Wednesday, October 14, 2015

கலைவாணி நின் கருணை..


புரந்தரதாசரின் இன்னொரு அழகான பாடல். பிரம்மனின் மனைவியான சரஸ்வதி தேவியை வணங்கி, அவரை நம் நாக்கில் எப்பொழுதும் இருந்து, நல்ல சொற்களை பேசவைக்குமாறு வேண்டும் பாடல்.



***

பாலிஸம்மா முத்து சாரதே
என்ன நாலிகே மேலே நில்ல பாரதே (பாலிஸெம்ம)

காப்பாற்று அம்மா, என்னை சாரதாதேவி
என் நாக்கின் மேல் எப்பொழுதும் நிற்கக்கூடாதா (பாலிஸெம்ம)

லோல லோசனே தாயி நிருத நம்பிதே நின்ன

கண்களில் எப்பொழுதும் கருணையைக் காட்டுபவளே,
உன்னை எக்கணமும் நம்பினேன் என்னை (பாலிஸெம்ம)

அக்‌ஷராக்‌ஷர விவேகவ நின்ன
குக்‌ஷியொளிரேளு லோகவனு
சாக்‌ஷாத்ரூபதிந்த ஒலிது ரக்‌ஷிசு தாயீ
நீலலோசன தாயே நிருத நம்பிதே நின்ன (பாலிஸெம்ம)

நீ சொல்லும் ஒவ்வொரு சொல்லும், ஞானம் நிறைந்தது
ஈரேழு பதினான்கு உலகமும் உன்னை வணங்குகின்றது
உன் அழகிய ரூபத்தால் எம்மை காப்பாற்று தாயே
அழகான கண்களை உடையவளே, உன்னையே நம்பினேன் என்னை (பாலிஸெம்ம)

ஸ்ருங்காரபுர நெலெவாசினி தேவி சங்கீத கான விலாசினி
மங்களகாத்ரளே பளிரே ப்ரம்மன ராணி
நீலலோசன தாயே நிருத நம்பிதே நின்ன (பாலிஸெம்ம)

அழகான ஊரில் வசிப்பவளே
பாடல்களால் வசீகரிப்பவளே
மங்களகரமானவளே, பிரம்மனின் ராணியே
அழகான கண்களை உடையவளே, உன்னையே நம்பினேன் என்னை (பாலிஸெம்ம)

சர்வாலங்கார தயா மூர்த்தி நின்ன
சரணவ ஸ்துதிசுவே கீர்த்தி
குருமூர்த்தி புரந்தரவிட்டலன்ன ஸ்துதிசுவே
நீலலோசன தாயே நிருத நம்பிதே நின்ன (பாலிஸெம்ம)

சர்வ அலங்காரங்களுடன் இருப்பவளே
கருணா மூர்த்தியே நின் சரணங்களை வணங்கிப் பாடுவேன்
நம் குருமூர்த்தியான புரந்தரவிட்டலனை
வணங்கியவுடன்,
அழகான கண்களை உடையவளே, உன்னையே நம்பினேன் என்னை (பாலிஸெம்ம)

***








No comments: