Monday, February 25, 2013

வாராய், கிருஷ்ணா வாராய்...



கிருஷ்ணா நீ பேகனே பாரோ. இந்தப் பாடலை கண்டிப்பா அனைவரும் கேட்டிருப்பீங்க. ஏற்கனவே நம்ம தளத்தில் பாத்துட்டோம். குட்டி கிருஷ்ணனை, வேகமாய் வந்து உன் திருமுகத்தை காட்டு என்னும் அந்தப் பாடலை இயற்றியவர் ஸ்ரீ வியாசதீர்த்தர். (1460-1539). இவர் ஸ்ரீ புரந்தரதாசரின் குரு. புரந்தரதாசரின் காலம் (1484-1564). தன் குருவைப் போலவே இவரும் கிருஷ்ணனை வாராய் என்று அழைக்கும் சில பாடல்களைப் பாடியுள்ளார். அவற்றில் ஒன்றுதான் இன்று பார்க்கப்போவது.

கிருஷ்ணன், மாடு மேய்க்கும்போது, புல்லாங்குழல் ஊதாத சமயங்களில் அங்கிருக்கும் நண்பர்களுடன் என்ன விளையாடுவார்? பந்து, பம்பரம் ஆகியவற்றை விளையாடுவதுடன், டாண்டியா நடனமாடியபடி பொழுதைக் கழிக்கிறாராம். இப்படி விளையாடும் சிறுவனை, சங்கு சக்கரம் ஏந்திய நாராயணனை, பல அவதாரங்கள் எடுத்த பகவானை - அவன் புகழை, அருமை பெருமைகளை உலகில் பரப்புவதே தன் வேலை/ கடமை என்று கூறி அழைக்கிறார் தாசர்.

இந்த பக்திபூர்வமான பாடலை பொருளுடன் பார்த்தபிறகு, பீமண்ணர் பாடியுள்ளதையும் கேட்போம்.

சினிகொளு = டாண்டியா குச்சிகள்
செண்டு = பந்து
புகிரி = பம்பரம்

இந்த சொற்களின் சரியான பொருளை அறியத் தந்த நண்பர் @seevin க்கு நன்றி.

***

யாதவ நீ பா யதுகுல நந்தன
மாதவ மதுசூதன பாரோ (யாதவ)

கிருஷ்ணா நீ வாராய், யதுகுலத்தின் பிறந்தவனே
மாதவா, மதுசூதனா, வாராய்.

சோதரமாவன மதுரெலி மடஹித
யசோதே கந்தா நீ பாரோ (யாதவ)

தாய்மாமனை (கம்சன்) மதுராவில் கொன்றவனே
யசோதை மைந்தனே நீ வாராய் (யாதவ)

கனகாலந்திகே குலுகுலு எனுதலி
ஜணஜண எனுதிக நாதகளு
சினிகொளு செண்டு பொகரெயனாடுதா
சன்னவரொடெகூடி நீ பாரோ (யாதவ)

கணுக்காலில் (கட்டிய) ஜல்ஜல் என்னும் சத்தமிடும் (கொலுசுடன்)
ஜண்ஜண் என்று அதிரும் (இனிமையான உன் புல்லாங்குழல்) இசையுடன்
டாண்டியா, பந்து, பம்பரத்துடன் நீ ஆடிக்கொண்டு
உன் நண்பர்களுடனே நீ வாராய் (யாதவ)

சங்கசக்ரவு கையலி ஹொளெயுத
பிங்கத கோவள நீ பாரோ
அகளங்க மஹிமனே ஆதி நாராயணா
பேகெம்ப பகுதரிகொலி பாரோ (யாதவ)

ஜொலிக்கும் சங்கு சக்கரத்தை கையில் பிடித்து
எப்போதும் வெற்றி பெறுபவனே, இடையனே நீ வாராய்
குறைகளேயில்லாத மஹாத்மனே ஆதி நாராயணனே
உன்னை வேண்டும் பக்தர்களை காப்பாற்றுபவனே, வாராய் (யாதவ)

ககவாஹனனே பகெ பகெ ரூபனே
நகேமுக தர்சனனே நீ பாரோ
ஜகதொளு நின்னய மஹிமெயா பொகளுவே
புரந்தர விட்டலா நீ பாரோ (யாதவ)

கருட வாஹனனே, பல அவதாரங்களை எடுத்தவனே
சிரித்த முகத்தையுடையவனே நீ வாராய்
உலகத்தில் உன் மகிமையை பாடி பரப்புவேன்
புரந்தரவிட்டலா நீ வாராய் (யாதவ)

***



***

039/365

1 comment:

maithriim said...

Wonderful post and such a lovely number!

amas32