Monday, February 10, 2014

கோவிந்தன் - எவ்வளவு அழகான பெயர்!



கோவிந்தன் - கோ (Go) என்ற சொல்லுக்கு புவி, பசு, பேச்சு & வேதம் என்று பல அர்த்தங்கள் உள்ளன. இந்த உலகத்தையும், அதில் உள்ள அனைத்து உயிரினங்களையும் காப்பாற்றுபவன்; கோகுலத்தில் இருந்த பசுக்களை காப்பாற்றியவன்; அவனில்லாது யாருடைய தொண்டையிலிருந்தும் பேச்சு வரவே வராது; அனைத்து வேதங்களும் யாரைக் குறித்து எழுதப்பட்டனவோ, அவன் ; - இதெல்லாம் யாருன்னு கேட்டால் - கோவிந்தன், அந்தப் பெயரை சொல்லச் சொல்ல ஆனந்தம்.

இதையே குறிப்பிட்டு பாடப்பட்டுள்ள இந்தப் பாடல், மிகவும் சிறியது; ஆனால் கோவிந்தா என்ற பெயரைப் போல் மிகவும் அழகான பாடல்; மிகவும் புகழ் பெற்றதும் ஆகும்.

***

கோவிந்தா நின்ன நாமவே சந்தா
கோவிந்தா நின்ன நாமவே சந்தா (கோவிந்தா)

கோவிந்தா, உன் பெயரே மிகவும் அழகு
கோவிந்தா, உன் பெயரே மிகவும் அழகு (கோவிந்தா)

அனுரெணு த்ருண கஷ்ட பரிபூர்ண கோவிந்தா
நிர்மலாத் மனாகி இருவதே ஆனந்தா (கோவிந்தா)

அணுவைப் போல சின்னஞ்சிறிய கஷ்டங்களை போக்குபவனே கோவிந்தா
மனது சுத்தமாக இருப்பதே ஆனந்தம் (கோவிந்தா)

ஸ்ரிஷ்டி ஸ்திதி லய காரண கோவிந்தா
பரி மஹிமெய திளியுவுதே ஆனந்தா
பரம புருஷ ஸ்ரீ புரந்தர விட்டலன
ஹிங்கதே தாசர சலஹுவுதே ஆனந்தா (கோவிந்தா)

ஆக்குதல் காத்தல் அழித்தல் ஆகிய அனைத்திற்கும் காரணமானவனே கோவிந்தா
(உன்) அளவில்லாத மகிமையை தெரிந்து கொள்வதே ஆனந்தம்
பரமபுருஷன் ஆன ஸ்ரீ புரந்தரவிட்டலனை
(எப்பொழுதும் பாடித் திரியும்) தாசர்களுடன் பேசிப் பழகுவதே ஆனந்தம் (கோவிந்தா)

***

திரு மகாராஜபுரம் சந்தானம் அவர்கள் குரலில் இந்தப் பாடல்:
http://www.youtube.com/watch?v=wUTJoX_AS8E

உன்னிகிருஷ்ணன் பாடியது:
http://www.youtube.com/watch?v=kDvYP6zgS-U

***

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

கோவிந்தா என்றும் சிறப்பு...

வாழ்த்துக்கள்...

maithriim said...

so beautiful! So simple yet so full of meaning. Govinda reverberates in the hills of Tirumala for just this reason.

amas32