Saturday, May 28, 2011

வரம் தந்த சாமிக்கு பதமான லாலி!

பகவான் கண்ணனுக்கு சுப்ரபாதம், அவன் குறும்புகள், விளையாட்டுகள், ஆகிய எல்லாவற்றிற்கும் பாடிய ஹரிதாஸர்கள், அந்த கண்ணன் தூங்குவதற்கும் நிறைய லாலி பாடல்கள் பாடியிருக்கின்றனர். 20-25 பத்திகள் கொண்ட லாலி பாட்டுகளும் உண்டு. அவைகளில் மிகவும் புகழ்பெற்றது இந்த ‘தூகிரே ரங்கன’ பாடலாகும்.

ராகவேந்திரர் மடங்களில் மாலை நேர பூஜையில், வேத பாராயணங்கள், ஸ்தோத்திரம், பாட்டு, நைவேத்தியம் எல்லாம் ஆனபிறகு, பகவானை தூங்கச் செய்கிற வேளையும் வரும். ‘லாலி ப்ரியா லாலி சேவா மமதாரயா’ என்று சொன்னவுடன், யாராவது லாலி பாட ஆரம்பிப்பார்கள். பெரும்பாலும் அனைவரும் பாடும் பாடல் இதுவாகத்தான் இருக்கும்.


***

தூகிரே ரங்கன தூகிரே கிருஷ்ணன
தூகிரே அச்சுதானந்தன (தூகிரே)


ரங்கனை, கிருஷ்ணனை, அச்சுதனை, அனந்தனை
தாலாட்டுங்கள் (தூகிரே)

தூகிரே வரகிரியப்பா திம்மப்பன
தூகிரே காவேரி ரங்கய்யன (தூகிரே)

திருப்பதியில் இருக்கும் பாலாஜியை,
காவேரிக்கரையில் இருக்கும் ரங்கனை
தாலாட்டுங்கள் (தூகிரே)

நாகலோகதல்லி நாராயண மலக்யானே
நாககன்னிகெயரு தூகிரே
நாகவேணியரு நேண பிடிதுகொண்டு
பேகனே தொட்டில தூகிரே (தூகிரே)


நாகலோகத்தில் நாராயணன் படுத்திருக்கிறான்
நாககன்னிகைகள் தூங்கச் செய்யுங்கள்
நீளமான கூந்தலையுடைய பெண்கள் தொட்டில்கயிறை பிடித்துக்கொண்டு
வேகமான தொட்டிலை தாலாட்டுங்கள் (தூகிரே)

இந்திரலோகதல்லி உபேந்திர மலக்யானே
இந்துமுகியரல்ல தூகிரே
இந்திரகன்னிகேயரு சந்ததி பந்து
முகுந்தன தொட்டில தூகிரே (தூகிரே)

இந்திரலோகத்தில் உபேந்திரன் படுத்திருக்கிறான்
சந்திரனைப் போல் முகத்தையுடைய பெண்கள் தாலாட்டுங்கள்
இந்திரலோகத்திலுள்ள பெண்கள் உடனே வந்து
முகுந்தனின் தொட்டிலை தாலாட்டுங்கள் (தூகிரே)

ஆலத எலய மேலே ஸ்ரீலோல மலக்யானே
நீலகுந்தலேயரு தூகிரே
வ்யாலஷயன ஹரி மலகு மலகெந்து
பாலகிருஷ்ணய்யன தூகிரே (தூகிரே)

ஆலமர இலையில் லக்‌ஷ்மியின் கணவன் நாராயணன் படுத்திருக்கிறான்
நீளமான கூந்தலையுடைய பெண்கள் தாலாட்டுங்கள்
ஆதிசேஷன் மேல் படுத்திருக்கும் ஹரியை
தூங்கு தூங்கு என்று தாலாட்டுங்கள் (தூகிரே)

சாசிர நாமனே சர்வோத்தமனெந்து
சூசுத்தா தொட்டில தூகிரே
லேசாகி மடுவினோளு சேஷன துளுதிட்ட
தோஷ விதூரன தூகிரே (தூகிரே)

ஆயிரம் நாமங்கள் கொண்டவனே, நீயே அனைவரிலும் உத்தமமானவன் என்றவாறு
ஜபித்துக் கொண்டே தாலாட்டுங்கள்
விஷசர்ப்ப குளத்தில் (காளிந்தி) சர்ப்பத்தின் மேல் குதித்தாடிய
களங்கமில்லாதவனை தாலாட்டுங்கள் (தூகிரே)

அரளேலே மாகாயி கொரள முத்தினஹார
தரளன தொட்டில தூகிரே
ஸ்ரீதேவி ரமணன புரந்தரவிட்டலன
கருணதி மலகெந்து தூகிரே (தூகிரே)

நெற்றியில் ஆபரணமும்; கழுத்தில் முத்து மாலையும் அணிந்துள்ள
குழந்தையின் தொட்டிலை தாலாட்டுங்கள்
ஸ்ரீதேவி ரமணனை புரந்தரவிட்டலனை
தூங்கு என்று வேண்டிக் கொண்டு தாலாட்டுங்கள் (தூகிரே)

***

P.சுசீலாம்மா அருமையாய் பாடியுள்ள இந்த பாடல்:
http://www.raaga.com/player4/?id=171796&mode=100&rand=0.7889869361830932

***

யூட்யூபில் கிடைத்த இன்னொரு காணொளி:



***

No comments: