Thursday, October 15, 2015

தூக்கி விடு அல்லது மூழ்கடித்து விடு

தூக்கி விடு அல்லது மூழ்கடித்து விடு

சம்சார சாகரத்தில் மூழ்கி, என்னென்ன செய்யக் கூடாதோ அதையெல்லாம் செய்துவிட்டு, இறைவனை எள்ளளவும் நினைக்காமல் நேரத்தைக் கழித்தேனே, ஒன்று என்னை கை கொடுத்து தூக்கி விடு அல்லது ஒரேடியாக மூழ்கடித்து விடு என்று தாசர் இறைஞ்சுகிறார்.



தேளிசோ இல்லா முளுகிசோ
காலிகே பித்தேனோ பரமக்ருபாளோ (தேளிசோ)

(என்னை) தூக்கிவிடு அல்லது மூழ்கடி
(உன்) காலில் விழுந்தேன் கருணை கொண்டவனே (தேளிசோ)

சதிசுத தனதாசே எந்தெம்ப மோஹதி
ஹிததிந்த அதினொந்து பெண்டாதேனோ
கதியகொடுவவர காணே மதிய பாலிசோ லக்‌ஷ்மி
பதி நின்ன சரணத ஸ்மரணேயிட்டு எனகே (தேளிசோ)

மனைவி, மக்கள், செல்வம் ஆகியவற்றின் மேல் கொண்ட மோகத்தால்
உழைத்து உடல் நொந்து, துவண்டு போனேன்;
என்னைக் காப்பாற்றுபவர் யாருமில்லை; நல்ல புத்தியைக் கொடு
லக்‌ஷ்மிபதியே, உன் பாதங்களை எப்போதும் நினைக்கும்படி இருக்கச் செய் (தேளிசோ)

ஜரரோக தாரித்ரய கஷ்மலவ எந்தெம்ப
ஷரதியொளகே பித்து முளுகிதேனோ
ஸ்திரவல்ல ஈ தேஹவு நெரெனம்பிதெ நின்ன
கருணா பயவித்து பாலிசோ ஹரியே (தேளிசோ)

ஜுரம், வியாதி, ஏழ்மை, அசுத்தங்கள் நிறைந்த இந்த
(சம்சாரம் என்னும்) கடலில் விழுந்து மூழ்கினேனே
இந்த உடம்பு நிலையானதல்ல; உன்னையே நித்தமும் நம்பினேன்
கருணையும் எனக்கு அபயமளித்து காப்பாற்று ஹரியே (தேளிசோ)

தோஷவுள்ளவ நானு, பாஷெயுள்ளவ நீனு
மோசஹோதேனோ பக்திரசவ பிட்டு
சேஷசயன ஸ்ரீ புரந்தரவிட்டலனே
தாசர சங்கவித்து பாலிசோ ஹரியே (தேளிசோ)

குறைகள் உள்ளவன் நான், வாக்கு தவறாதவன் நீ
பக்தி மார்க்கத்தை விட்டு, மோசம் போனேனே
பாம்புப் படுக்கையைக் கொண்ட புரந்தர விட்டலனே
உன் பக்தர்களின் நட்பைக் கொடுத்து எனக்குக் கருணை காட்டு ஹரியே (தேளிசோ)

***



1 comment:

chinnapiyan said...

நன்றி சார் ஒவ்வொன்றும் அருமை . நெறைய மிஸ் பண்ணிட்டேன் போல. அப்புறமா உட்கார்ந்து சாவகாசமா மற்ற பதிவுகளையும் படித்து பார்க்கிறேன்.
புரந்தர தாசரின் "ஜகதோ தாரனா" வை தேடி பார்த்தேன். என் கண்களுக்கு அகப்படவில்லை.
அதை பற்றி எனக்கு லிங்க் அனுப்பவும். வாழ்த்துகள் :))