Monday, October 19, 2015

வழியைக் காட்டு கோபாலா!

ஸ்ரீ வாதிராஜர் எழுதிய பாடல். அவர் எழுதும் பாடல்களில் 'ஸ்ரீ ஹயவதன' என்னும் அவரது முத்திரை காணப்படும். இலக்குமியுடன் கூடிய ஸ்ரீ ஹயவதனன், ஞான பக்தி வைராஞத்தை அளிக்கக்கூடியவனாக இருக்கிறான்.

இந்த தளத்தில் நாம் பார்க்கும் இந்தப் பாடல், ஸ்ரீ வாதிராஜரின் மூன்றாவது பாடல்.



தாரிய தோரோ கோபாலா
வாரிஜனாபஸ்ரீ வைகுண்ட லோலா (தாரிய)

வழியைக் காட்டு கோபாலா
இலக்குமியின் தலைவனே, வைகுண்ட வாசனே (தாரிய)

சிக்கிதே பவ பாஷ தொளகே நான்
லெக்கவில்லத ஜந்துகளிகே
திக்கொப்பரில்லா எனகே, என்னா
திக்கேடிகள களெது கருணிசு எனகே (தாரிய)

வாழ்க்கை என்னும் காட்டில் மாட்டிக் கொண்டேன்
கணக்கற்ற மிருகங்களினால் (காயப் பட்டேன்)
என்னைக் காப்பாற்றுபவர் யாருமில்லை, எந்தன்
கஷ்டங்களை தீர்த்து, எனக்கு கருணை காட்டு (தாரிய)

கஜரக்ஷகனு நீனெந்து தேவா
அஜருத்ராதிகளெந்து
நிஜவாகி பொகளிதரெந்து
சுஜனர நோடய்யா பேடிதே நானெந்து (தாரிய)

கஜேந்திரனைக் காப்பாற்றியவன் நீ என்று
பிரம்மா, சிவன் முதலானோர்
உண்மையிலேயே சொன்னார்கள்  (அப்படிப்பட்ட நீ)
நல்லவர்களை பாருய்யா, உன்னை வேண்டினேன் நான் (தாரிய)

வரத ஸ்ரீ ஹயவதனனே பாரை
கரெதன்ன தாரிய தோரை
பரம பக்தரொளின் யாரை செலுவ
பரபுருஷ நீனல்லதே இன் யாரை (தாரிய)

ஸ்ரீ ஹயவதனனே, இங்கு வாராய்
என்னை அழைத்து, எனக்கு நல்வழி காட்டுவாய்
உந்தன் பக்தனான எனக்கு வேறு யார் உளர்?
சிறந்த தெய்வமான உன்னைத் தவிர இங்கு யாரிடம் போய்க் கேட்பேன்? (தாரிய)

****

வித்யாபூஷணர் குரலில் இந்த அருமையான பாடல்.


***


No comments: