Wednesday, April 2, 2014

கண்டேன் மலையப்பனை..



புரந்தரதாசருக்கு 24x7 இறைவனின் சிந்தனையில், அவன் புகழைப் பாடி, அவன் சரிதங்களை பரப்புவதிலேயே கழிந்தது. நினைவில் இருக்கும்போது கோயில்களில் புரந்தரவிட்டலனை தரிசிப்பார். தூங்கும்போது கனவிலும் அவனே வருவான். கனவிலுமா? ஆமாம். அதுவும் எப்படி? நெற்றியில் நாமம்; காது, கை, கால்களில் நகைகள், கலகல என்னும் கொலுசு சத்தம் - இவற்றுடன் அந்த திம்மய்யன் வந்து காட்சியளித்தானாம். வாயுதேவர், பிரம்மாதி தேவர்கள் அனைவரும் அந்த பரம்பொருளுக்கு சேவை செய்ய வரிசையாக நிற்கும் காட்சியும் தெரிந்ததாம். இதை அருமையாக வர்ணிக்கும் இந்த புகழ்பெற்ற பாடலை கேட்டு ரசியுங்கள்.

ஏனு ஹேளலி தங்கி திம்மய்யனா பாதவனு கண்டே
கனசு கண்டேனே மனதல்லி களவளகொந்தேனே (ஏனு)

என்ன சொல்வேன் தங்கையே, திம்மய்யனின் பாதங்களை கண்டேன்
கனவு கண்டேனே மனதினில் கலவரம் கொண்டேனே (ஏனு)

ஹொன்ன கடகவனிட்டு திம்மய்ய தா கொள்வ நாமவனிட்டு
அந்துகே பலுக எனுதா என்ன முந்தே பந்து நிந்திதனல்லே (ஏனு)

தங்க வளையல் அணிந்து திம்மய்யன் அவன் பளிச்சிடும் நாமத்துடன்
காலில் கொலுசு அணிந்து என் முன்னே வந்து நின்றானே (ஏனு)

மகர குண்டலவனிட்டு திம்மய்ய தா கஸ்தூரி திலகவனிட்டு
கெஜ்ஜே கலுக எனுதா ஸ்வாமியு பந்து நிந்திதனல்லே (ஏனு)

காதில் தோடுடனே திம்மய்யன் அவன் நெற்றியில் திலகமிட்டு
கொலுசு சத்தத்துடனே ஸ்வாமி வந்து நின்றானே (ஏனு)

முத்தின பல்லக்கி யதிகளு ஹொத்து நிந்திதனல்லே
சத்ர சாமரதிந்தா ரங்கய்யன உத்சவ மூருத்திய (ஏனு)

முத்தால் வேய்ந்த பல்லக்கை யதிகள் (மத்வ ஆச்சார்யர்கள்) தூக்கி நின்றனரே
குடை விசிறியுடனே ரங்கய்யனின் உத்சவ மூர்த்தியை (தூக்கி நின்றனரே) (ஏனு)

தாமர கமலதல்லி கிருஷ்ணய்ய தா பந்து நிந்திதனல்லே
வாயு பொம்மாதிகளு ரங்கய்யன சேவேய மாடுவரே (ஏனு)

தாமரை மலரினிலே கிருஷ்ணய்யன் அவன் வந்து நின்றானே
வாயு, பிரம்மாதி தேவர்கள் ரங்கய்யனின் சேவையை செய்கின்றனரே (ஏனு)

நவரத்ன கெட்டிசித ஸ்வாமி என்ன ஹ்ருதய மண்டபதல்லி
சர்வாபரணதிந்த புரந்தர விட்டலன கூடிதனே (ஏனு)

நவரத்தினங்களால் கட்டப்பட்ட என் இதயக்கோவிலில்
நகைகளால் அலங்காரம் செய்யப்பட்ட புரந்தரவிட்டலன் வந்து நின்றானே (ஏனு)

***

http://www.youtube.com/watch?v=WuEHBdNVodU

***


No comments: