday, October 14, 2015

கலைவாணி நின் கருணை..


புரந்தரதாசரின் இன்னொரு அழகான பாடல். பிரம்மனின் மனைவியான சரஸ்வதி தேவியை வணங்கி, அவரை நம் நாக்கில் எப்பொழுதும் இருந்து, நல்ல சொற்களை பேசவைக்குமாறு வேண்டும் பாடல்.



***

பாலிஸம்மா முத்து சாரதே
என்ன நாலிகே மேலே நில்ல பாரதே (பாலிஸெம்ம)

காப்பாற்று அம்மா, என்னை சாரதாதேவி
என் நாக்கின் மேல் எப்பொழுதும் நிற்கக்கூடாதா (பாலிஸெம்ம)

லோல லோசனே தாயி நிருத நம்பிதே நின்ன

கண்களில் எப்பொழுதும் கருணையைக் காட்டுபவளே,
உன்னை எக்கணமும் நம்பினேன் என்னை (பாலிஸெம்ம)

அக்‌ஷராக்‌ஷர விவேகவ நின்ன
குக்‌ஷியொளிரேளு லோகவனு
சாக்‌ஷாத்ரூபதிந்த ஒலிது ரக்‌ஷிசு தாயீ
நீலலோசன தாயே நிருத நம்பிதே நின்ன (பாலிஸெம்ம)

நீ சொல்லும் ஒவ்வொரு சொல்லும், ஞானம் நிறைந்தது
ஈரேழு பதினான்கு உலகமும் உன்னை வணங்குகின்றது
உன் அழகிய ரூபத்தால் எம்மை காப்பாற்று தாயே
அழகான கண்களை உடையவளே, உன்னையே நம்பினேன் என்னை (பாலிஸெம்ம)

ஸ்ருங்காரபுர நெலெவாசினி தேவி சங்கீத கான விலாசினி
மங்களகாத்ரளே பளிரே ப்ரம்மன ராணி
நீலலோசன தாயே நிருத நம்பிதே நின்ன (பாலிஸெம்ம)

அழகான ஊரில் வசிப்பவளே
பாடல்களால் வசீகரிப்பவளே
மங்களகரமானவளே, பிரம்மனின் ராணியே
அழகான கண்களை உடையவளே, உன்னையே நம்பினேன் என்னை (பாலிஸெம்ம)

சர்வாலங்கார தயா மூர்த்தி நின்ன
சரணவ ஸ்துதிசுவே கீர்த்தி
குருமூர்த்தி புரந்தரவிட்டலன்ன ஸ்துதிசுவே
நீலலோசன தாயே நிருத நம்பிதே நின்ன (பாலிஸெம்ம)

சர்வ அலங்காரங்களுடன் இருப்பவளே
கருணா மூர்த்தியே நின் சரணங்களை வணங்கிப் பாடுவேன்
நம் குருமூர்த்தியான புரந்தரவிட்டலனை
வணங்கியவுடன்,
அழகான கண்களை உடையவளே, உன்னையே நம்பினேன் என்னை (பாலிஸெம்ம)

***








Tuesday, October 13, 2015

உன்னைக் கண்டு தன்யனானேனே.. ஸ்ரீனிவாசா..




ஸ்ரீனிவாசனைக் கண்ட புரந்தரதாசர், அந்த ஆனந்தத்தில் பாடிய பாடல். உன்னைப் பார்த்து மிகவும் தன்யனானேன், தரிசனம் தந்ததற்கு நன்றி என்று கூறி, ஸ்ரீனிவாசனின் கருணையை வேண்டும் இன்னொரு மிகவும் புகழ் பெற்ற பாடல்.

நின்ன நோடி தன்யனாதெனோ ஹே ஸ்ரீனிவாசா (நின்ன)

உன்னைக் கண்டு தன்யனானேன் ஸ்ரீனிவாசா (நின்ன)

பக்‌ஷிவாஹன லக்‌ஷ்மி ரமணா லக்‌ஷ பிட்டு நோடோ
பாண்டவ பக்‌ஷ செல்வ தைத்ய சிக்‌ஷ ரக்‌ஷிசென்ன கமலாக்‌ஷ (நின்ன)

கருடனை வாகனமாகக் கொண்டவனே இலக்குமியின் கணவனே
(என்னை) அலட்சியம் செய்யாமல் பாரப்பா
பாண்டவர்களின் பக்கம் நின்றவனே கெட்டவர்களுக்கு பாடம் புகட்டுபவனே
என்னை காப்பாற்று தாமரைக் கண்ணனே (நின்ன)

தேச தேச திருகி நானு ஆச பக்தனாதே ஸ்வாமி
தாசனு நானல்லவே ஜகதீச ஸ்ரீச ஸ்ரீனிவாசா (நின்ன)

ஊர் ஊராக அலைந்து நான் (கண்டதையும் பார்த்து) ஆசைப்பட்டேன் ஸ்வாமி
உன் தாசன் ஆனேனே, ஜகதீசனே, ஸ்ரீனிவாசனே (நின்ன)

கந்து ஜனக கேளோ என்ன அந்தரங்கத ஆசெயன்னு
அந்தரவில்லத பாலிஸு ஸ்ரீகாந்த புரந்தரவிட்டலா (நின்ன)

மன்மதனின் தந்தையே என் ஆசையைக் கேளப்பா
முடிவேயில்லாமல் காப்பாற்று, ஸ்ரீகாந்தனே, புரந்தரவிட்டலனே (நின்ன)

***

இந்தப் பாடல் திரு. மகாராஜபுரம் சந்தானம் அவர்களின் குரலில்:



***







Monday, October 12, 2015

கிருஷ்ணனை கண்டீர்களா?



சற்றே பெரிய பாட்டு. கிருஷ்ணனின் லீலைகள், அந்தக் குழந்தையின் சேட்டைகள் அனைத்தையும் சொல்லணும்னா, எவ்வளவு பத்திகள் பாடினாலும் போதாதே?

குட்டி கிருஷ்ணன் உங்க வீட்டுக்கு வந்தானா என்று கேட்டவாறு அவன் அருமை பெருமைகளைப் பற்றி புரந்தரதாசர் பாடும் பாடல். மிகவும் எளிமையான, மிகச் சுலபமாக புரியும் பாடல்.

இத்துடன் மூன்று ஒளித்துண்டுகள் இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாடகரும் சிற்சில பத்திகளை மட்டுமே பாடியுள்ளனர்.



***

அம்மா நிம்ம மனெகளல்லி
நம்ம ரங்கன காணீரே (அம்மா)

அம்மா உங்க வீட்டில்
நம்ம ரங்கன் வந்தானான்னு பார்த்தீர்களா (அம்மா)

ப்ரம்ம மூர்த்தி நம்ம கிருஷ்ணன
நிம்ம கெரெயல்லி காணீரே (அம்மா)

கிருஷ்ணன், பிரம்மனும் அவனே
உங்க தெருக்களில் வந்தானான்னு பார்த்தீர்களா (அம்மா)

காசி பீதாம்பர கையல்லி கொளலு பூசித
ஸ்ரீ கந்த மையொளகம்மா
லேசாகி துளசிய மாலெய தரிசித
வாசுதேவனு பந்தா கண்டீரேனே (அம்மா)

காசிப் பட்டு, கைகளில் குழல்,
உடம்பில் சந்தனம் பூசியவன்
கழுத்தில் துளசி மாலை அணிந்திருப்பான்
அந்த வாசுதேவன் வந்தானான்னு பார்த்தீர்களா (அம்மா)

கரதல்லி கனகன பெரெளல்லி உங்குர
கொரளல்லி ஹாகித ஹுலியுகுரம்மா
அரளெலெ கனக குண்டல காலந்துகே
உரக சயன பந்தா கண்டீரேனே (அம்மா)

கைகளில் வளையல், விரல்களில் மோதிரம்,
கழுத்தில் புலி நகத்தாலான மாலை
தங்கத் தோடுகள், கொலுசுகள் இவற்றையணிந்து
பாம்புப் படுக்கை கொண்டவன், வந்தானான்னு பார்த்தீர்களா (அம்மா)

குங்கும கஸ்தூரி கரி நாம திட்டி
சங்க சக்ரகள தரிசிஹனம்மா
பினகதிந்தலி கொளலூதுத பாடுத
பங்கஜாக்‌ஷனானு கண்டீரேனே (அம்மா)

குங்குமம், கஸ்தூரி ஆகியவற்றால் நெற்றியில் நாமம் தீட்டி
சங்கு சக்கரங்களுடம் இருப்பானம்மா
தன் குழலை வாசித்தவாறே பாடுவானம்மா
அந்த தாமரைக் கண்ணனை பார்த்தீர்களா (அம்மா)

மாவன மடுஹித ஷகடன கெடஹித
கோவர்தன கிரி எத்திதனம்மா
அவ தாயிகே ஈரேளு ஜக தோரித
காமனய்யா பந்தா கண்டீரேனே (அம்மா)

தன் மாமன் கம்சனைக் கொன்றவன், சகடாசுரனை வென்றவன்
(மக்களைக் காப்பதற்காக) கோவர்த்தன மலையைத் தூக்கியவன்
தன் தாய்க்கு ஈரேழு உலகத்தையும் (தன் வாயில்) காட்டியவன்
மன்மதனின் தந்தை வந்தானா பார்த்தீர்களா (அம்மா)

காலல்லி கிரு கெஜ்ஜெ நீலத பாவுலி
நீலவர்ணனு நாட்யவாடுதல்லி
மெலகி பாயல்லி ஜகவன்னு தோரித
மூருலோகதொடெயன கண்டீரேனே (அம்மா)

கால்களில் சிறு கொலுசு, நீலத்தினாலான காதணிகள்
நடனமாடியவாறு கார்வண்ணன்
தன் வாயில் உலகத்தைக் காட்டியவன்
மூன்று உலகங்களின் தலைவனை பார்த்தீர்களா (அம்மா)

ஹதினாரு சாவிர கோபியர கூடி
சதுராங்க பாகதேயன்ன ஆடுவனம்மா
மதன மோஹன ரூப எடெயல்லி கௌஸ்துப
மதுசூதன பந்தா கண்டீரேனே (அம்மா)

16,000 கோபியர்களுடன் சேர்ந்து
சதுரங்கம் விளையாடுபவன்
அழகான தோற்றம் கொண்டவன், இடையில்
கௌஸ்துபம் (என்கிற நகை) அணிந்தவன்,
மதுசூதனன் வந்தானா பார்த்தீர்களா (அம்மா)

தெட்டெச கோடி தேவருகள ஒடகூடி
ஹத்தவதாரவன்னு ஹெத்திதனம்மா
சத்யபாமப்ரிய ப்ரிய புரந்தரவிட்டலா
நித்யோத்ஸவ பந்தா கண்டீரேனே (அம்மா)

33 கோடி தேவர்கள் கூடியிருப்பார்கள்
இந்த உலகத்தில் 10 அவதாரங்கள் எடுத்தவன்
சத்யபாமையின் ப்ரியமான அந்த புரந்தர விட்டலன்
தினந்தோறும் உத்சவம் செய்து கொள்பவன்
இங்கு வந்தானா பார்த்தீர்களா (அம்மா)

***

Monday, October 5, 2015

உகாபோகங்கள்.

உகாபோகங்கள்.


இவை சாதாரண பாடல்களைப் போல் - சரணம், பல்லவி, அனுபல்லவி - என்ற விதிகளைக் கொண்டிருக்காது. ஒரு பத்தி - குறைந்த பட்சம் நான்கு வரிகளைக் கொண்ட பாடல். மற்ற பாடல்களைப் பாடும் முன்னர் இந்த உகாபோகங்களைப் பாடுவது பாடகர்களின் வழக்கம். ராக ஆலாபனைகள் செய்வதற்கு மிகவும் வசதியானவை இந்த உகாபோகங்கள். அனைத்து தாசர்களும் இவ்வகைப் பாடல்களை இயற்றியுள்ளனர். இன்றைய பாடலை இயற்றியவர் புரந்தரதாசர்.

த்வைத சித்தாந்தத்தில், பல்வேறு கடவுளர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு தனித்தனி பொறுப்புகள் உள்ளன. அவர்களை வழிபட்டால் அந்தந்த பலன்கள் கிடைக்கும். ஆனால், இவர்கள் அனைவர்க்கும் தலைமை ஸ்ரீமன் நாராயணன் ஆவார். அவரே சர்வோத்தமன். அனைத்து கடவுளர்களும், தங்கள் பொறுப்பைச் செய்வதற்கு ஹரியே காரணம். அவரே அவர்களை வழிநடத்துகிறார்.



இந்த கருத்தை வெளிப்படுத்துவதே இன்றைய பாடல்.

***

சதத கணநாத சித்திய நீவ கார்யதலி
மதி ப்ரேரிசுவளு பார்வதி தேவியு

நிரந்தரமானவன், கணங்களின் தலைவன் (கணபதி) நாம் செய்யும் அனைத்து செயல்களிலும் கூட இருந்து அருள் புரிவான்
நல்ல புத்தியைக் கொடுப்பாள் பார்வதி தேவி

முகுதி பதக்கே மனவீவ மஹா ருத்ர தேவரு
ஹரி பகுதி தாயகளு பாரதி தேவி

முக்தி பெறுவதற்கான வழியைக் காட்டுவார் சிவபெருமான்
ஹரி பக்தி செய்வதற்கான வழியைக் காட்டுவாள் பாரதி தேவி

யுக்தி சாஸ்திரகளல்லி வனஜா சம்ப்ஹவனரசி
சத்கர்மகள நடெசி சுஞான மதி இத்து

புத்திகூர்மை, எதையும் அடைவதற்கான செயல்திறனை கொடுப்பாள் தாமரையில் அமர்ந்திருப்பவள் (சரஸ்வதி)
நற்செயல்களை நம்மை செய்ய வைத்து, நல்ல புத்தியைக் கொடுப்பான் (பவமானன்=அனுமான்)

கதி பாலிசுவ நம்ம பவமானனு
சித்ததல்லி ஆனந்த சுகவ நீவளு ரமா

உதவி புரிவான் நம்ம பவமானன் (அனுமான்)
எப்பொழுதும் அமைதியாக இருக்க ஆனந்தத்தைத் தருவான் இலக்குமி தேவி

பகுத ஜனரொடெய நம்ம புரந்தர விட்டலனு
சதத இவரளு நிந்து ஈ க்ருதிய நடெசுவனு

பக்தர்களின் பாதுகாவலன் நம் புரந்தர விட்டலன்
எப்பொழுதும் இந்த எல்லாக் கடவுளர்களின் உள்ளேயும் இருந்து, அவரவர்களின் செயல்களை செய்ய உதவி புரிவான்.

***