Wednesday, April 6, 2011

கேசவ முதலான 24 நாமாக்கள் - பகுதி 2 of 2

சென்ற பதிவில் கேசவன் முதலான 24 நாமங்களில், முதல் 12 மட்டும் பார்த்தோம். இந்த பதிவில் மீதம் 12 ஐ பார்ப்போம். அதாவது:


பார்த்தது:


கேசவ நாராயண மாதவ கோவிந்தா விஷ்ணு மதுசூதன


திரிவிக்கிரம வாமன ஸ்ரீதர ரிஷிகேஷ பத்மநாபா தாமோதர


பார்க்கப் போவது:


சங்கர்ஷன வாசுதேவ பிரத்யும்ன அநிருத்த புருஷோத்தமா அதோக்ஷஜா


நரசிம்ஹா அச்யுத ஜனார்த்தன உபேந்திரா ஹரி ஸ்ரீகிருஷ்ணா.


***


இந்த பாடலை கேட்பதற்கு இங்கே செல்லவும்:


http://music.raag.fm/Carnatic_Movies/songs-19128-Udaya_Raaga-Sri_Vidyabhushana


இந்த சுட்டியில் உள்ள பட்டியலில் இரண்டாவது பாடலே நாம் மேலே பார்த்தது. கேட்டு மகிழுங்கள். பாடியவர் வித்யாபூஷணர்.


***


அந்த நாராயணனின் அருமை பெருமைகளை எழுதுவதால் என்ன பயன்? இதற்கு ஸ்ரீ கனகதாசர் அருமையாக ஒரு பயனை சொல்கிறார், இந்த பாடலின் கடைசி பத்தியில்.


யாரொருவர் ஹரியின் பெயர்களை மறக்காமல் கேட்கிறார்களோ, எழுதுகிறார்களோ, காகிநெலே ஆதிகேசவன் அவர்களை கூப்பிட்டு முக்தி கொடுப்பான்.


கூப்பிட்டு கொடுப்பான் என்று சொல்கிறார். இதைவிட பேரானந்தம் வேறு ஏதாவது இருக்கமுடியுமா என்ன?


***


இப்போ பாடலின் தொடர்ச்சி:


பங்கஜாக்‌ஷ நேனு என்னா மந்த புத்தியன்னு பிடிசி கிங்கரன்னா மாடிகொள்ளோ சங்கர்ஷணா!


தாமரைக் கண்ணனே, என் மந்த புத்தியை நீக்கி என்னை உன் வேலையாளாக வைத்துக்கொள் சங்கர்ஷணா.


யேசு ஜன்ம பந்தரேனு தாசனல்லவேனொ நானு காசி மாடதிரு இன்னு வாசுதேவனே!


எவ்வளவு ஜென்மம் எடுத்தாலென்ன, நான் உன் வேலையாள்தானே, என்னை காயப்படுத்தாதே வாசுதேவனே.


புத்தி சூன்யனாகி என்ன பத்த கார்ய குஹகமனவ தித்தி ஹ்ருதய சுத்தி மாடோ ப்ரத்யும்னனே!


ஞானமில்லாமல் செய்த கெட்ட செயல்களினால், என் மனதில் கெட்ட எண்ணங்கள் வந்துவிட்டது. அதை சுத்தப்படுத்து பிரத்யும்னனே.


ஜனனிஜனக நீனே எந்து நெனெவேனய்யா தீனபந்து எனகே முக்தி பாலிசய்யா அனிருத்தனே!


என் தாயே, தந்தையே, கஷ்டப்படுபவர்களுக்கு உதவுபவனே, எனக்கு முக்தியை கொடு அநிருத்தனே.


ஹருஷதிந்தா நின்ன நாமா ஸ்மரிசுவந்தே மாடு நேமா விரிசு சரணதல்லி புருஷோத்தமா!


தூய்மையான மனதுடனும், சந்தோஷத்துடனும் என்றும் உன் பெயரை ஜபித்து உன் காலடியில் நான் இருக்குமாறு செய்வாய் புருஷோத்தமா.


சாதுசங்க கொட்டு நின்ன பாதபஜனெயிட்டு என்ன பேதமாடி நோடதிரோ ஸ்ரீ அதோக்‌ஷஜா!


என்னை வேற்று மனிதராக நினைக்காமல், நல்ல மனிதர்களின் நட்பைத் தருவாய், உனக்கு சேவை செய்யும் பாக்கியத்தை தருவாய் அதோக்ஷஜனே.


சாரு சரண தோரி எனகே பாருகாணிசய்யா கொனேகே பார ஹகுதிருவே நினகே நாரசிம்ஹனே!


உன் காலடியை காட்டி எனக்கு, கடைசியில் முக்தியை கொடுப்பாய், உன்னையே நம்பியிருக்கிறேன் நாரசிம்ஹனே.


சஞ்சிதார்த்த பாபகளனு கிஞ்சிதாத பீடேகளனு முஞ்சிதவாகி களேது பொரெயோ ஸ்வாமி அச்சுதா!


சென்ற ஜென்மங்களில் சேர்ந்துவிட்ட பாவங்களையும், மீதமிருக்கும் கஷ்டங்களையும் களைந்து என்னை நீயே காப்பாற்ற வேண்டும் அச்சுதனே.


ஞான பக்தி கொட்டு நின்னா த்யானதல்லி இட்டு சதா ஹீனபுத்தி பிடிசு முன்ன ஸ்ரீ ஜனார்த்தனா!


ஞானத்தையும் பக்தியையும் கொடுத்து, உன்னைப் பற்றிய தியானத்திலேயே என்னை இருக்கச் செய்து, என் மனதில் இருக்கும் கெட்ட எண்ணங்களை விலக்கிடுவாய் ஸ்ரீ ஜனார்தனா.


ஜபதபானுஷ்டான வில்லதே குபதாகமியாத என்ன க்ருபேயமாடி க்‌ஷமிசபேகு உபேந்திரனே!


ஜபங்கள், தபங்கள் எதுவும் செய்யாது, கெட்ட வழியில் சென்ற என்னை தயவு செய்து மன்னித்து அருளவேண்டும் ஸ்ரீ உபேந்த்ரனே.


மொரெய இடுவெனய்யா நினகே ஷரதி சயன சுபமதிய இரிசு பக்தனெந்து பரமபுருஷ ஸ்ரீ ஹரி!


பாற்கடலில் படுத்திருக்கும் பரமபுருஷனே, உன்னை வேண்டிக் கொள்கிறேன், என்னை உன் பக்தனென்று எண்ணிக் கொண்டு, எனக்கு நல்ல புத்தியைக் கொடுப்பாய், ஸ்ரீ ஹரியே.


புட்டிசலேபேட இன்னு புட்டிசிதகே பாலிசென்னா இஷ்டு மாத்ர பேடிகொம்பே ஸ்ரீ கிருஷ்ணனே!


என்னுடைய ஒரே ஒரு வேண்டுகோள் என்னவென்றால், எனக்கு இன்னொரு ஜென்மமே வேண்டாம்; இந்த ஜென்மம் கொடுத்துவிட்டாய், அதனால் நீயே காப்பாற்றியும்விடு, ஸ்ரீ கிருஷ்ணனே.


சத்யவாத நாமகளனு நித்யதல்லி பதிசுவவரா அர்தியிந்தா சலஹுவனு கர்த்ரு கேசவா!


(மேற்கூறிய) கடவுளின் பெயர்களை யார் சொல்கிறார்களோ, சந்தேகமில்லாமல் அவர்களை காப்பான் ஸ்ரீ கேசவன்.


மரேயதலே ஹரியநாம பரெது ஓடி கேளிதவகே கரெது முக்தி கொடுவா நெலெ ஆதிகேசவா!


யாரொருவர் ஹரியின் பெயர்களை மறக்காமல் கேட்கிறார்களோ, எழுதுகிறார்களோ, காகிநெலே ஆதிகேசவன் அவர்களை கூப்பிட்டு முக்தி கொடுப்பான்.


***


2 comments:

குமரன் (Kumaran) said...

இன்னும் இரவி வரலையா? வந்திருந்தால் ஒவ்வொரு சரணத்திலும் அந்த அந்த நாமம் எப்படி பொருந்தி வருதுன்னு ஒரு பெரிய வியாக்யானம் சொல்லியிருப்பார்! :-)

நாடி நாடி நரசிங்கா! said...

O! My god
superbyaa:)