Thursday, March 31, 2011

ஆண்டவன் காப்பாற்றுவான், இதில் சந்தேகமேயில்லை

இந்த உலகத்தில் எல்லாரும் சந்தோஷமாயிருக்காங்க. என்னை மட்டும் ஏன் இந்த ஆண்டவன் இப்படி படுத்தறான்? ஆண்டவன்னு ஒருவன் இருக்கானா இல்லையான்னே தெரியலியே? - இப்படி புலம்புபவர்கள் நிறைய பேரை பார்த்திருக்கலாம். வாழ்க்கையில் மேல் விரக்தி அடைந்து இப்படி புலம்புபவர்களுக்காக ஸ்ரீ கனகதாஸர் பல பாடல்கள் பாடியிருக்கிறார். அதில் ஒன்று இன்று பார்ப்போம். முன்னாடி பார்த்த நிறைய பாடல்களில் - கடவுள் கஜேந்திர மோட்சம் கொடுத்தான், திரௌபதிக்கு சேலை கொடுத்தான் - இப்படியெல்லாம் உதாரணம் காட்டி, எனக்கும் தயை காட்டு என்று தாஸர்கள் வேண்டுவதை பார்த்தோம். ஆனால் இந்த பாடலில், புராண உதாரணங்கள் எதுவுமில்லாமல், எல்லாம் சமகாலத்தில் நடக்கும் சாதாரண விஷயங்களையே சொல்லி, துயரத்தில் இருக்கும் மனிதனுக்கு தைரியம் கொடுக்கிறார் கனகதாஸர். மனதில் உறுதி வேண்டும், தைரியத்தை இழக்காதே, கண்டிப்பாக ஆண்டவன் உனக்கு கைகொடுப்பான் என்று கூறி தாஸர் பாடும் பாடல்தான் ‘தள்ளனிசதிரு கண்ட்யா’. *** திருவிளையாடல்(?) படத்தில் ஒரு காட்சி வரும். உலகத்தில் இருக்கும் அனைவருக்கும் உணவு வழங்கிவிட்டேன் என்று சிவபெருமான் கூறும்போது, பார்வதிதேவி தான் மறைத்து வைத்திருந்த ஒரு டப்பாவில் உள்ள ஒரு எறும்புக்கு நீங்கள் உணவளிக்க மறந்துவிட்டீர்கள் போலிருக்கிறதே என்று கூறுவார். அப்போது சிவன், அதைத் திறந்து பார் எனவும், அங்கே பார்த்தால், அந்த எறும்புக்கு அருகில் அதற்கான உணவு இருக்கும். அகில உலகத்திற்கும் படியளப்பவன் அந்த பரம்பொருளே என்று கூறும் அந்த காட்சியின் சாரத்தையே ஸ்ரீகனகதாஸரும் இந்த பாடலில் பாடுகிறார். *** தள்ளனிசதிரு கண்ட்யா தாளு மனவே எல்லரனு சலஹுவனோ இதக்கே சம்சயவில்லா (தள்ளனிசதிரு) சஞ்சலப்படாமல் பொறுமையுடன் இருப்பாய் மனமே எல்லாரையும் காப்பாற்றுவான் இதற்கு சந்தேகமேயில்லை (தள்ளனிசதிரு) பெட்டதா துதியல்லி ஹுட்டிருவ விருக்ஷக்கே கட்டேயனு கட்டி நீர் எரேதவரு யாரு புட்டிசித சுவாமிதான் ஹோடேகாரனாகிரலு கெட்யாகி சலகுவனோ இதக்கே சம்சயவில்லா (தள்ளனிசதிரு) மலைமேல் வளர்ந்திருக்கும் மரங்களுக்கெல்லாம் (அங்கேயே) குட்டையை கட்டி நீர் இறைத்தவர் எவரோ பிறக்கவைத்த கடவுளே காப்பாற்றுபவனாகவும் இருப்பதால் கண்டிப்பாக காப்பாற்றுவான் இதில் சந்தேகமேயில்லை (தள்ளனிசதிரு) அடவியொளகாடுவா மிருக பக்ஷி களிகெல்லா அடிகடிகே ஆஹாரா இட்டவரு யாரு படேத ஜனனிய தெரதி சுவாமி ஹோடேகீடாகி பிடதே ரட்சிபநிதகே சந்தேக பேடா. அடர்ந்த காடுகளில் உலவும் மிருக, பறவைகளுக்கெல்லாம் அவ்வப்போது ஆகாரம் கொடுப்பவர் யாரோ இந்த உலகத்தை படைத்த கடவுளே காப்பாற்றுவான் கைவிடமாட்டான் இதற்கு சந்தேகமேயில்லை (தள்ளனிசதிரு) கல்லொளகே ஹுட்டிருவ க்ருமிகீட களிகெல்லா அல்லல்லி ஆஹார இத்தவரு யாரு புல்லலோசன காகிநெலெ ஆதிகேசவனு எல்லரனு சலஹனுவனோ இதக்கே சம்சயவில்லா (தள்ளனிசதிரு) கல்லுக்குள் இருக்கும் தேரைக்கெல்லாம் அங்கங்கேயே உணவு கொடுப்பவர் யாரோ மலரைப் போலவும், ஒளியுடைய கண்களையுடவனுமாகிய காகிநெலெ ஆதிகேசவன் எல்லாரையும் காப்பாற்றுவான் இதற்கு சந்தேகமேயில்லை (தள்ளனிசதிரு) *** திருமதி. ஜெயவந்தி அவர்கள் பாடிய பாடல்: ஒரு கன்னட திரைப்படத்தில் வந்த இந்த பாடல்: *** பின்குறிப்பு: அப்போ கடவுளே எல்லாத்தையும் பாத்துப்பாரா, நாம் எதுவுமே செய்யவேண்டியதில்லையான்னு கேக்கப்படாது. பிரச்சினைகளில் இருந்து விடுபட மனித முயற்சியும் கண்டிப்பாக தேவை. அப்போதுதான் செய்யும் செயல்களில் வெற்றி கிட்டும். சித்தி மனித முயற்சி. அருள் தெய்வ அனுக்கிரகம். மனித முயற்சி முடியுமிடத்தில் தெய்வ அருள் செயல்படும். இந்த பழமொழிகளெல்லாம் தெரியும்தானே? ***

3 comments:

குமரன் (Kumaran) said...

அருமையான பாடல். நன்றி.

தமிழ் said...

பாடலையும் விளக்கத்தையும் இரசித்தேன்

Lalitha Mittal said...

enjoyed the entire piece including yr p.s."GOD helps those who help themselves"!