Wednesday, June 3, 2015

உலகம் மாயை - தற்காலிகமானது



பூஜை புனஸ்காரங்கள், கடவுள் மேல் நம்பிக்கை இல்லாமல் வணிகத்தில் ஈடுபட்டு கருமியாக வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருந்த புரந்தர தாசர், அனைத்து செல்வங்களையும் தானம் செய்துவிட்டு, தினப்படி பிக்‌ஷை பெற்று வாழலானார் என்பது நமக்குத் தெரியும். அப்படிப்பட்ட வைராக்கியம் கொண்டவர், அதைப் பற்றி பல பாடல்களாகவும் எழுதியுள்ளார்.



முதலில் இந்தப் பாடலைப் பார்த்துவிடுவோம். சிறு விளக்கம் பின்னர்.

அல்லிதே நம்மனே
இல்லி பந்தே சும்மனே (அல்லிதே)

நம்ம வீடு அங்கே இருக்கிறது;
நான் இங்கே வந்தது தற்காலிகமாகத்தான் (அல்லிதே)

கட பாகிலிரிசிதா கள்ள மனே இது
முததிந்த லோலாடோ சுள்ளு மனே
இடிராகி வைகுண்ட வாச மாடுவந்தா
பதுமனாபன திவ்ய பதுகு மனே (அல்லிதே)

வாசல், கதவுகளுடன் கூடிய பொய்யான வீடு இது
மிகவும் பிரியத்துடன் கட்டிக் காக்கப்படும் பொய்யான வீடு இது
வைகுண்டத்தில் வாசம் செய்யும்
பத்பனாபன் வந்து தங்கி இதை தன் வீடாகிக் கொண்டான் (அல்லிதே)

மாளிகேமனேயெந்து நெச்சி கெடலி பேடா
கேளய்யா ஹரிகதே ஸ்ரவணங்களா
நாளே யமதூதரு பந்தெளெதொவ்யாக
மாளிகே மனெயு சங்கத பாரதய்யா (அல்லிதே)

மாட மாளிகை என்று நினைத்து ஏமாற வேண்டாம்
இறைவனின் கதைகளை, சொற்பொழிவுகளைக் கேட்கவும்
நாளையெ எமதர்மனின் தூதர்கள் வந்து உன்னை கூப்பிடும்போது
இந்த மாட மாளிகைகள் உன் கூட வராது (என்று தெரிந்துகொள்) (அல்லிதே)

மடதி மக்களெம்ப ஹம்பல நினகேகோ
கடுகொப்புதனதல்லி மெரெயதிரோ
ஒடெய ஸ்ரீ புரந்தரவிட்டல ராயன
த்ருட பக்தியல்லி நீ பஜிசெலோ மனுஜா (அல்லிதே)

மனைவி மக்கள் என்று (எப்போதும்) அவர்களையே எண்ணி ஏங்கிக் கொண்டிருக்காதே
எப்போதும் ஆணவத்துடன் சுற்றிக் கொண்டிருக்காதே
நம் முதல்வன் ஸ்ரீ புரந்தரவிட்டலன் மேல்
பக்தி கொண்டு, அவரைப் பற்றி எப்போதும் பஜித்துக் கொண்டிருப்பாய் நீ (அல்லிதே)

***

இந்தப் பாடலை இரு விதமாகப் புரிந்து கொள்ளலாம். வீடு என்பதை இந்த உலகம் அல்லது இந்த உடல் என்றும் பொருள் கொள்ளலாம். இந்த உலகம் தற்காலிகமானது, நாம் இங்கு வந்தது நிரந்தரமானதல்ல என்று கூறுவது போலவும், ஆத்மா இந்த உடலுக்கு வந்து சேர்ந்தது தற்காலிகமானதுதான் என்றும் பொருள் கொள்ளலாம்.

மாட மாளிகைகள், உறவுகள் எவையும் இறுதியில் எமதூதர்கள் வந்து கூப்பிடும்போது நம்முடன் வராது. அதனால் ஆணவத்துடன் சுற்றித் திரியாமல், அந்த புரந்தர விட்டலனை நினைத்துக் கொண்டிருப்பாயாக என்று கூறுகிறார் தாசர்.

Allidhe Namma Mane - Purandharadasar
***

1 comment:

Kamala said...

எல்லாம் மாயைதான் என்பதை புரிந்து கொண்டவருக்கு ஏது துன்பம்? அருமையான தாசர் பாடல், ரசித்தேன்.