Wednesday, March 19, 2014

அழைத்தால் உடனே வருபவன் யார்?



அ. கஜேந்திரன் என்னும் யானை ஆபத்துக் காலத்தில் ‘ரங்கா’ என்று அழைத்ததும் வந்து காப்பாற்றியவர்
ஆ. தன்னால் இனிமேல் ஒன்றும் செய்ய முடியாது என்றபோது இரு கைகளையும் தூக்கி ‘கிருஷ்ணா, என்னைக் காப்பாற்று’ என்று தொழுத திரௌபதியை காப்பாற்றியவர்
இ. இங்கே கண்டிப்பாக இறைவன் இருப்பான் என்ற பிரகலாதன் நம்பிக்கையை காப்பாற்ற தூணில் வந்து நின்றவர்.
ஈ. தன் பக்தர்களை எப்பொழுதும் கைவிடாதவர்

என்றெல்லாம் இறைவனை, அந்த ஸ்ரீமன் நாராயணனின் புகழை பல்வேறு பாடல்களில் புரந்தரதாசர் பாடியிருக்கிறார்.

அதேபோல் இன்றைய பாடலிலும் கூப்பிட்ட குரலுக்கு வருபவன் யார், அந்த ரங்கனா? அல்லது கிருஷ்ணனா? என்று பாடி, இறுதியில் அந்த புரந்தரவிட்டலன் யார் அழைத்தாலும் வருவான் என்ற பொருள் படுமாறு பாடலை முடிக்கிறார். வழக்கம்போல் எளிமையான, மொழிபெயர்க்கவே தேவையில்லாத இந்த பாடலை பார்த்துவிட்டு, வித்யாபூஷணர் குரலிலும் கேட்டுவிடலாம்.

***

யாரே ரங்கன யாரே கிருஷ்ணன
யாரே ரங்கன கரெய பந்தவனு (யாரே)

ரங்கனை, கிருஷ்ணனை யார் அழைத்தார்கள்?
(அழைத்தால் உடனே வந்துவிடுவானே என்று பொருள்)

கோபால கிருஷ்னன பாப விநாசன
ஈபரி இந்தலி கரெய பந்தவனு (யாரே)

கோபால கிருஷ்னனை பாவங்களை போக்குபவனை
இந்த கணத்தில் அழைத்த மாத்திரத்தில் வருபவன் யார்? (யாரே)

வேணு விநோதன ப்ராண ப்ரியன
ஜானெயரரசன கரெய பந்தவனு (யாரே)

புல்லாங்குழல் ஊதுபவனை என் உயிரிலும் மேலானவனை
நல்லனவற்றை ஏற்றுக்கொள்பனை யார் அழைத்தது? (யாரே)

கரிராஜ வரதன பரம புருஷன
புரந்தர விட்டலன கரெய பந்தவனு (யாரே)

கஜேந்திரனை (யானை) காப்பாற்றியவன் அனைவரிலும் சிறந்தவனை
புரந்தர விட்டலனை கூப்பிட்டால் உடனே வருவானே (யாரே)

***

இந்தப் பாடலை அழகாகப் பாடும் வித்யாபூஷணர்:

https://www.youtube.com/watch?v=43An2WlsRjA

***

No comments: