Tuesday, September 29, 2015

ஹனும பீம மத்வ...



இன்றைய பாடலை எழுதியவர் ஸ்ரீ வியாசராயர். புரந்தரதாசரின் குருவான இவரது இன்னொரு புகழ் பெற்ற பாடல் - கிருஷ்ணா நீ பேகனே பாரோ - அனைவரும் அறிந்ததே.

இன்றைய பாடலில், ஹனும பீம மத்வ அவதாரங்களைப் பற்றி பாடுகிறார்.

***



ஜய வாயு ஹனுமந்தா ஜய பீம பலவந்தா
ஜய பூர்ண மதிவந்தா சலஹோ சந்தா (ஜய)

ஜய வாயு ஹனுமந்தா, ஜய பீம பலவந்தனே
ஜய மத்வ மதிவந்தா, என்னைக் காப்பாற்றுவாய் நன்றாக (ஜய)

அஞ்ஜனெயலி ஹுட்டி அந்து ராமர சேவே
நந்ததிந்தலி மாடி கபி பலவ கூடி
சிந்து லங்கிசி களன வன பங்கிசி சீதே
டுங்குரவ கொட்டே லங்காபுரவ சுட்டே (ஜய)

அஞ்சனாதேவியிடம் பிறந்து, அன்று ராமனின் சேவை
சந்தோஷத்துடன் செய்து, சக-குரங்குகளின் உதவியுடன்
கடல் கடந்து அங்கே வனத்தை அழித்து சீதைக்கு
அடையாள முத்திரை கொட்டாய், இலங்கையை அழித்தாய் (ஜய)

ஹரிகே சூடாமணியனித்து கரிகள கூடி
ஷரடியனு கட்டி அரிபலவ ஹுடிகுட்டி
உரக பந்தனதிந்த கபிவரரு மைமரெயே
வர சஞ்ஜீவனவ தந்து பதுகிசிதே (ஜய)

ஸ்ரீராமனிடம் சூடாமணி கொடுத்து நண்பர்களுடன் சேர்ந்து
(கடல் மேல்) பாலத்தைக் கட்டி, யுத்தத்தின் போது
நாகாயுதத்தால் ராமர் படையினர் மயக்கமடைந்துவிட
சஞ்சீவி மலையை கொண்டு வந்து அனைவரையும் காப்பாற்றினாய் (ஜய)

த்வாபரதலி பாண்டு பூபநாத்மஜனாதே
ஸ்ரீபார்த்தசாரதி ஹரி பஜக நீனாதே
பாபி மாகத பக கீசக ஹிடிம்பகர
கோபதிந்தலி தரிதே மூர்ஜகதி மெரெதே (ஜய)

த்வாபர யுகத்தில் பாண்டுவின் புத்திரனாக அவதரித்தாய்
ஸ்ரீ பார்த்தசாரதி என்கிற ஹரியின் பக்தனாக ஆனாய்
கெட்டவர்களான பகாசுரன், கீசகன், ஹிடிம்பன் ஆகியோரை
கோபத்துடன் கொன்றாய், மூவுலகத்தையும் காத்தாய் (ஜய)

துரதல்லி துர்யோதனன பலவனு தரிதே
அரிது துஷ்ஷாசனன ஒடலன்னு பகெதே
உரவ தப்பிசி கௌரவன்ன தொடெகள முரிதே
ஹரிய கிங்கர துராந்தரகாரு சரியே (ஜய)

யுத்தத்தில் துரியோதனின் பலத்தைக் குறைத்தாய்
துச்சாதனனின் உடலைக் கிழித்தாய்
கௌரவர்களின் தொடைகளைக் கிழித்து அவர்களைக் கொன்றாய்
ஹரியின் எதிரிகளை பந்தாடினாய், அது சரியே (ஜய)

கலியுகதலி கள்ளருடிசி துர்மதகளனு பலிசி
ஸ்ரீஹரிய குணகளனு தூஷிசி
கலியனனு சரிசே குருவாகி அவதரிசி
களர துர்மத முரிதே ஸ்ரீக்ருஷ்ண பரனெந்தே (ஜய)

கலியுகத்தில் பலர் அவரவர் மதங்களைப் பரப்ப வந்தபோது
ஸ்ரீஹரியின் குணங்களைத் திட்டியபோது,
இவைகளை சரிசெய்ய, குருவாக் அவதரித்தாய்
அந்த மதங்களை வீழ்த்தினாய், ஸ்ரீகிருஷ்ணனே தெய்வம் என்றாய் (ஜய)

****


***


1 comment:

maithriim said...

ஹனுமான் மேல் மிக அழகிய பாடல். அருமை :-)

amas32