Friday, January 30, 2015

தற்காலிகமான இந்த வாழ்க்கையில்..

தற்காலிகமான இந்த வாழ்க்கையில்..

பக்தி மார்க்கத்தை தங்களின் இனிய பாடல்களால் பரப்புவதை முக்கிய வேலையாகக் கொண்டிருந்த ஹரிதாசர்கள், மக்களை நல்வழிப்படுத்த நல்ல அறிவுரைப் பாடல்களையும் பாடியுள்ளனர்.




மனிதராகப் பிறந்த இப்பிறவியானது நிரந்தரமானதல்ல. ஒரு நாள் இறக்கத்தான் போகிறோம். இந்த இடைப்பட்ட சிறு வேளையில், நாம் செய்ய வேண்டிய நல்ல செயல்கள் நிறைய இருக்கின்றன. வறியவர்களுக்கு உதவுங்கள், திருட்டுத்தனம் செய்யாதீர்கள். ஆணவத்தில் ஆடாதீர்கள். அந்த ‘காகிநெலெ’ ஆதிகேசவனை வழிபட்டு, நற்கதி அடையுங்கள் என்று பாடியுள்ளார் கனகதாசர். அந்தப் பாடலைத்தான் இன்று பார்க்கப் போகிறோம்.

***

ஏனு இல்லத இரெடு தினத சம்சார
ஞானதல்லி தான தர்மவ மாடிரய்யா (ஏனு)

ஒன்றுமேயில்லாத இரண்டு நாட்களைக் கொண்ட இந்த வாழ்க்கையில்
தான தர்மங்களைச் செய்யுங்கள் (ஏனு)

ஹசிது பந்தவரிகே அஷனவீயலு பேகு
சிசுவிகே பால் பெண்ணே உணிசபேகு
ஹசனாத பூமியனு தாரெயெரெயலி பேகு
ஹுசி மாடதலே பாஷே நடேசலே பேகு (ஏனு)

பசியுடன் வருபவர்களுக்கு உணவு அளிக்க வேண்டும்
குழந்தைகள் உண்பதற்கு பால் & வெண்ணெய் கொடுக்க வேண்டும்
இந்த வளமான பூமியை தானமாக கொடுக்க வேண்டும்
கொடுத்த வார்த்தை தவறாத வாழ்க்கை வாழ வேண்டும் (ஏனு)

கள்ளதனகள மாடி ஒடல ஹொரெயலு பேடா
குள்ளிர்த சபெயொளகே குடில நடெசலு பேடா
ஹொள்ளேயவ நானெந்து பஹு ஹெம்மெ லிரபேடா
பாள்வே ஸ்திரவெந்து நீ நம்பி கெட பேடா (ஏனு)

(பிறர் பொருட்களைத்) திருடி உடலை வளர்க்காதே
சபைதனில் (சிறப்பான ஏதாவது அமைப்பில்) மோசடிகளைச் செய்ய வேண்டாம்
நான்தான் மிகவும் நல்லவன் என்று கர்வப்பட வேண்டாம்
(நாம்) வாழும் இந்த வாழ்க்கை நிரந்தரமானது என்று நம்பி கெட்டுப் போக வேண்டாம் (ஏனு)

தொரெதனவு பந்தாக கெட்ட நுடியலு பேடா
சிரி பந்த காலக்கே மெரெய பேடா
சிரிவந்தனாதரே நெலெ ஆதிகேசவன
சரண கமலவ சேரி சுகியாகு மனுஜா (ஏனு)

பெரிய பதவிகளில் இருக்கும்போது கொடும் சொற்களைப் பேச வேண்டாம்
செல்வம் வந்து சேரும்போது, பகட்டு வேண்டாம்
அப்படி செல்வந்தன் ஆகும்போது, ஏ மனிதனே,
காகிநெலெ ஆதிகேசவனின் சரணங்களை வந்து அடைந்து ஆனந்தப்படு. (ஏனு)

****







No comments: