Monday, August 28, 2017

நடந்தவை எல்லாமே நன்மைக்கே

நடந்தவை எல்லாமே நன்மைக்கே

நவகோடி நாராயணனாக இருந்த புரந்தரதாசர், ஒரு முதியவருக்கு உதவாமல் போக - அவர் நாராயணனின் மனைவியிடம் மூக்குத்தி வாங்கி - அதை நாராயணனிடமே அடகு வைக்க வந்து - அதன் மூலம் நாராயனனுக்கு வைராக்கியம் பிறக்கிறது. இந்த சம்பவச் சுருக்கம் இந்தப் பதிவில் உள்ளது. 


ஸ்ரீவிஜயதாசரைப் பார்த்து - புரந்தரவிட்டலா என்ற அங்கிதம் பெற்ற தாசர் பாடிய முதல் பாடல் இது என்று கருதப்படுகிறது. தாசர் என்றால் எப்படி இருக்கவேண்டும் என்று இந்த பாடலில் தெரிந்துகொள்லலாம்.



* சன்யாசியைப் போல் எதிலும் பற்றற்று இருக்க வேண்டும்
* தினமும் பலரிடம் பிட்சை எடுத்தே உண்ண வேண்டும்
* துளசி மாலை அணிந்து எப்போதும் விட்டலனின் தியானத்தில் இருக்க வேண்டும்.

தான் அரசன் (செல்வந்தன்) என்ற அகந்தையில் யாருக்கும் வணங்காமல் இருந்த நிலை மாறி, தற்போது அந்த ஸ்ரீதரனின் சேவை செய்யப் புறப்பட்டதற்கு - இந்த மாற்றத்திற்குக் காரணமாக இருந்த தன் மனைவிக்கு நன்றி செலுத்தும் வகையில் இந்த பாடல் இயற்றியுள்ளார். 

இப்போது பாடல்.

ஆதத்தெல்லா ஒளிதே ஆயித்து
நம்ம ஸ்ரீதரன சேவேகெ சாதன சம்பதாயித்து

நடந்ததெல்லாம் சரியாகவே நடந்தது
நம்ம ஸ்ரீதரனுக்கு சேவை செய்வதற்கு காலம் கனிந்தது (ஆதத்தெல்லா)

தண்டிகே வெத்த ஹிடியுவுதக்கே
மண்டெ பாகி நாசுதலித்தே
ஹெண்டத்தி சந்ததி சாவிரவாகலி
தண்டிகே வெத்த ஹிடிசிதளய்யா (ஆதத்தெல்லா)

(சன்யாசிகள் பிடித்துக் கொள்ளும்) தண்டத்தைப் பிடிப்பத்தற்கு
தலை குனிந்து வெட்கப்பட்டுக்கொண்டிருந்தேன்
(என்) மனைவியின் குலம் தழைக்கட்டும்
தண்டத்தை என்னை பிடிக்க வைத்தாளய்யா (ஆதத்தெல்லா)

கோபாள புட்டி ஹிடிவுதக்கே
பூபதி எந்து கர்விசுதித்தே
ஆபத்னீ குல சாவிரவாகலி
கோபாள புட்டி ஹிடிசிதளய்யா (ஆதத்தெல்லா)

பிட்சை எடுப்பவர்கள் பிடித்துக் கொள்ளும் பாத்திரத்தை பிடிப்பதற்கு
நானே உயர்ந்தவன் என்ற அகந்தையில் (பிடிக்காமல்) இருந்தேன்
அந்த மனைவியின் குலம் தழைக்கட்டும்
அந்த பாத்திரத்தைப் பிடிக்க வைத்தாளய்யா (ஆதத்தெல்லா)

துளசி மாலே ஹாகுவுதக்கே
அரசனெந்து திருகுதலித்தே
சரசிஜாக்‌ஷ புரந்தரவிட்டலனு
துளசி மாலே ஆகிசிதனு (ஆதத்தெல்லா)

துளசி மாலை அணிந்துகொள்வதற்கு
நான் அரசன் ( நான் ஏன் அணியவேண்டும்) என்ற (அகந்தையில்) இருந்தேன்
தாமரைக் கண்ணனாகிய அந்த புரந்தரவிட்டலன்
எனக்கு துளசி மாலை அணிவித்தான் (ஆதத்தெல்லா)

***

வித்யாபூஷண் அவர்கள் பாடிய இந்தப் பாடல்:







1 comment:

maithriim said...

உண்மை தான், எல்லாத்துக்கும் காலம் கனிய வேண்டும். அதற்கும் அவன் கருணை வேண்டும்.

amas32