Thursday, March 7, 2013

பிள்ளையார்பட்டி ஹீரோ

விநாயகர். அனைவருக்கும் மிகவும் பிடித்தமானவர். வெறும் மஞ்சளைப் பிடித்துக் கூப்பிட்டாலும் ஓடோடி வருவார் என இவரது பெருமைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.

தாரதம்யம். ஆங்கிலத்தில் Hierarchy. தமிழில் படிநிலை. த்வைதத்தில் கடவுள்கள் ஒரு படிநிலையில் அடுக்கப்பட்டுள்ளனர். (பார்க்க: விக்கி சுட்டி) நிலையின் மேல் ஸ்ரீவிஷ்ணு. அவருக்கு அடுத்து மகாலட்சுமி. பிறகு பிரம்மா. இப்படியான படியில் சற்று கீழே வருபவரே விநாயகர். ஆனாலும் இவர் மேல் புரந்தரதாசர் முதலான அனைத்து தாசர்களும் பற்பல பாடல்களைப் பாடியுள்ளனர்.

விநாயகர் முதல் இந்த படிநிலையில் உள்ள அனைத்து கடவுள்களுமே ஸ்ரீவிஷ்ணுவை வணங்குகின்றனர் என்பதால், தாசர் இத்தகைய பாடல்களின் இறுதியில், புரந்தரவிட்டலனின் பக்தனே, தாசனே என்று விளித்துவிடுவார். இன்றைய பாடலிலும் இதை கவனிக்கவும்.

தாசர் பாடிய இன்னொரு பிள்ளையார் பாடலை ஏற்கனவே பார்த்திருக்கிறோம். சுட்டி: http://dasar-songs.blogspot.in/2012/01/blog-post.html

சரணு சித்தி விநாயகா - மிகவும் புகழ்பெற்ற பாடல்.

சரணு சித்தி விநாயகா சரணு வித்ய பிரதாயகா
சரணு பார்வதி தனைய மூர்த்தி சரணு மூஷிக வாகனா (சரணு)

மோட்சத்தை, கல்வியை கொடுப்பவனே விநாயகா, உன்னை வணங்குகிறேன்
பார்வதியின் மைந்தனே, மூஞ்சுறு வாகனனே, உன்னை வணங்குகிறேன் (சரணு)

நித்தில நேத்ரனே தேவி சுதனே நாகபூஷண பிரியனே
கடிகடாங்கத கோமளாங்கனே கர்ண குண்டல தாரணே (சரணு)

நெற்றியில் கண் இருப்பவரின் (சிவனின்) மனைவியின் புதல்வனே,
பாம்பை ஆபரணமாக அணியப் பிரியப்படுபவனே,
பெரிய பானையைப் போல் வயிறு உடையவனே,
குண்டலங்கள் அணிந்த காது உடையவனே (சரணு)

பட்ட முத்தின பதக ஹாரனே பாஹு ஹஸ்த சதுஸ்தனே
இட்ட தோடுகயா ஹேம கங்கண பாஷாங்குஷ தரனே
குக்ஷி மகா லம்போதரனே இக்ஷு சாப கேளிதனே
பக்ஷி வாகன ஸ்ரீ புரந்தர விட்டலன நிஜ தாசனே (சரணு)

வட்டமான முத்துமாலையை அணிபவனே,
நான்கு கரங்கள் உடையவனே,
தங்க வளையல்கள், ஆபரணங்கள் அணிந்தவனே,
கயிறு, அங்குச ஆயுதங்களை தரித்தவனே,

பெரிய வயிறு உடையவனே,
இக்‌ஷு சாபனை (என்னும் அரக்கனை) வென்றவனே
கருட வாகனான ஸ்ரீ புரந்தர விட்டலனின்
நிஜமான தாசனே (சரணு)

***

MLV அம்மா மிகவும் அருமையாக பாடுவதை பார்க்கலாம். காணொளியில் 50க்கும் மேற்பட்ட பிள்ளையார்களை கண்டு களிக்கலாம்.


***

மிக அழகாகவும் தெளிவாகவும் பாடும் ஒரு குழுவினர்.


***

042/365

1 comment:

maithriim said...

தாசர் விநாயகர் மேலும் பாடியிருக்கிறார் என்று எனக்குத் தெரியவே தெரியாது. நன்றி. அருமையான் விளக்கம் +சுட்டி.

amas32