
ஒரு கோவிலைப் பற்றி, அதில் இருக்கும் கடவுளின் சிறப்புகளைப் புகழ்ந்து தாசர்கள் பாடிய பல பாடல்கள் உள்ளன. அது நமக்குத் தெரியும். ஆனால், ஒரே பாடலில் பல க்ஷேத்ரங்களை குறிப்பிட்டு பாடியதோடல்லாமல், இறைவனை குழந்தை, மகன், தந்தை என்று பல்வேறு உறவுமுறைகளை குறிப்பிட்டு பாடியிருக்கும் ஒரு பாடலும் உண்டு.
அதுதான் இன்றைக்கு பார்க்க இருப்பது.
இந்த புகழ் பெற்ற பாடலில் வரும் க்ஷேத்ரங்கள்: ஸ்ரீரங்கம், திருப்பதி, காஞ்சிபுரம், மகிஷபுரி (பேலூர்) மற்றும் உடுப்பி.
***
ரங்க பாரோ பாண்டுரங்க பாரோ
ஸ்ரீரங்க பாரோ நரசிங்க பாரோ (ரங்க)
ரங்கனே வாராய் பாண்டுரங்கனே வாராய்
ஸ்ரீரங்கனே வாராய் நரசிங்கனே வாராய் (ரங்க)
கந்த பாரோ என்ன தந்தே பாரோ
இந்திரா ரமண முகுந்த பாரோ (ரங்க)
குழந்தையே வாராய் என் தந்தையே வாராய்
இலக்குமியின் கணவனே முகுந்தனே வாராய் (ரங்க)
அப்ப பாரோ திம்மப்பா பாரோ
கந்தர்பனய்யனே கஞ்சி வரத பாரோ (ரங்க)
தந்தையே வாராய் திம்மப்பா (வேங்கடவன்) வாராய்
மன்மதனின் தந்தையே காஞ்சி வரதனே வாராய் (ரங்க)
அண்ண பாரோ என்ன சின்ன பாரோ
புண்ணியமூர்த்தி மஹிஷபுரிய சென்ன பாரோ (ரங்க)
தந்தையே வாராய் எந்தன் செல்லமே (தங்கமே) வாராய்
புண்ணியமூர்த்தி மகிஷபுரியின் சென்ன கேசவனே வாராய் (ரங்க)
விஷ்ணு பாரோ உடுப்பி கிருஷ்ண பாரோ
என் இஷ்ட மூர்த்தி புரந்தர விட்டல பாரோ (ரங்க)
விஷ்ணுவே வாராய் உடுப்பி கிருஷ்ணனே வாராய்
என் இஷ்ட தெய்வமே புரந்தர விட்டலனே வாராய் (ரங்க)
***
வித்யாபூஷணர் குரலில் இந்த அருமையான பாடல்.
***
1 comment:
அருமையான தாசர் சேவை செய்து வருகிறீர்கள். இன்று தான் கண்டேன். மிக்க மகிழ்ச்சி.
தொடரட்டும் இந்தப் பணி
வாழ்த்துகள். நன்றி
Post a Comment