Saturday, June 18, 2011

வேங்கடரமணனே வாராய்...



புரந்தரதாசருக்கு திருப்பதி வேங்கடரமணன் மேல் தனியான அபிமானம் இருந்தது. அவர் மேல் பற்பல பாடல்கள் பாடியிருக்கிறார். பாலாஜியின் பார்வை / தயை / தரிசனம் வேண்டி, அப்படி தரிசனம் கிடைத்தபிறகு ஆனந்தத்தில் - இப்படி பல சூழ்நிலைகளில் பாடல்கள் இயற்றியுள்ளார்.

அப்படிப்பட்ட ஒரு புகழ்பெற்ற பாடல்தான் இன்று பார்க்க இருப்பது.

வேங்கடரமணனே பாரோ என்னும் இந்த பாடலில், அவரை ஸ்ரீ கிருஷ்ணனாக, குழந்தையாக பாவித்து, கொஞ்சி, முத்தம் கொடுத்து, அவன் லீலைகளை பாடி தரிசனம் தரவேண்டுகிறார்.

***

வேங்கடரமணனே பாரோ
சேஷாசல வாசனே பாரோ (வேங்கட)

வேங்கடரமணனே வாராய்
சேஷாச்சலத்தில் (திருப்பதியில்) வசிப்பவனே வாராய் (வேங்கட)

பங்கஜநாபா பரமபவித்ரா சங்கர மித்ரனே பாரோ (வேங்கட)

தாமரைக் கண்ணனே மிகவும் பவித்ரமானவனே
சங்கரனின் நண்பனே வாராய் (வேங்கட)

முத்து முகத மகுவே நினகே
முத்து கொடுவேனு பாரோ
நிர்தயவேகோ நின்னோளகே நானு
பொந்தித்தேனு பாரோ (வேங்கட)


அழகான முகத்தையுடைய குழந்தையே உனக்கு
முத்தம் கொடுக்கிறேன் வாராய்
ஏன் தயவில்லை; உன்னில் நான்
கரைந்திருக்கிறேன் வாராய் (வேங்கட)

மந்தர கிரியனெத்திதானந்த
மூருத்தியே பாரோ
நந்தன கந்த கோவிந்த முகுந்த
இந்திரேயரசனே பாரோ (வேங்கட)


மந்தர மலையை தூக்கியவனே
எப்போதும் ஆனந்தமாய் இருப்பவனே வாராய்
நந்தனின் மைந்தனே; கோவிந்தனே முகுந்தனே
இந்திரனின் அரசனே வாராய் (வேங்கட)

காமனய்யா கருணாளோ
ஷ்யாமள வர்ணனே பாரோ
கோமளாங்க ஸ்ரீ புரந்தர விட்டலனே
ஸ்வாமி ராயனே பாரோ (வேங்கட)


மன்மதனின் தந்தையே கருணையே உருவானவனே
கறுமை நிறத்தவனே அழகானவனே
ஸ்ரீ புரந்தர விட்டலனே ;
தலைவனே வாராய் (வேங்கட)

***

திரு. ராம் பிரசாத் பாடியிருக்கும் இந்த பாடல், கண்டிப்பா அனைவரின் மனதை கொள்ளை கொள்ளும்.



***

2 comments:

சமுத்ரா said...

You have reminded me of my Grandma
who taught me this song..

குமரன் (Kumaran) said...

சூப்பர் மெட்டு. நன்றி.

இந்திரேயரசனே என்னும் இடத்தில் திருமகள் அரசனே என்ற பொருள் இன்னும் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். திருமகளுக்கு இந்திரா என்றொரு பெயர் உண்டு.