Tuesday, October 13, 2015

உன்னைக் கண்டு தன்யனானேனே.. ஸ்ரீனிவாசா..




ஸ்ரீனிவாசனைக் கண்ட புரந்தரதாசர், அந்த ஆனந்தத்தில் பாடிய பாடல். உன்னைப் பார்த்து மிகவும் தன்யனானேன், தரிசனம் தந்ததற்கு நன்றி என்று கூறி, ஸ்ரீனிவாசனின் கருணையை வேண்டும் இன்னொரு மிகவும் புகழ் பெற்ற பாடல்.

நின்ன நோடி தன்யனாதெனோ ஹே ஸ்ரீனிவாசா (நின்ன)

உன்னைக் கண்டு தன்யனானேன் ஸ்ரீனிவாசா (நின்ன)

பக்‌ஷிவாஹன லக்‌ஷ்மி ரமணா லக்‌ஷ பிட்டு நோடோ
பாண்டவ பக்‌ஷ செல்வ தைத்ய சிக்‌ஷ ரக்‌ஷிசென்ன கமலாக்‌ஷ (நின்ன)

கருடனை வாகனமாகக் கொண்டவனே இலக்குமியின் கணவனே
(என்னை) அலட்சியம் செய்யாமல் பாரப்பா
பாண்டவர்களின் பக்கம் நின்றவனே கெட்டவர்களுக்கு பாடம் புகட்டுபவனே
என்னை காப்பாற்று தாமரைக் கண்ணனே (நின்ன)

தேச தேச திருகி நானு ஆச பக்தனாதே ஸ்வாமி
தாசனு நானல்லவே ஜகதீச ஸ்ரீச ஸ்ரீனிவாசா (நின்ன)

ஊர் ஊராக அலைந்து நான் (கண்டதையும் பார்த்து) ஆசைப்பட்டேன் ஸ்வாமி
உன் தாசன் ஆனேனே, ஜகதீசனே, ஸ்ரீனிவாசனே (நின்ன)

கந்து ஜனக கேளோ என்ன அந்தரங்கத ஆசெயன்னு
அந்தரவில்லத பாலிஸு ஸ்ரீகாந்த புரந்தரவிட்டலா (நின்ன)

மன்மதனின் தந்தையே என் ஆசையைக் கேளப்பா
முடிவேயில்லாமல் காப்பாற்று, ஸ்ரீகாந்தனே, புரந்தரவிட்டலனே (நின்ன)

***

இந்தப் பாடல் திரு. மகாராஜபுரம் சந்தானம் அவர்களின் குரலில்:



***







No comments: