Sunday, January 25, 2015

வந்தாள் மகாலட்சுமியே!

வந்தாள் மகாலட்சுமியே!

தாசரின் புகழ்பெற்ற பாடல்களில் ஒன்றான ‘பாக்யதா லக்‌ஷ்மி பாரம்மா’ கேட்டிருப்பீர்கள். இங்கே ஏற்கனவே பார்த்திருக்கிறோம். வரலட்சுமி பூஜையின்போதும், வெள்ளிக்கிழமை பூஜைகளின் போதும் இந்தப் பாடலைப் பாடுவார்கள். மகாலட்சுமியை வீட்டுக்குள் வா என்று கூப்பிட்டு, ஆரத்தி எடுத்து, பூஜை செய்வார்கள். வீட்டுக்குள் வந்த மகாலட்சுமியைப் புகழ்ந்து பாடுவதைப் போல அமைந்த பாடல் இது.

அந்தப் பாடலில் உள்ள அதே போன்ற சொற்கள், சின்னச்சின்ன எளிமையான வரிகள் என்று பூஜைகளில் பாடுவதற்கு மிகவும் ஏற்ற பாடல்.



***

பந்தாளு நம்ம மனெகே 
ஸ்ரீ மகாலட்சுமி சந்தேவில்லதந்தே (பந்தாளு)

வந்தாள் மகாலட்சுமியே நம் வீட்டிற்கு
ஒரு தயக்கமும் இல்லாமல் (பந்தாளு)

பந்தாளு நம்ம மனெகே
நிந்தாளு க்ருஹதல்லி
நந்த கந்தன ராணி
இந்திரெ நம்ம மனெகே (பந்தாளு)

வந்தாள் மகாலட்சுமியே
நின்றாளே நம் வீட்டில்
கோபாலகிருஷ்ணனின் மனைவி
வந்தாளே இந்திரா, நம் வீட்டிற்கு (பந்தாளு)

ஹெஜ்ஜெ மேலே ஹெஜ்ஜெய நிக்குதா
கெஜ்ஜெய கால கலுகலுகலு என்னுதா
மூர்ஜகவ மோஹிசுத்த முகுந்தன ராணியு
சம்பத்து கொடலிக்கே வேங்கடேசன சஹித (பந்தாளு)

அடி மேல் அடி எடுத்து வைத்து
கொலுசு மாட்டிய காலினால் சத்தத்தை ஏற்படுத்தியவாறு
மூவுலகும் பூஜிக்கும் முகுந்தனின் மனைவியனவள்
செல்வத்தைக் கொடுப்பதற்காக வேங்கடவன் உடன் (வந்தாள்)

மாச ஸ்ராவண சுக்லவு சுக்ரவார
பௌர்ணமி தினதந்து
பூசுரரெல்ல கூடி சாசிர நாமவ பாடி
வாசவாகிரலிக்கெ வாசுதேவன ராணி (பந்தாளு)

ஆவணி மாத வெள்ளிக்கிழமை
பௌர்ணமி தினத்தில்
(அவளின்) 1000 நாமங்களைப் பாடி, போற்றி பூஜை செய்யும் மக்களின் வீட்டில்
வசிப்பதற்கு, வாசுதேவனின் மனைவி (வந்தாள்)

கனகவாயிது மந்திர ஜனனி பரலு
ஜய ஜய ஜய என்னிரே
சனகாதி முனிகள சேவெயனு ஸ்வீகரிசி
கனகவல்லியு தன்ன காந்தன கரெதுகொண்டு (பந்தாளு)

அவள் வந்ததும் இல்லமே தூய்மை/பிரகாசமானது
வாழ்க வாழ்க வாழ்க என்று சொல்லுங்கள்
சனகாதி முனிவர்கள் அனைவரின் பூஜையையும் ஏற்றுக்கொண்டு
கனகவல்லி ஆனவள் தன் கணவனையும் அழைத்துக் கொண்டு (வந்தாள்)

உட்ட பீதாம்பர ஹொளெயுதா
கரதல்லி கட்டி கங்கண ஹிடியுதா
ஸ்ருஷ்டிகொடெய நம்ம புரந்தரவிட்டலன
பட்டதரசி நமகே இஷ்டார்த்த கொடலிக்கே (பந்தாளு)

பளிச்சென்று இருக்கும் ஆடையுடன்
கையில் கங்கணத்துடன்
இவ்வுலகைப் படைத்துக் காக்கும் நம் புரந்தரவிட்டலனின்
இல்லத்தரசி, நமக்கு வேண்டிய வரங்களைக் கொடுப்பதற்கு (வந்தாள்)

***


Tuesday, January 20, 2015

நல்லதுக்கு காலமே இல்லை!

நல்லதுக்கு காலமே இல்லை!

ஸ்ரீ புரந்தரதாசரின் காலம் - கிபி 1484 - 1564. இன்று அவரது 451வது புண்ணிய தினம் ஆகும். தனது குருவான ஸ்ரீ வியாசராயரினால் ‘தாசரென்றாலே அது புரந்தர தாசர்தான்’ என்று பாடப்பட்டவர். தாசரின் வாழ்க்கை வரலாறு ஏற்கனவே இங்கே பார்த்திருக்கிறோம்.



விஜய நகர சாம்ராஜ்யத்தில் புகழ்பெற்ற வணிகராக இருந்த ஸ்ரீனிவாச நாயக் ஆன நம் நாயகன், அந்த குறிப்பிட்ட சம்பவத்திற்குப் பிறகு ஆன்மிகத்தில் ஈடுபட வேண்டி ஒரு குருவைத் தேடும்போது, அவரது மனைவியானவர், ஸ்ரீ வியாசராயரின் பெயரைச் சொல்ல, அவரைப் போய் பார்த்திருக்கிறார்.

போனதுமே வியாசராயர் இவரைப் பார்த்து, "இங்கே வருவதற்கு இவ்வளவு காலமா? நான் ரொம்ப நாட்களாக உன்னை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேனே" என்றாராம். மேலும், நீ செய்ய வேண்டிய செயல்கள் ஏராளமாக உள்ளன. இனியும் தாமதிக்காமல் ஹரிதாசனாகி இறைவனின் புகழைப் பாடு, மக்களிடம் அவனின் பெருமைகளைப் போய் சொல் என்று உபதேசம் செய்ய, பின்னர் நடந்ததெல்லாம் வரலாறு.

இன்றைய பாடலைப் பற்றி:

மிகவும் புகழ்பெற்ற, பல கச்சேரிகளில் பாடப்பெறும் இந்தப் பாடலைப் பார்த்தால், அந்தக் காலத்திலேயே இப்படி இருந்திருக்கிறார்களா என்றும், 450+ ஆண்டுகள் கழித்தும் இப்போதைய நிலைக்கும் பொருந்தி வருகிறதே என்றும் வியப்படைய வைக்கிறது.

***

சத்யவந்தரிகிது காலவல்லா
துஷ்டஜனரிகிது சுபீட்ச கால (சத்ய)

உண்மையே பேசுபவர்களுக்கு இது காலமல்ல
கெட்டவர்களுக்கு இது நல்ல காலம் (சத்ய)

ஹரிஸ்மரணே மாடுவகே க்‌ஷயவாகுவ கால
பரம பாபிகளிகே சுபீட்ச கால
ஸ்திரவாத பதிவ்ரதெய பரரு நிந்திப கால
தரெகெசாரியள கொண்டாடுவ கால (சத்ய)

எப்போதும் ஹரியை நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, நஷ்டமாகும் காலம் இது;
பாவங்களைச் செய்பவர்களுக்கு நல்ல காலம்
பதிவிரதைகளாக இருப்பவர்களை மற்றவர்கள் திட்டும் காலம்
அப்படி இல்லாதோரை அனைவரும் கொண்டாடும் காலம் (சத்ய)

உபகார மாடிதரே அபகரிசுவ கால
சகலவூதிளிதவகே துர்பீட்ச கால
பதிசுதரு எம்புவன நம்பலரியத கால
சடேயல்லவிதே விபரீத கால (சத்ய)

ஒருவருக்கு உதவி செய்தால், இருப்பதையும் எடுத்துக் கொள்ளும் காலம்
அனைத்தும் தெரிந்தவர்களுக்கு கெட்ட காலம்
மனைவி, மக்கள் இவர்களையே நம்ப முடியாத காலம்
(நான் சொல்வது) பொய்யல்ல; இது விபரீதமான காலம் (சத்ய)

தர்ம மாடுவகே நிர்மூலவாகுவ கால
கர்ம பாதகரிகே பஹு சௌக்ய கால
நிர்மலாத்மக ஸ்ரீ புரந்தர விட்டலனா
மர்மதொளு பஜிஸலரியத காலவய்யா (சத்ய)

தர்ம காரியங்கள் செய்பவர்களுக்கு கஷ்டம் வரும் காலம்
கடமைகளை செய்ய மறந்தவர்களுக்கு நல்ல சௌக்யமான காலம்
நிர்மலமான ஸ்ரீ புரந்தர விட்டலனை
புகழ்ந்து பாடி நினைக்கத் தெரியாதவர்கள் இருக்கும் காலம் இது (சத்ய)

***





Thursday, January 15, 2015

காலம் நழுவிக் கொண்டே இருக்கிறதே..


காலம் நழுவிக் கொண்டே இருக்கிறதே..

* இன்றைய பாடலை எழுதியவர் கோபால தாசர். இந்த தளத்தில் இது இவரது முதல் பாடலாகும்.
* இவர் வாழ்ந்த காலம் 1722 - 1762.
* இவர் மறைந்த தினம் சென்ற 13ம் தேதி (13/01/2015) அனுசரிக்கப்பட்டது.
* இவரைப் பற்றி மேலதிகத் தகவல்கள் இங்கே மற்றும் இங்கே.
* மிகக் குறைந்த காலமே வாழ்ந்த கோபால தாசர், அதற்குள் இயற்றிய நூல்கள் மற்றும் கீர்த்தனைகள் எண்ணற்றவை.
* தாசர்களில் மிக முக்கியமானவர்கள் எனக் கருதப்படுபவர்கள் 4பேர். அவர்களில் ஒருவரான ஜகன்னாத தாசர், இவரது சீடராவார். தன் சீடன் மிகக் கொடுமையான நோயால் துயரப்படுவதைக் கண்ட கோபால தாசர், தன் வாழ்நாளில் 40 ஆண்டுகளை தானம் கொடுத்தவர் என்று சொல்லப்படுகிறது.



இன்றைய பாடலைப் பற்றி:

ஏதோ ஒரு பிறப்பில் செய்த நல்ல செயலால் இப்போது மனிதனாக பிறந்துள்ளேன். ஆனால், உயிரோடிருக்கும் சிறிது காலத்தையும், வெட்டிப் பேச்சு, கெட்ட சகவாசம், அழியும் இந்த உடலை பேணிப் பாதுகாத்தல் - இதையே செய்து கழித்து விட்டேன். ஒரு நாளும் கோயிலுக்குப் போனதில்லை, சான்றோர் கூறும் நல்லுரைகளைக் கேட்டதில்லை, பூஜை புனஸ்காரங்களை செய்வதில்லை. இப்படி எதுவுமே செய்யாமல், கடைசி காலத்தில் எம தூதர்கள் வந்து, நீ என்ன நல்ல காரியங்கள் செய்தாய் என்று கேட்டால், சொல்வதற்கு எதுவுமே இல்லையே, கோபால விட்டலா - என்று முடிக்கிறார்.

Self-help புத்தகங்களில் நம்மிடம் உள்ள தவறுகள் என்னென்ன, எதைச் செய்தால் முன்னேற்றம் ஏற்படும் என்றெல்லாம் விதவிதமாக பட்டியல் போட்டிருப்பாங்க. மொத்த புத்தகத்தையும் படித்து முடித்தபிறகு, அட, இதெல்லாம் நமக்கு ஏற்கனவே தெரியுமே என்போம். அதைப் போலவே, தாசரின் இந்த பட்டியலும். மொத்தம் 5 பத்திகளில், நாம் செய்யாததையும், இனிமேல் செய்ய வேண்டியவற்றையும், அழகாக எடுத்துரைத்து, இடித்துரைக்கிறார்.

அதைக் கேட்டு, அதன்படி நடந்து கொள்ளவேண்டியது நம் பொறுப்பு.

***

ஹ்யாங்கே மாடலய்யா கிருஷ்ணா ஹோகுதித்தே ஆயுஷ்யா
மங்களாங்க பவபங்க பிடிசி நின்ன டிங்கரிகன மாடோ
அனங்கஜனகா (ஹ்யாங்கே)

எப்படி(என்ன) செய்வேன் கிருஷ்ணா, இந்தப் பிறவியின் நாட்கள் வேகமாக கழிகின்றனவே?
என்னை இந்த துயரக் கடலிலிருந்து விடுவித்து, உன் அடியனாக ஆக்குவாயாக (ஹ்யாங்கே)

யேசு ஜனுமத சுக்ருதத பலவோ தானு ஜனிசலாகி
பூசுர தேஹத ஜனுமவு எனகே சம்பவிசிதேயாகி
மோததீர்த்தமத சின்ஹிதனாகதே தோஷக்கே ஒளகாகி
லேஷ சாதனவா காணதே துஸ்ஸஹவாசதிந்தலே தினதின களெதே (ஹ்யாங்கே)

முந்தைய எந்தப் பிறவியில் செய்த நற்செயலோ, இந்தப் பிறவி கிடைத்தது;
பூலோகத்தில் இந்த உடல் / பிறவி எனக்கு கிடைத்துள்ளது
ஆனந்த தீர்த்தரின் மதத்தைப் பின்பற்றாமல், தோஷம் அடைந்து
எதையும் படிக்காமல், கூடா நட்பினைக் கொண்டு தினம்தினம் கழித்தேன் (ஹ்யாங்கே)

சசிமுக கனகத ஆஷேகே பெரெது வசுபதி நின்னடியா
ஹஸனாகி நின்ன நெனெயதே க்ருபெயா களிசதே கெட்டேனய்யா
நிஷிஹகலு ஸ்திரவெந்து தனுவனு போஷிசலாஷிசி ஜீயா
உசுரித நிலவோ சர்வகால நின்னொடெதன எம்புவோ பகேயனு அரியதே (ஹ்யாங்கே)

நிலவைப் போன்ற முகத்தையுடைய, தங்க மேனியுடைய லட்சுமியின் கணவனே, உன் திருவடியை
எப்போதும் உன்னை நினையாமல், உன் பெருமையைப் பேசாமல், கெட்டுப் போனேன்
இரவும் பகலும் எப்போதும் நிரந்தரம் என்றெண்ணி, இந்த உடலை பேணிப் பாதுகாப்பதில் நேரத்தை செலவிட்டேன்
(ஆனால்) இதெல்லாம் எப்போதும் உன்னுடையதே என்னும் உண்மையை அறியாமல் (ஹ்யாங்கே)

நெரே நம்பித பாவடிகளு எல்ல சரிது ஹோதவல்லா
மரளி ஈ பரி ஜெனுமவு பருவ பரவசே எந்து இல்லா
பரிபரி விஷயத ஆஷெயு எனகே பிரிது ஆயிதல்லா
ஹரியே ஜகதி நீனு ஒப்பனில்லதே பொரெவரின்ன ஆருரில்லா பல்லா (ஹ்யாங்கே)

எதையெல்லாம் இன்பம் கொடுக்கும் என்று எண்ணினேனோ (வீடு, செல்வம் etc), அவையெல்லாம் நிரந்தர இன்பத்தைக் கொடுக்காது என்று இப்போது புரிகிறது;
இந்தப் பிறவியின் இறுதியில் இவை எனக்கு உதவும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை
(இப்படி) பலப்பல விஷயங்களில் ஆசைப்பட்டதால், நான் ஒரு நிலையில் இல்லை;
ஹரியே, நீ ஒருவன்தான் இந்த உலகில் எனக்கு உதவி செய்யமுடியும், உன்னைப் போல் வேறு எவருமில்லை, உனக்கு ஒப்புமில்லை (ஹ்யாங்கே)

அவனியொளகே புண்ய க்‌ஷேத்ர சரிசுவ ஹவணிகே எனகில்லா
பவனாத்மக குரு மத்வ சாஸ்த்ரத ப்ரவசன கேளலில்லா
தவகதிந்த குரு ஹிரியர சேவிசி அவர ஒலிசலில்லா
ரவி நந்தன கேளிதர உத்தர கொடே விவர சரகு ஒந்தாதரில்லா (ஹ்யாங்கே)

உலகில் புனித யாத்திரை போவதற்கு எனக்கு எப்போதும் விருப்பம் இருந்ததில்லை
அனுமனின் அவதாரமாகிய மத்வரின் சாஸ்திர உபன்யாசங்களை கேட்டதேயில்லை
எந்த குரு/ஆசிரியருக்கும் சேவை செய்து, அவர் ஆசிர்வாதங்களை பெற்றதில்லை
(இந்தப் பிறவியில் நீ என்ன செய்தாய் என்று சூரிய புத்திரன்) எமன் கேட்டால், சொல்வதற்கு என்னிடம் நல்ல விஷயங்களே இல்லை (ஹ்யாங்கே)

பாகவதரொடகூடி உபவாச ஜாகர ஒந்தின மாடலில்லா
ராகதி சுகமுனி பேள்த ஹரிகத சம்யோக வெம்போதில்லா
நீகுவந்த பவ பயவ பகுதி வைராக்ய வெம்போதில்லா
யோகிவந்த்ய கோபால விட்டலா தலேபாகி நின்னனெ பேடிகொம்பே (ஹ்யாங்கே)

சான்றோர்களுடன் உபவாசம், ஜாகர்ண** ஒரு நாளும் செய்ததில்லை
சுக முனிவர் (பரிக்‌ஷித்) ராஜனிடம் கூறிய பாகவதத்தின் சாரத்தை கேட்டதில்லை
சம்சார சாகரத்திலிருந்து என்னை விடுவிக்க உதவும் பக்தி & வைராக்கியம் எனக்கு இல்லை
கோபால விட்டலனே, உன்னை தலைவணங்கிக் வேண்டிக் கொள்கிறேன் (ஹ்யாங்கே)


**ஜாகர்ண = இரவு முழுவதும் விழித்திருந்து, இறைவனை வழிபடுதல்

***



Saturday, January 10, 2015

புத்திமதி சொன்னால் கேட்டுக் கொள்ளம்மா...



பக்தி, வைராக்கியம், வேத சாரங்கள், இறைவனின் பெருமைகள் இப்படி பலவற்றைப் பற்றி பாடியுள்ள புரந்தரதாசர், மனிதர்களுக்கு சில அறிவுரைப் பாடல்களையும் பாடியுள்ளார். அப்படிப்பட்ட ஒரு பாடல்தான் இது.


திருமணமாகி கணவன் வீட்டிற்குப் போகும் பெண்ணுக்கு அறிவுரை சொல்வதுபோல் அமைந்துள்ள இந்தப் பாடலை, பல வருடங்களாக பல்வேறு இடங்களில் கேட்டு வந்தாலும், இது நிஜமாகவே தாசர் பாடல்தானா? இப்படியெல்லாம்கூட அவர் பாடுவாரா? என்றெல்லாம் சந்தேகம் இருந்து வந்தது. ஹரிதாசர்களைப் பற்றி பல ஆராய்ச்சிகளை செய்து வரும், திரு அருளுமல்லிகே பார்த்தசாரதி அவர்களின் ‘தாசர்களின் 10,000 பாடல்கள் தொகுப்பில்’ இந்தப் பாடலைப் பார்த்தபிறகே அந்த சந்தேகம் தீர்ந்தது.

நீங்களும் இந்தப் பாடலைப் பார்த்து, கேட்டு மகிழவும். இந்த புத்திமதிகள் 500 ஆண்டுகளுக்கு முன் சொல்லப்பட்டவை. இந்த நூற்றாண்டுக்கும் இவை பொருந்துமா இல்லையா என்பதை உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.

***

புத்தி மாது ஹேளிதரெ கேளபேகம்மா
மனதி சுத்தளாகி கெண்டனுடனே பாளபேகம்மா (புத்தி)

புத்திமதி சொன்னால் கேட்க வேண்டுமம்மா
தூய்மையான மனதுடன் கணவனுடன் வாழ வேண்டுமம்மா (புத்தி)

அத்தே மாவகஞ்சி கொண்டு நடெயபேகம்மா
சித்ததொல்லபன அக்கரெயன்னு படெயபேகம்மா
ஹொத்து ஹொத்திகே மனெய கெலச மாடபேகம்மா
ஹத்து மந்தி ஒப்புவ ஹாகே நடெயபேகம்மா, மகளே (புத்தி)

மாமியார் & மாமனாருக்கு மரியாதை கொடுத்து நடக்க வேண்டுமம்மா
இறைவனின் கருணைக்குப் பாத்திரம் ஆகும்படி நடக்க வேண்டுமம்மா
வேளா வேளைக்கு வீட்டு வேலை செய்ய வேண்டுமம்மா
பத்து பேர் பாராட்டும்படி நடக்க வேண்டுமம்மா (புத்தி)

கொட்டு கொம்புவ நெண்டரொடனே த்வேஷ பேடம்மா
அட்டு உம்புவ காலதல்லி ஆட பேடம்மா
ஹட்டி பாகலல்லி பந்து நில்லபேடம்மா
கட்டி ஆளுவ கண்டனொடனே சிட்டு பேடம்மா, மகளே (புத்தி)

உறவினர்களிடம் சண்டை சச்சரவு வேண்டாம்மா
சாப்பிட்டு/வேலை செய்யும் நேரத்தில் (பகல் வேளைகளில்) வெளியில் விளையாட வேண்டாம்மா
வீட்டு வாசலில் வந்து நின்று பொழுதைப் போக்க வேண்டாம்மா
கணவனுடன் எப்போதும் கோபம் வேண்டாம்மா (புத்தி)

நெரெஹொரெதவரிகே நியாயவன்னு ஹேளபேடம்மா
கருவ கோப மத்சரவன்னு மாட பேடம்மா
பரர நிந்திப ஹெண்களொடனே சேர பேடம்மா
குரு புரந்தரவிட்டலன்ன மரெய பேடம்மா, மகளே (புத்தி)

அக்கம்பக்கத்து வீட்டார் சண்டையில் தலையிட வேண்டாம்மா
கர்வம், கோவம் ஆகியவற்றை விட்டு விடம்மா
மற்றவரை தூற்றும் பெண்களுடன் சேர வேண்டாம்மா
நம் குருவான புரந்தர விட்டலனை மறக்க வேண்டாம்மா (புத்தி)

***







Monday, January 5, 2015

கேசவா நாரயணா மாதவா!


ஹரிதாசர்களின் Hierarchy - யார் முதலில் வந்தாங்க, யார், யாருக்கு குரு என்கிற வரிசைகளை இந்த தளத்தில் விரைவில் படமாக போடுகிறேன்.



இன்றைய மிகமிக அருமையான, என் மனதுக்கு மிகவும் நெருங்கிய இந்தப் பாடலை எழுதியவர் - நம் தளத்தில் இவரது முதலாம் பாடல் இதுவே - அவர், ஸ்ரீ வாதிராஜர். இவர் வாழ்ந்த காலம் 1480 - 1600. 120 வருடங்கள் வாழ்ந்து, மாத்வ வழியில் பல்வேறு முக்கிய முடிவுகளை, புத்தகங்களை, பாடல்களை எழுதியவர். புரந்தரதாசர் இவரது சமகாலத்தில் வாழ்ந்தவர். வாதிராஜரின் விக்கி பக்கம் இங்கே : http://en.wikipedia.org/wiki/Vadirajatirtha

விழித்திருக்கும் நேரம் எல்லாம் அந்த கேசவன், நாராயணன், மாதவன் பெயரைச் சொல்லிக் கொண்டே இருக்கலாமே என்கிறார். அந்த பெயர் எப்படிப்பட்டது, அதனை உச்சரித்ததால் பலன் அடைந்தவர்கள் என்பதற்கு சில உதாரணங்கள் - இப்படிப்பட்ட விஷயங்களை இந்தப் பாடலில் பாடுகிறார்.

வாதிராஜரின் பாடல்களில் அவரது முத்திரையான ‘ஹயவதன’ என்னும் பெயர் இருக்கும். இவர் பூஜித்து வணங்கிய ஸ்ரீ ஹயக்ரீவரின் பெயரே அது. இந்தப் பாடலிலும் கடைசி வரியில் ‘ஹயவதன’ என்று பாடியிருக்கிறார்.



***

மாது மாதிகே கேசவா நாராயண மாதவ எனபாரதே

(ஒவ்வொரு முறை) பேசும்போதும், கேசவ, நாராயண, மாதவ என்று சொல்லக்கூடாதா..

ப்ராதஹ் காலதி எத்து பார்த்தசாரதி எந்து
ப்ரீதிலி நெனெது சத்கதிய ஒந்ததே வ்யர்த்த
மாதுகள் ஆடல்யாகே, ஹே ஜிஹ்வே, மாதவ எனபாரதே (மாது)

காலையில் எழுந்தவுடன் பார்த்தசாரதி என்று (அவன் பெயர்) சொல்லி,
(அவனைப் பற்றி) அன்புடன் நினைத்து, பிறவிப்பயனை அடையவில்லையென்றால் இந்தப் பிறவியே பயனற்றது;
வெட்டிப் பேச்சு பேசித் திரியாமல், ஹே நாக்கே, மாதவா என்று சொல்லக்கூடாதா (மாது)

ஜலஜ நாபன நாமவு ஈ ஜகக்கெல்ல ஜனன மரண ஹரவு
சுலபவாகிவுது சுகக்கே காரணவிது
பலித பாபகளனல்ல பரிஹரிசுவுதெந்து
திளிது திளியதிஹரே, ஹே ஜிஹ்வே மாதவ எனபாரதே (மாது)

அந்தப் பத்மநாபனின் பெயரானது, மறுபிறப்பு என்பதே இல்லாமல் செய்துவிடும்
உச்சரிக்க மிகவும் சுலபமானது; சுகங்கள் பெறுவதற்கு காரணமானது;
செய்து குவித்துள்ள பாவங்கள் அனைத்தையும் போக்க பரிகாரமானது;
இவை அனைத்தையும் தெரிந்தும், தெரியாதவாறே இருக்கிறாயே, ஹே நாக்கே, மாதவா என்று சொல்லக்கூடாதா (மாது)

தருணி திரௌபதிய சீரே செளெயுதீரே ஹரி நீனே கதிஎனலு
பரம புருஷ பவ பஞ்சன கேஷவ
துருளரமர்திசி தருணிகே வரவித்த
ஹரி நாமப் ப்ரியவல்லவே, ஹே ஜிஹ்வே மாதவ எனபாரதே (மாது)

திரௌபதியின் சேலையை (ஒருவன்) இழுக்கும்போது, அவள் நீயே கதி, ஹரி, என்று சொன்னாள்
உத்தமமானவனும், பிரச்னைகளில் சிக்கியவர்களுக்கு உதவுபவனுமான கேசவன் ஆனவன்
கெட்டவர்களை வீழ்த்தி திரௌபதிக்கு வரம் அளித்தான்
(அப்படிப்பட்ட) ஹரியின் பெயரானது (சொல்வதற்கு) மிகவும் பிரியமானதல்லவா, ஹே நாக்கே, கேசவா என்று சொல்லக் கூடாதா (மாது)

ஹேம கஷ்யப சம்பவ ஈ ஜகக்கெல்ல நாமவே கதி எனலு
ப்ரேமதிந்தலி பந்து காமிதார்த்தகளித்த
ஸ்வாமி ஹயவதனன நாமாவ நெனெயுத்தா
யாம யாமக்கே பிடதே ஹே ஜிஹ்வே மாதவ எனபாரதே (மாது)

ஹிரண்யகசிபு கதை (மூலம்) - நாராயணனின் பெயரே நமக்கு கதி (என்று தெரியவந்தது)
(கூப்பிட்டவுடன்) அன்புடன் வந்து, கேட்டதைக் கொடுப்பவன்,
(அந்த) ஹயவதனனின் பெயரை, ஒவ்வொரு வேளையும்,
விடாமல் சொல்லலாமே, ஹே நாக்கே, மாதவா என்று சொல்லக் கூடாதா (மாது)

***

கீழே கொடுத்திருக்கும் சுட்டியில் இந்தப் பாடலைப் பாடியவர் திரு. நரசிம்ம நாயக்.

***




Thursday, January 1, 2015

உத்தமர் தம் உறவு வேண்டும்!

உத்தமர் தம் உறவு வேண்டும்!

அனைவருக்கும் இனிய 2015 ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!



இன்றைய பாடலை இயற்றிய ஸ்ரீபாதராயர் பற்றி ஏற்கனவே நாம் பார்த்துள்ளோம். ஹரிதாசர்கள் வரிசையை துவக்கி வைத்தவரும், புரந்தரதாசர் முதலனாவர்களுக்கே முன்னோடியான இவரைப் பற்றி, இந்தப் பதிவில் பார்த்துக் கொள்ளவும்.

http://dasar-songs.blogspot.in/2011/05/blog-post.html

இந்தப் பிறப்பில் செய்யும் விதவிதமான பாவங்கள், மற்றவர்களுக்கு / உடன் இருப்போருக்குக் கொடுக்கும் தொந்தரவுகள் / துன்புறுத்தல்கள், இவை எதுவும் வேண்டாம், ஏன் என்னை மறுபடி மறுபடி பிறக்க வைக்கிறாய்? உன் பக்தர்கள் அனைவரையும் நீ காப்பாற்றியதைப் போல், என்னையும் காப்பாற்று. இப்போதைக்கு, இந்தப் பிறவியில், நான் எப்போதும் உத்தமர்களோடே இருக்கச் செய், மேன்மேலும் பாவங்களைச் செய்ய வைக்காதே - என்றெல்லாம் மனமுருகி கடவுளிடம் வேண்டுகிறார் ஸ்ரீபாதராயர்.

ஞான, பக்தி, வைராக்கியத்தை அடைந்து, இறைவனை தொடர்ந்து வழிபட்டு, அவனை அடைந்த ஸ்ரீபாதராயரே இப்படியெல்லாம் பாடினால், நாமெல்லாம் எந்த மூலைக்கு?

மிகமிக அருமையான இந்தக் கீர்த்தனையை கேட்டு / படித்து மகிழவும்.

உத்தமர சங்க எனகித்து சலஹோ
சித்த ஜனக சர்வோத்தம முகுந்தா (உத்தமர)

உத்தமர்கள் உடனே என்னை எப்போதும் இருக்கச் செய்
அனைவரில் உத்தமரே, முகுந்தனே, (உத்தமர)

திருதிருகி புட்டலாரே பரர பாதிசலாரே
பரிபரிய பாபகள மாடலாரே
மரண ஜனனகளெரடு பரிஹார மாடய்யா
கருணா சமுத்ரா முரவைரி கிருஷ்ணா (உத்தமர)

திரும்பத் திரும்பப் பிறக்க மாட்டேன்; (அப்படிப் பிறந்து) மற்றவரை துன்புறுத்த மாட்டேன்
விதவிதமான பாவங்களை செய்ய மாட்டேன்
மரணம், பிறப்பு இவ்விரண்டையும் (இந்த சுழற்சியை) எனக்குக் கொடுக்காதே
கருணைக்கடலே, முர (என்னும்) அரக்கனின் எதிரியான கிருஷ்ணனே (உத்தமர)

ஏன பேளலி தேவ நா மாடித கர்ம
நானா விசித்ரவை ஸ்ரீனிவாசா
ஹீனஜனரொளகாடா ஷ்வானிதகள கூடா
ஞானவந்தன மாடோ ஜானகிரமணா (உத்தமர)

என்ன சொல்வேன் தேவனே, நான் செய்த பாவங்கள்
விதவிதமானவை, ஸ்ரீனிவாசனே
கீழ்த்தரமானவர்களுடனான என் சேர்க்கை, அவர்களுடனான என் நட்பு (இவைகளை விடுவித்து)
(என்னை) ஞானியாக்குவிடு ஜானகி ரமணனே (உத்தமர)

நின்ன நம்பித மேலே இன்னுபய(வ்) யாதகே
பன்னகாதிப சயன மன்னிசய்யா
முன்ன பகுதரனெல்லா சென்னாகி பாலிசித
ஒடெய ரங்கவிட்டலா என்ன தொரெயே (உத்தமர)

உன்னை நம்பிய பிறகு, எனக்கு பயம் எதற்கு
பாம்புப் படுக்கையில் படுத்திருப்பவனே, என்னை மன்னித்துவிடு
முந்தைய பக்தர்களையெல்லாம் நன்றாக காப்பாற்றிய
ரங்க விட்டலனே, என் தலைவனே (உத்தமர)

**

இந்த அருமையான பாடலை திரு. நரசிம்ம நாயக் அவர்கள் பாடியதை இங்கு கேட்டு மகிழுங்கள்.



***

Wednesday, April 2, 2014

கண்டேன் மலையப்பனை..



புரந்தரதாசருக்கு 24x7 இறைவனின் சிந்தனையில், அவன் புகழைப் பாடி, அவன் சரிதங்களை பரப்புவதிலேயே கழிந்தது. நினைவில் இருக்கும்போது கோயில்களில் புரந்தரவிட்டலனை தரிசிப்பார். தூங்கும்போது கனவிலும் அவனே வருவான். கனவிலுமா? ஆமாம். அதுவும் எப்படி? நெற்றியில் நாமம்; காது, கை, கால்களில் நகைகள், கலகல என்னும் கொலுசு சத்தம் - இவற்றுடன் அந்த திம்மய்யன் வந்து காட்சியளித்தானாம். வாயுதேவர், பிரம்மாதி தேவர்கள் அனைவரும் அந்த பரம்பொருளுக்கு சேவை செய்ய வரிசையாக நிற்கும் காட்சியும் தெரிந்ததாம். இதை அருமையாக வர்ணிக்கும் இந்த புகழ்பெற்ற பாடலை கேட்டு ரசியுங்கள்.

ஏனு ஹேளலி தங்கி திம்மய்யனா பாதவனு கண்டே
கனசு கண்டேனே மனதல்லி களவளகொந்தேனே (ஏனு)

என்ன சொல்வேன் தங்கையே, திம்மய்யனின் பாதங்களை கண்டேன்
கனவு கண்டேனே மனதினில் கலவரம் கொண்டேனே (ஏனு)

ஹொன்ன கடகவனிட்டு திம்மய்ய தா கொள்வ நாமவனிட்டு
அந்துகே பலுக எனுதா என்ன முந்தே பந்து நிந்திதனல்லே (ஏனு)

தங்க வளையல் அணிந்து திம்மய்யன் அவன் பளிச்சிடும் நாமத்துடன்
காலில் கொலுசு அணிந்து என் முன்னே வந்து நின்றானே (ஏனு)

மகர குண்டலவனிட்டு திம்மய்ய தா கஸ்தூரி திலகவனிட்டு
கெஜ்ஜே கலுக எனுதா ஸ்வாமியு பந்து நிந்திதனல்லே (ஏனு)

காதில் தோடுடனே திம்மய்யன் அவன் நெற்றியில் திலகமிட்டு
கொலுசு சத்தத்துடனே ஸ்வாமி வந்து நின்றானே (ஏனு)

முத்தின பல்லக்கி யதிகளு ஹொத்து நிந்திதனல்லே
சத்ர சாமரதிந்தா ரங்கய்யன உத்சவ மூருத்திய (ஏனு)

முத்தால் வேய்ந்த பல்லக்கை யதிகள் (மத்வ ஆச்சார்யர்கள்) தூக்கி நின்றனரே
குடை விசிறியுடனே ரங்கய்யனின் உத்சவ மூர்த்தியை (தூக்கி நின்றனரே) (ஏனு)

தாமர கமலதல்லி கிருஷ்ணய்ய தா பந்து நிந்திதனல்லே
வாயு பொம்மாதிகளு ரங்கய்யன சேவேய மாடுவரே (ஏனு)

தாமரை மலரினிலே கிருஷ்ணய்யன் அவன் வந்து நின்றானே
வாயு, பிரம்மாதி தேவர்கள் ரங்கய்யனின் சேவையை செய்கின்றனரே (ஏனு)

நவரத்ன கெட்டிசித ஸ்வாமி என்ன ஹ்ருதய மண்டபதல்லி
சர்வாபரணதிந்த புரந்தர விட்டலன கூடிதனே (ஏனு)

நவரத்தினங்களால் கட்டப்பட்ட என் இதயக்கோவிலில்
நகைகளால் அலங்காரம் செய்யப்பட்ட புரந்தரவிட்டலன் வந்து நின்றானே (ஏனு)

***

http://www.youtube.com/watch?v=WuEHBdNVodU

***