Friday, February 20, 2015

ராமா, உன் கால்களைக் காட்டு!

ராமா, உன் கால்களைக் காட்டு!

ஸ்ரீ ரங்கனாதனின் கால்களின் பெருமையைப் பற்றி இந்தப் பாட்டில் பார்த்தோம்.



அப்படிப்பட்ட பாதங்களைப் பற்றி, இவ்வுலகில் வேறொன்றினைப் பற்றியும் கவலைப் படாமல், நமக்கு வேண்டிய அனைத்தையும் அந்த ராமனே பார்த்துக் கொள்வான் என்ற பொருளுடன் ஸ்ரீபாதராயர் பாடும் பாடல் இது.



***

ஸ்ரீராமா நின்ன பாதவ தோரோ
மோஹன்ன குணதாமா நின்ன மோஹத பாதவ (ஸ்ரீராமா)

ஸ்ரீராமா உன் பாதங்களைக் காட்டு
நற்குணங்கள் அனைத்தையும் கொண்டவனே, உன் அழகிய பாதங்களைக் காட்டு (ஸ்ரீராமா)

வரகுணஜால சுரகணலோல 
கருணா பால தருணி பரிபால (ஸ்ரீராமா)

உன்னதமான குணங்களைக் கொண்டவனே, கடவுளர்கள் சூழ் வலம் வருபவனே
கருணையுள்ளம் கொண்டவனே, பெண்ணைக் (திரௌபதி, அகலிகை) காப்பாற்றியவனே (ஸ்ரீராமா)

அஜபவ புஜித கஜவர பாவித 
சுஜனர சேவித த்ரிஜக வந்தித (ஸ்ரீராமா)

அனைவர்களாலும் பூஜிக்கப்படுபவனே; யானைக்கு வரம் கொடுத்து காத்தவனே
மக்களால் வணங்கப்படுபவனே, மூவுலகிலும் கொண்டாடப்படுபவனே

அங்கஜ ஜனக விஹங்க துரங்க
துங்க விக்ரம ஸ்ரீ ரங்க விட்டலா (ஸ்ரீராமா)

கருணையுள்ளம் கொண்டவனே, தந்தையே, சூரியனே, (சூரியனைப் போல்) வேகமாகப் பயணிப்பவனே,
உயர்ந்தவனே வீரனே ஸ்ரீ ரங்க விட்டலா (ஸ்ரீராமா)

****





***

Sri Rama Ninna Padhava Thoro by SriPadaRayaru


Monday, February 16, 2015

சிவாய நம ஓம்!



வைணவ பக்தியை பரப்பிய தாசர்களின் த்வைத சித்தாந்தத்தில், சிவனுக்கும் ஒரு இடம் இருப்பதால், அவரைப் பற்றியும் பற்பல பாடல்களை பாடியிருக்கின்றனர்.

அப்படிப்பட்ட ஒரு பாடலை ஏற்கனவே இங்கே பார்த்திருக்கிறோம். ஹரிதாசர்கள் இயற்றிய சிவன் பாடல்கள், ஸ்லோகங்கள் அனைத்தும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.



இன்றைய பாடலைப் பாடியவர் புரந்தரதாசர். ஆலகால விஷம், மார்க்கண்டேயன், கும்பகோணத்தில் இருக்கும் கும்பேஸ்வரன் ஆகிய சம்பவங்கள் / இடங்களைப் பற்றிப் பாடும் தாசர், சிவனை, விபூதி அணிந்த, ராமரை வணங்கும் ஒரு வைஷ்ணவர் என்கிறார்.

***

சந்திரசூட சிவ சங்கர பார்வதி ரமணனே நினகே நமோ நமோ
சுந்தர மிருகவர பினாக தனுகர கங்கா ஷிர கஜசர்மா அம்பரதர (சந்திரசூட)

சந்திரனை தரித்தவனே, சிவசங்கரனே, பார்வதியின் கணவனே, உன்னை வணங்குகிறேன்
அழகான மிருகங்களை (மான்) உடையவனே, பினாக (என்னும் வில்) ஏந்தியவனே, தலையில் கங்கையைக்
கொண்டவனே, யானையின் தோலை அணிந்தவனே (சந்திரசூட)

நந்தி வாஹனா ஆனந்ததிந்த மூர்ஜகதி மெரெவ நீனே
அந்து அம்ருத கடதிந்த உடிசித விஷ தந்து புஜிசிதவ நீனே
கந்தர்ப்பன க்ரோததிந்த கண் தெரெது கொந்த உக்ர நீனே
இந்திரேச ஸ்ரீ ராமன பாதவ சந்ததி பொகளுவ நீனே (சந்திரசூட)

நந்தி வாகனத்தில் ஆனந்தத்துடன் மூன்று உலகங்களையும் சுற்று வருபவன் நீயே
அன்று அமிர்தத்தை எடுப்பதற்காக கடைந்தபோது வந்த விஷத்தை குடித்தவன் நீயே
காமதேவனை ஆத்திரத்துடன் (மூன்றாவது) கண் திறந்து கொன்ற கோபக்காரன் நீயே
இந்திரன் வணங்கக்கூடிய ஸ்ரீராமனின் பாதங்களை எப்போதும் தொழுபவன் நீயே (சந்திரசூட)

பாலம்ருகண்டன காலனு எளெவாக பாலிசிதவ நீனே
வாலயதி கபால பிடிது பிக்‌ஷா பேடோ திகம்பர நீனே
காலகூடவனு பானமாடித நீலகண்டனு நீனே
ஜாலமாடித கோபாலனெம்ப ஹெண்ணிகே மருளாதவ நீனே (சந்திரசூட)

மிருகண்டு முனிவரின் மகனை (மார்க்கண்டேயன்) எமன் பிடிக்கும்போது காப்பாற்றியவன் நீயே
கைகளில் மண்டையோட்டை பிடித்து, பிக்‌ஷை எடுக்கும் திகம்பரன் (வானத்தை உடையாக உடுத்தியவன்) நீயே
காலகூட விஷத்தை குடித்த நீலகண்டனும் நீயே
அரக்கர்களிடமிருந்து அமிர்தத்தைக் காப்பாற்ற மோகினி வேடமிட்ட விஷ்ணுவின் மேல் மோகம் கொண்டவன் நீயே

(சந்திரசூட)

தரெகே தக்‌ஷிண காவேரி தீர கும்பபுர வாசனு நீனே
கொரளலு ருத்ராக்‌ஷ பஸ்மவு தரிசித பரம வைஷ்ணவ நீனே
கரதல்லி வீணெய நுடிசுவ நம்ம உரகபூஷணனு நீனே
கருடகமன ஸ்ரீ புரந்தர விட்டலகே ப்ராண ப்ரியனு நீனே (சந்திரசூட)

தெற்கில், காவேரி நதிக்கரையில், கும்பேஸ்வரனாக வசிப்பவன் நீயே
கழுத்தில் ருத்ராக்‌ஷம், சாம்பல் அணிந்த பரம வைஷ்ணவன் நீயே
கையில் வீணையை மீட்டுபவன், பாம்பை மாலையாக அணிந்தவன் நீயே
கருட வாகனன் ஸ்ரீ புரந்தர விட்டலனின் உயிருக்கு உயிரான நண்பன் நீயே (சந்திரசூட)

***





****

Chandra Chooda Shiva Sankara by Purandara Dasar.

Friday, February 13, 2015

ஸ்ரீ ராகவேந்திராய நமஹ..

ஸ்ரீ ராகவேந்திராய நமஹ..

ஜகன்னாத தாசர்.


ஹரிதாசர்களில் முக்கியமானவர்களில் இவரும் ஒருவர். 18ம் நூற்றாண்டில், 80 வருடங்கள் வரை வாழ்ந்தவர். தன் முதல் 40வருடங்களுக்குப் பிறகு, விஜயதாசர் மற்றும் கோபாலதாசர்களில் அருள்+ஆசியால் தாச தீட்சை பெற்று ஜகன்னாத தாசர் ஆனவர். பின்னர் பற்பல பாடல்கள் இயற்றி, தன் 80வது வயதில், ஹரிகதாம்ருத சாரம் என்னும் மிகவும் உன்னதமான நூலைப் படைத்தவர்.

இந்த தளத்தில் இது இவரது முதல் பாடலாகும். மந்திராலய பல்கலைக்கழகத்தில் படித்து, ராகவேந்திரரின் தீவிர பக்தரான இவர், ராகவேந்திரர் மேல் பல பாடல்களைப் பாடியுள்ளார். இதுவும் ஒரு புகழ் பெற்ற பாடலே.



***

ரோக ஹரனே க்ருபா சாகர ஸ்ரீகுரு
ராகவேந்திரா பரிபாலிஸோ (ரோக)

நோய்களைத் தீர்ப்பவனே, கருணைக் கடலே,
ஸ்ரீ ராகவேந்திரனே, எனக்கு வழிகாட்டு (காப்பாற்று / ஆட்கொள்வாயாக) (ரோக)

சந்தத துர்மத த்வாந்த திவாகர
சந்த வினுத மாத லாலிஸோ (ரோக)

தடையில்லாமலும் எந்த பாரபட்சம் இல்லாமலும் (அனைவருக்கும் கிடைக்கும்) சூரிய ஒளியைப் போன்றவனே
அனைத்து திசைகளிலும் ஆனந்தத்தை பரப்பும் நல்ல சொற்களையே (எங்களைப்) பேசச் செய் (ரோக)

பாவன காத்ர சுதேவ வரனே தவ
சேவக ஜனரொளகாடிஸோ (ரோக)

தூய்மையான உடலைக் கொண்டவனே, கடவுளர்களே வணங்கத் தக்கவனே
உன் சேவகர்களாகிய (தாசர்களாகிய) எங்களை ஆட்கொள்வாயாக (ரோக)

கன்ன மஹிம ஜகன்னாத விட்டல ப்ரிய
நின்ன ஆராதனே மாடிஸோ (ரோக)

(அனைத்திலும்) ஆழ்ந்த அறிவுடைய, மகிமை பொருந்தியவனே, (இந்த) ஜகன்னாத விட்டலனின் தாசனை,
உன்னை எப்போதும் பூஜிக்கச் செய்வாயாக (ரோக)

***

இந்தப் பாடலை மிகவும் அற்புதமாக, மனமுருகி பாடியிருக்கும் வித்யாபூஷணர்.



***

Roga Harane by Jagannatha Dasar.



Monday, February 9, 2015

ரங்கனாதனின் சின்ன பாதங்கள்..

ரங்கனாதனின் சின்ன பாதங்கள்..

நம் வீட்டுப் பக்கத்தில் இருக்கும் வேங்கடேஸ்வர கோயிலில் ரங்கனாதரும் ஒரு சன்னிதியில் எழுந்தருளியிருக்கிறார். கோயிலின் இணையதளம் இங்கே. ரங்கனாதர் உயரம் 13.5அடி. பிரம்மாண்டமான அழகான உருவம். அவரைப் பார்க்கப் போகும்முன்னர், பிரகாரத்திலேயே, அவர் பாதங்களைப் பார்க்கும் விதமாக சுவற்றில் ஒரு ஜன்னலைப் போன்று ஏற்படுத்தியிருக்கின்றனர். இதன் வழியாக அவர் பாதங்களைப் பார்த்தபிறகு, சன்னிதியில் போய், கால்கள் இருக்கும் திசையிலிருந்து, தலை இருக்கும் திசை நோக்கி நகர்ந்து, அவர் அழகைப் பருகியவாறே, வெளியே வர மனமின்றி வருவோம்.

அந்த ரங்கனாதனின் பாதங்களில் (தங்கக் கவசத்தில்) பல்வேறு சின்னங்கள் இருக்கும். அவை என்னென்ன? உற்றுப் பார்த்தாலும் சரிவர புரியவில்லை. கூகுளில் தேடியதில் கிடைத்தது இந்தப் படம்.



ஆனால், ஸ்ரீபாதராயரின் இந்தப் பாடலைப் பார்த்ததும் அனைத்து சந்தேகங்களும் தீர்ந்தன. அந்தப் பாதங்களில் என்னென்ன இருக்கும்? அவரே சொல்கிறார் பாருங்கள். இவ்வளவு சிறப்பு மிக்க பாதங்களைக் கண்ட ஆனந்தத்தில் உருவாகியது இந்த புகழ்பெற்ற அவரது பாடல்.



***


இக்கோ நோடே ரங்கனாதன சிக்க பாதவ
சிக்கிதே ஸ்ரீ லக்‌ஷ்மி பதிய திவ்ய பாதவ (இக்கோ)

இங்கே பாருங்க ரங்கனாதனின் சின்ன பாதங்களை
(காணக்) கிடைத்தன ஸ்ரீ லக்‌ஷ்மிபதியின் திவ்யமான பாதங்கள் (இக்கோ)

சங்க சக்ர கதா பத்ம அங்கித பாதவ
அங்குச குலிஷ த்வஜா ரேகா அங்கித பாதவ
பங்கஜாசனன ஹ்ருதயதல்லி நலியுவ பாதவ
சங்கட ஹரண வேங்கடேசனன திவ்ய பாதவ (இக்கோ)

சங்க சக்ர கதா பத்ம ஆகியவை இருக்கும் பாதங்கள்
அங்குசம் கோடரி கொடி ரேகைகள் (அல்லது சூரியனின் ரேகைகள்) இருக்கும் பாதங்கள்
தாமரை ஆசனத்தில் வீற்றிருக்கும் லக்‌ஷ்மியின் இதயத்தில் இருக்கும் பாதங்கள்
கஷ்டங்களைப் போக்கும் வேங்கடேசனின் திவ்ய பாதங்களை (இக்கோ)

லலனே லக்‌ஷ்மி அங்கதல்லி நலியுவ பாதவ
ஜலஜாசனன அபீஷ்டவெல்ல சலிசுவ பாதவ
மல்லர கெலிது கம்சாசுரன கொந்த பாதவ
பலிய மெட்டி பாகிரதிய படெத பாதவ (இக்கோ)

(அவன்) மனைவியான லக்‌ஷ்மியின் ஒரு பாகமாக விளங்கும் பாதங்கள்
பிரம்மனின் விருப்பங்களை எல்லாம் நிறைவேற்றும் பாதங்கள்
மல்லர்களை வென்று கம்சனைக் கொன்ற பாதங்கள்
பலிச் சக்கரவர்த்தியை மிதித்து பாகிரதியை அடைந்த பாதங்களை (இக்கோ)

பண்டெய பாலெய மாடித உத்தண்ட பாதவ
பண்டியொளித்த சகடாசுரன ஒத்த பாதவ
அந்தஜ ஹனும புஜதொளுப்புவ அந்தத பாதவ
கண்டேவே ஸ்ரீ ரங்க விட்டலன திவ்ய பாதவ (இக்கோ)

பாறையை ஒரு அழகிய பெண்ணாக மாற்றிய அசாதாரணமான கால்கள்
வண்டியைத் தள்ளி சகடாசுரனைக் கொன்ற பாதங்கள்
அனுமனின் தோள்களில் ஏறும் கால்கள்
கண்டேனே ஸ்ரீ ரங்க விட்டலனின் திவ்யமான கால்களை (இக்கோ)

***

Thursday, February 5, 2015

கோவிந்தன், கிருஷ்ணன் வந்தான்...


இன்னொரு எளிமையான புரந்தர தாசர் பாடல்.

திருவீதி வலம் வந்து, மக்களுக்கு தரிசனம் கொடுக்கும் உற்சவரைப் பார்த்து பாடும்படியாக அமைந்த இந்த புகழ்பெற்ற பாடலை இன்று பார்ப்போம்.




***

பந்த நோடி கோவிந்தா கிருஷ்ணா
பந்த பந்த ஆனந்த தீர்த்த முனீந்த்ர வந்த்ய
ஹரி நந்த முகுந்தனு (பந்த)

கோவிந்தன், கிருஷ்ணன் வந்தான் பாருங்கள்
ஆனந்த தீர்த்தர் (மத்வர்) வணங்கிய ஹரி, முகுந்தன் வந்தான் (பந்த)

சரசிஜாக்‌ஷ தொரெயே சர்வர பொரெவ தயாநிதியே
கரிய வரன சக்ரதி உத்தரிசித
ஹரி நம்ம பாலிப பால்கடலொடெயனு (பந்த)

தாமரைக் கண்ணன், (நம்) தலைவன், அனைவரையும் ஆட்கொள்பவன், கருணைக் கடல்;
கஜேந்திரனை (யானையை) தன் சக்கிரத்தால் காப்பாற்றிய
ஹரி, பாற்கடலில் படுத்திருப்பவன் (பந்த)

இந்திர தேவ வந்த்யா இஷ்டர இந்து காவ்ய நித்யாநந்தா
சந்திர கோடி லாவண்ய முகதலி
சுந்தர அரளெல ஹாரகெ லிந்தலி (பந்த)

இந்திர தேவனால் வணங்கப் பெறுபவன்,
வணங்குபரை உடனே காக்கும் நித்யானந்தன்,
கோடி சந்திரன்(கள்) சேர்ந்தால் கிடைக்கும் ஒளி போன்ற முகத்தை உடையவன்,
அழகான இலைகளால் ஆன மாலைகளை அணிந்தவன் (பந்த)

சரண கமல காந்தே சர்வத மாள்புது தயவந்தே
தர தர ஜனரிகே கரெது வரவனிவ
சரசிஜாக்‌ஷ நம்ம புரந்தர விட்டலனு (பந்த)

ஒளி மிகுந்த சரணகமலத்தைக் கொண்டவன், அனைவரையும் ஆட்கொள்ளும் கருணையைக் கொண்டவன்
அனைத்து மக்களையும் அழைத்து வரங்களை அளிப்பவன்
தாமரைக் கண்ணன், அவனே நம் புரந்தர விட்டலன் (பந்த)

***



Monday, February 2, 2015

ஸ்ரீ குரு ராகவேந்திரரை வணங்குவோம்

இறைவனைப் பற்றி தாசர்கள் பாடிய பாடல்களை பார்த்தோம். பின்னர் வந்த தாசர்கள்,  குருபக்தியை வெளிப்படுத்தும் விதமாக, தங்கள் குருவைக் குறித்தும் பல பாடல்களைப் பாடியுள்ளனர்.

அவற்றுள் ஒருவரான கமலேஷ விட்டல தாசர் என்பவரின் பாடலை இன்று பார்ப்போம். இவர், மந்திராலய மகான், ஸ்ரீ குரு ராகவேந்திரரின் வழி வந்தவர் ஆவார். ஆகவே குருவைக் குறித்து பல அருமையான பாடல்களைப் பாடியுள்ளார்.



இவரது ‘கரெதரே பரபாரதே’ பாடலை ஏற்கனவே இங்கே பார்த்துள்ளோம்.

***

துங்கா தீர விராஜம் பஜமன
ராகவேந்திர குரு ராஜம் பஜமன (துங்கா)

துங்கபத்ரா நதி தீரத்தில் வீற்றிருப்பவரை வணங்குவோம்
ராகவேந்திரரை, குருராஜரை வணங்குவோம் (துங்கா)

மங்கள கர மந்திராலய வாசம்
ஸ்ரிங்காரானன ராஜித ஹாசம்
ராகவேந்திர குரு ராஜம் பஜமன (துங்கா)

மங்களங்களைத் தரக்கூடிய மந்திராலயத்தில் வசிக்கும்
அழகான திருமுகத்தில், வசீகரிக்கும்படியான புன்னகையை உடைய
ராகவேந்திரரை, குருராஜரை வணங்குவோம் (துங்கா)

கரத்ருத தண்ட கமண்டல மாலம்
சுருசிர சேலம் த்ரித மணி மாலம்
ராகவேந்திர குரு ராஜம் பஜமன (துங்கா)

கைகளில் தண்டம், கமண்டலங்களை கொண்டவரான
அழகான, காவி உடை அணிந்தும், கழுத்தில் (துளசி) மணிமாலை அணிந்தவருமாகிய
ராகவேந்திரரை, குருராஜரை வணங்குவோம் (துங்கா)

நிருபம சுந்தர காய சுஷீலம்
வர கமலேஷார்பித நிஜ சகலம்
ராகவேந்திர குரு ராஜம் பஜமன (துங்கா)

ஒப்பில்லாதவரும், தூய்மையான மேனியைக் கொண்டவரான
(அனைத்தையும்) கிருஷ்ணார்ப்பணம் என்று சமர்ப்பிப்பவருமான
ராகவேந்திர குரு ராஜம் பஜமன (துங்கா)

***

இந்தப் பாடலை பாடியுள்ள திரு.மகாராஜபுரம் சந்தானம் அவர்கள்: (Youtubeல் இன்னும் பலர் பாடியதும் கிடைக்கும்).