Saturday, February 12, 2011

இன்று ஸ்ரீ மத்வநவமி : 2/12/2011


முன்குறிப்பு: ஸ்ரீ மத்வர் பற்றி தமிழ் விக்கியில் மிகத் தெளிவாக சொல்லியிருப்பதால், நான் சக்கரத்தை மறுபடி கண்டுபிடிக்காமல், அங்கிருந்தே எடுத்துப் போட்டிருக்கிறேன். நன்றி விக்கி.

மத்வர் (இயற்பெயர்: வாசுதேவர்) கர்நாடக மாகாணத்தில் உடுப்பிக்கருகில் உள்ள பாஜகா என்ற கிராமத்தில் பிறந்தார். 25வது வயதிலேயே உலக வாழ்க்கையைத் துறந்து துறவியானார். துறவியானதும் அவருக்குக் கொடுக்கப்பட்ட பெயர் பூர்ணப் பிரஞ்ஞர். மிகவும் படித்த அறிவாளி, துறவி என்பது மட்டும் அல்ல, அவர் தேகபலத்திலும், மந்திர சக்தியிலும், சூட்சுமச் செய்கைகளிலும் கைதேர்ந்தவர். அநுமன், பீமன் இவர்களுக்குப் பிறகு வாயு தேவனின் அவதாரமாகவே உதித்தவராகக் கருதப்பட்டார். அதனால் அவருக்கு முக்கியப் பிராணன் என்றொரு பெயரும் உண்டு.

அவரது 37 நூல்களில் தன்னை ஆனந்ததீர்த்தர் என்றே அறிமுகப்படுத்திக் கொள்கிறார். இப்பெயரும் அவருடைய மிகையான அறிவைக் கருத்தில் கொண்டு அவருடைய குருவால் அவருக்கு இடப்பட்ட பெயரே.

'துவைதம்’ என்றால் இரண்டு. முக்கியமாக பிரம்மத்தையும் ஆன்மாவையும் இரண்டு வேறு வேறு தத்துவங்களாகப் பிரித்துச் சொல்வதால் மத்வருடைய தத்துவக் கூற்றுகளுக்கு இந்தப் பெயர் நிலைத்தது. உண்மையில் இந்த வேதாந்தத்தில் இன்னும் சில தத்துவங்கள் வேறுபடுத்திச் சொல்லப்படுகின்றன. அதன்படி ஐந்து வேற்றுமைகள் நிரந்தரமானவை. அவை:

பிரம்மமும் ஆன்மாக்களும்;
ஆன்மாவும் ஆன்மாவும்;
பிரம்மமும் உலகும்;
ஆன்மாவும் உலகும்; மற்றும்
உலகிலுள்ள பொருளும் பொருளும்

மத்வாச்சாரியாரின் வாழ்க்கையில் நடந்த (அல்லது, அவர் நடத்திய) பல அற்புதங்களைப் பற்றிய விவரங்கள் அவர் காலத்திலேயே வாழ்ந்த நாராயண பண்டிதர் என்பவர் இயற்றிய மத்வவிஜயம் என்ற நூலில் உள்ளன. அவையெல்லாவற்றிலும் முக்கியமான ஒன்று சரித்திரப்பிரசித்தி பெற்றது.

ஒரு சமயம் உடுப்பிக்கருகாமையில் கடலில் ஒரு கப்பல் சென்று கொண்டிருந்தபோது புயலில் ஆபத்துக்குள்ளாகியது. கடற்கரையில் நின்றுகொண்டிருந்த மத்வர் தன் மேல் துணியை காற்றில் வீசிக்காட்டி என்னமோ செய்தார். கப்பல் ஆபத்திலிருந்து தப்பி கரை சேர்ந்தது. கப்பலின் தலைவர் அவரை வணங்கி, அவரை தன்னிடமிருந்து ஒரு பரிசு வாங்கிக்கொள்ளும்படி
வற்புறுத்தினார். கப்பலின் அடித்தளத்தில் கோபி சந்தனத்தில் ஒரு பாறை இருப்பதாகவும், அது தனக்கு வேண்டும் என்றும் கூறினார் மத்வர். இவ்விதம் ஓர் அற்பமான கற்பாறையைக் கேட்கிறாரே என்று வியந்தவாறே கப்பல் தலைவர் அதை எடுத்துக் கொடுத்தார். அதனுள் தன் கையை விட்டு சாலிக்கிராமத்தினால் ஆன ஒரு அழகிய பாலகிருஷ்ண விக்கிரகத்தை வெளியே எடுத்தார் மத்வர். தானே அந்தப் பாரமான விக்கிரகத்தைத் தூக்கிக்கொண்டு சென்றார். அதுதான் இன்றும் உடுப்பி கோயிலில் மூலவிக்கிரகமாக உள்ளது.

மத்வருடைய மறைவும் விந்தைக்குரியதே. அவர் புவியில் அவதரித்த காரியங்கள் செவ்வனே முடிந்ததும் வானிலிருந்து மலர்மாரி பொழிந்தது. மலர்க்குவியலுக்கடியில் மறைந்த ஆச்சாரியரை மலர்களை அகற்றிப் பார்த்தபோது அவருடைய உடலும் காணவில்லை! அப்படி அவர் மறைந்த அந்த தினம் தான் இன்று. (மாக மாதம் சுக்ல நவமி) ஸ்ரீ மத்வ நவமியாக அனைவராலும் கொண்டாடப்படுகிறது.

****

புரந்தரதாசர், கனகதாசர், விஜயதாசர், கோபாலதாசர் முதலான பல்வேறு தாசர்கள், ஸ்ரீ மத்வர் ஸ்தாபித்த த்வைத சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டே பாடல்களை பாடியிருக்கிறார்கள். ஸ்ரீ மத்வரைக் குறித்தும் அநேகப் பாடல்கள் உண்டு. அதில் ஒன்றை இன்று பார்ப்போம்.

*****


கூசின கண்டீரா முக்யப்ராணன கண்டீரா
பாலன கண்டீரா பலவந்தன கண்டீரா (கூசின)


குழந்தையை பார்த்தீர்களா அனுமனை பார்த்தீர்களா
குழந்தையை பார்த்தீர்களா பலவானை பார்த்தீர்களா

அஞ்சனி உதரதி ஜெனிசிது கூசு
ராமன பாதக்கிரகிது கூசு

சீதெகே உங்குர கொட்டித்து கூசு

லங்காபுரவனெ சுட்டித்து கூசு (கூசின)


அஞ்சனா தேவியிடம் பிறந்த குழந்தை
ராமனின் பாதங்களை தொட்டு சேவித்த குழந்தை
சீதையிடம் மோதிரத்தை கொடுத்த குழந்தை
இலங்கை நகரத்தை நெருப்பால் சுட்ட குழந்தை (கூசின)

பண்டி அன்னவ நொங்கிது கூசு
பகன ப்ராணவ கொந்திது கூசு

விஷத லட்டுகெய மெத்திது கூசு

மடதிகே புஷ்பவ கொட்டிது கூசு (கூசின)


ஒரு வண்டி நிறைய உணவை உண்ட குழந்தை
பகாசுரனின் உயிரை எடுத்த குழந்தை
விஷம் கலந்த லட்டுவை உண்ட குழந்தை
மனைவிக்கு புஷ்பத்தை கொடுத்த குழந்தை (கூசின)

மாயவெல்லவ கெத்திது கூசு
மத்வ மதவனு உத்தரிசிது கூசு

புரந்தர விட்டலன தயதிந்த கூசு

சும்மனே உடுப்பிலி நிந்திது கூசு (கூசின)


மாயைகளை வென்ற குழந்தை
மத்வ மதத்தை உய்வித்த குழந்தை
புரந்தர விட்டலனின் கருணையால்
உடுப்பியில் சும்மா நின்ற குழந்தை (கூசின)

****

முதல் சரணத்தில் அனுமனைக் குறித்தும், இரண்டாவது சரணத்தில் பீமனைக் குறித்தும், மூன்றாவது சரணத்தில் மத்வரைக் குறித்தும் பாடிய தாஸர், பாட்டை எப்படி முடிக்கிறார்?

அந்த மூன்று அவதாரங்களிலும் அந்தர்யாமியாக இருந்தது - உடுப்பியில் ’சும்மா’ நின்றிருக்கும் அந்த குழந்தை - அதாவது கிருஷ்ணனே என்று பாடி முடித்திருக்கிறார்.

****

இந்தப் பாடலை பாடிய வித்யாபூஷணரின் காணொளி:



***

ஸ்ரீ மத்வர் எழுதிய பகவத்கீதா தாத்பர்ய நிர்ணயத்திலிருந்து ஒரே ஒரு ஸ்லோகத்தை பார்த்துவிட்டு, மத்வநவமி கொண்டாடச் செல்வோம்.

நாஹம் கர்தா ஹரி: கர்தா தத்பூஜா கர்மசாகிலம்
ததாபி மத்க்ருதா பூஜா தத்ப்ரசாதேன நான்யதா
தத்பக்தி தத்பலம் மஹ்யம் தத்ப்ரசாதாத் புன:புன:
கர்மண்யாசோ ஹராவேவம் விஷ்ணோஸ் திருப்திகரஸ் ஸதா

பொருள்:

எதுவும் நான் செய்யவில்லை; எல்லாம் அந்த ஹரியே செய்விக்கிறான்; நான் செய்வதெல்லாம் அவன் புகழ்பாடும் பூஜையே; அந்த பூஜையும் அவன் கருணையாலே செய்கிறேன்; என்னுடைய பக்திக்கும், அதன் பலாபலன்களுக்கும் அவனுடைய கருணையே காரணம்; அனைவரும் தூய மனதோடு பக்தி செய்தால், விஷ்ணுவை அது திருப்திப்படுத்தும்.

****

3 comments:

குமரன் (Kumaran) said...

மத்வ நவமியன்று அழகான ஒரு பாடலையும் சுலோகத்தையும் தந்ததற்கு நன்றி.

Lalitha Mittal said...

too sweet and simple tune for me to resist writing lyrics which fit in very neatly in the same tune!

kuzhanthaiyaik kandeeraa?anumaanaik kandeeraa?
baalanaik kandeeraa? balavaanaik kandeeraa?

anjanimaganaaip pirantha kuzhanthai;
raamapaathanthottu panintha kuzhanthai;
seethayidam kanaiyaazhi koduththa kuzhanthai;
ilangaiyaith theeyittu eriththa kuzhanthai;

oruvandi unavu unda kuzhanthai;
bagaasuranai venru konra kuzhanthai; visham kalantha laddu thinra kuzhanthai;
manaivikku manamalar thantha kuzhanthai.

maayaigal yaavum venra kuzhanthai;
madhva mathaththirkuyir oottiya kuzhanthai;
purantharavittalanin perarulaale
uduppyil summaa ninra kuzhanthai!

antha mahaanukku en manammaarndha vanthanangal.

சின்னப் பையன் said...

வாங்க குமரன் மற்றும் லலிதாம்மா. வழக்கம்போல் உங்கள் தமிழாக்கம் அருமை. நன்றி.