Wednesday, March 9, 2011

உடுப்பியில் பாடப்பட்ட இன்னொரு அற்புதமான பாடல்.




சிலர் தங்கள் குறைகளை தாய் தந்தையரிடம் சொல்கின்றனர்; சிலர் மனைவி, மக்களிடம்; மற்றும் சிலர் நண்பர்களிடம். இவர்கள் யாரிடத்திலும் சொல்ல முடியாத குறைகளை - ஸ்ரீ ராகவேந்திரரின் மகிமைகளை அறிந்தவர்கள் - அவரிடமே சொல்கின்றனர்.

ஸ்ரீ ராகவேந்திரரின் புகழ்பெற்ற ஸ்லோகமான

பூஜ்யாய ராகவேந்த்ராய சத்யதர்ம ரதாயச !
பஜதாம் கல்பவ்ருக்‌ஷாய நமதாம் காமதேனவே !!

சொல்வது என்னவென்றால்,

ராகவேந்திரரை வழிபடுங்கள், அவரே சத்தியத்தையும் தர்மத்தையும் காப்பாற்றுபவர். அவரை பஜிப்பவர்களுக்கு கல்பவிருட்சம் போலவும், நினைப்பவர்களுக்கு காமதேனுவைப் போலவும் அருளை வாரி வழங்குவார்.

***

ஸ்ரீ ராகவேந்திரர், மத்வ மதத்தில் வந்த ஒரு பெரிய மகான். 1595ல் புவனகிரியில் பிறந்து, திருமணம் செய்து பிறகு சன்னியாசம் மேற்கொண்டு, இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டவர். பல்வேறு மதத்தலைவர்களை வாதத்தில் வென்றவர். பல்வேறு நூல்களை எழுதியுள்ள ஸ்ரீ ராகவேந்திரர், மந்திராலயத்தில் சமாதியடைந்தவர்.

இவரது வரலாறை தெரிந்துகொள்ள தமிழ்ஹிந்துவில் வந்த இந்த பதிவை பார்த்துவிடவும். (நான் மைனஸ் ஓட்டு போட எண்ணிய) இந்த பதிவில் மறுமொழிகளில் நல்ல குறிப்புகளும், விவாதங்களும் உண்டு.

ஒரு முறை ஸ்ரீ ராகவேந்திரர், உடுப்பி கிருஷ்ணனை தரிசனம் செய்ய வந்தபோது, இந்த பாடலை - இந்து எனகே கோவிந்தா - பாடியதாக சொல்கின்றனர். இதை அவர் பாடவில்லை என்று ஒரு “சர்ச்சை”யும் உண்டு. ஆனாலும், நம்ம உடுப்பி கிருஷ்ணனை வணங்கி பாடப்படும் இந்த அழகான பாடலை, ஸ்ரீ ராகவேந்திரரே இயற்றி, பாடியதாக எண்ணி, அதன் பொருளோடு பாடி, மகிழ்வோம் வாருங்கள்.

***

இன்னொரு முக்கிய குறிப்பு:

ஸ்ரீ ராகவேந்திரரின் ஜன்ம தினம் மற்றும் அவர் பீடாதிபதி ஆன நாள் இரண்டும் இந்த வாரம் வருவதையொட்டி, அவர் மடம் இருக்குமிடங்களில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. இவ்வாறு கர்நாடக மாநிலம், ஹொஸ்பேட்டில், நடைபெறும் நிகழ்ச்சியை தினந்தோறும் (சென்ற வாரயிறுதி முதல் அடுத்த வாரயிறுதி வரை 3/5 - 3/12) http://saptaaha.com தளத்தில் நேரடி ஒளிபரப்பும் நடைபெறுகிறது.

இப்போது பாடல்.

***



இந்து எனகே கோவிந்தா
நின்னய பாதார விந்தவ தோரோ முகுந்தனே (இந்து)

இன்று எனக்கு கோவிந்தா
உன் பாதாரவிந்தங்களை காட்டு முகுந்தனே (இந்து)

சுந்தர வதனனே நந்தகோபிய கந்தா
மந்தரோத்தாரா ஆனந்தா இந்திரா ரமணா (இந்து)

அழகான முகத்தோனே, இடையர்குல மகனே (வாரிசே)
மந்தார மலையை தூக்கியவனே, லட்சுமியின் தலைவனே (இந்து)

நொந்தேனய்யா பவபந்தனதொளு சிலுகி
முந்தே தாரி காணதே குந்திதே ஜகதொளு
கந்தனந்தெந்தென்ன குந்துகள எணிசதே
தந்தே காயோ கிருஷ்ணா கந்தர்ப்ப ஜனகனே (இந்து)

இந்த சம்சார சாகரத்தில் மூழ்கி நொந்து போனேன்
முன் செல்லும் வழி தெரியாமல் இந்த உலகத்தில் தவித்தேன்
என்னை குழந்தையாக பாவித்து, என் தவறுகளை எண்ணாமல்
தந்தையே, என்னை காப்பாற்று, மன்மதனின் தந்தையே (இந்து)

முதாதனதி பலு ஹேடிஜீவனனாகி
த்ருடபகுதியனு மாடலில்லவோ ஹரியே
நோடலில்லவோ நின்ன பாடலில்லவோ மஹிமே
காடிகார கிருஷ்ணா பேடிகொம்பேனோ நின்ன (இந்து)

மூடனான நான் மிகவும் கோழையான வாழ்வு வாழ்ந்து
உன்னிடத்தில் அசைக்கமுடியாத பக்தியை செய்யவில்லை
உன்னை பார்க்கவில்லை; உன் மகிமையை பாடவில்லை
தேரோட்டியான கிருஷ்ணனே; உன்னை வேண்டிக் கொள்கிறேன் (இந்து)

தாருணியொளு பலுபார ஜீவனனாகி
தாரி தப்பி நடதே சேரிதே குஜனர
ஆரு காயுவரில்லா சாரிதே நினகய்யா
தீர வேணுகோபாலா பாருகாணிசோ ஹரியே (இந்து)

இந்த உலகத்தில் (ஒன்றுமே செய்யாமல்) வாழ்ந்து வந்தேன்
தவறான வழியில் போய் தவறான மனிதர்களிடம் போய் சேர்ந்தேன்
என்னை காப்பாற்ற இப்போது யாருமில்லை; உன்னை வந்தடைந்தேன்
வேணுகோபாலனே, என்னை ரட்சிப்பாய் ஹரியே (இந்து)


****

இப்போ காணொளிகள்.

இந்த இரண்டு காணொளிகளும் திரைப்படங்களுக்காக பதிவு செய்யப்பட்டவையே. இரண்டிலும், இரண்டாவது சரணம் மிஸ்ஸிங்.

முதலாவதாக, P.B.ஸ்ரீனிவாஸ் அவர்கள் பாடியது



அடுத்து PBSக்கு போட்டி போட்டு, உணர்ச்சிபூர்வமாக பாடியவர் நம்ம S.ஜானகியம்மா.



***

ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ.

***

2 comments:

தமிழ் said...

/தாருணியொளு பலுபார ஜீவனனாகி
தாரி தப்பி நடதே சேரிதே குஜனர
ஆரு காயுவரில்லா சாரிதே நினகய்யா
தீர வேணுகோபாலா பாருகாணிசோ ஹரியே/

இன்னும் நினைவில் இருக்கிறது
இந்த வரிகள்

நன்றி நண்பரே

Lalitha Mittal said...

aum sri raaghavendraaya namaha!