Tuesday, March 11, 2014

எதை செய்யணுமோ அதை செய்யாமல்...!!


நம்மை பெற்ற தாய், தந்தை; மனைவி, மக்கள், சொந்தபந்தம் இவர்களை எல்லாம் கஷ்டப்படுத்திவிட்டு, காயப்படுத்திவிட்டு, தேவைப்படும்போது அவர்களுக்கு உதவி செய்யாமல், தானங்கள், ஜப தப ஹோமங்கள் செய்வதால் எந்தவித பலனும் கிடையாது. முதலில் இதையெல்லாம் சரியாகச் செய்துவிட்டு பிறகு மற்ற காரியங்களைச் செய் என்று கூறும் தாசர், கூடவே மறக்காமல் புரந்தரவிட்டலனையும் நினைக்கவேண்டும்; இல்லையேல் இந்த ஜென்மம் எடுத்து எந்த பலனும் இல்லை என்றும் கூறி முடிக்கிறார்.

***

ஹெட்ட தாயி தந்தெகள சித்தவ நோயிசி
நித்ய தானவ மாடி பலவேனு
சத்ய சதாசார இல்லதவனு ஜப
ஹத்து சாவிர மாடி பலவேனு (ஹெட்ட)

பெற்ற தாய் தந்தையின் மனதை நோகவிட்டு
தினமும் தானங்கள் செய்து என்ன பலன்?
உண்மை பேசாமலும், நல்ல பழக்கங்களும் இல்லாதவன்
பத்தாயிரம் ஜபங்கள் செய்து என்ன பலன்?

தன்ன சதிசுதரு பந்துகள நோயிசி
சின்ன தானவ மாடி பலவேனு
பின்னானந்ததலி தேசதேசவ திருகி
அன்ன தானவ மாடி பலவேனு (ஹெட்ட)

தன் மனைவி மக்கள் உறவினர்களை நோகவிட்டு
செல்வத்தை தானம் செய்வதில் என்ன பலன்?
பகட்டுக்காக ஊர் ஊராகப் போய்
அன்னதானங்கள் செய்வதில் என்ன பலன்? (ஹெட்ட)

ஸ்னானக்கே பானக்கே ஆகுவ திளி நீரு
கானனதொளகித்து பலவேனு
ஆனந்த மூர்த்தி புரந்தர விட்டலன
நெயெனாத தனுவித்து பலவேனு (ஹெட்ட)

குளிக்கவும் குடிக்கவும் முடியாத சுத்தமான நீரானது
(யாரும் புகமுடியாத) காட்டுக்குள் இருந்து என்ன பலன்?
நமக்கு எப்போதும் ஆனந்தத்தைத் தரும் புரந்தரவிட்டலனை
நினைக்காத இந்த உடம்பு இருந்து என்ன பலன்? (ஹெட்ட)

***

முதல் & இறுதி பத்திகள் மட்டும் பாடும் வித்யாபூஷணர்.




***


1 comment:

maithriim said...

கீதையின் சாரத்தை ஒரே பாட்டில் சொல்லிவிட்டார் தாசர்.

amas32