Showing posts with label Ugabhoga. Show all posts
Showing posts with label Ugabhoga. Show all posts

Monday, October 5, 2015

உகாபோகங்கள்.

உகாபோகங்கள்.


இவை சாதாரண பாடல்களைப் போல் - சரணம், பல்லவி, அனுபல்லவி - என்ற விதிகளைக் கொண்டிருக்காது. ஒரு பத்தி - குறைந்த பட்சம் நான்கு வரிகளைக் கொண்ட பாடல். மற்ற பாடல்களைப் பாடும் முன்னர் இந்த உகாபோகங்களைப் பாடுவது பாடகர்களின் வழக்கம். ராக ஆலாபனைகள் செய்வதற்கு மிகவும் வசதியானவை இந்த உகாபோகங்கள். அனைத்து தாசர்களும் இவ்வகைப் பாடல்களை இயற்றியுள்ளனர். இன்றைய பாடலை இயற்றியவர் புரந்தரதாசர்.

த்வைத சித்தாந்தத்தில், பல்வேறு கடவுளர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு தனித்தனி பொறுப்புகள் உள்ளன. அவர்களை வழிபட்டால் அந்தந்த பலன்கள் கிடைக்கும். ஆனால், இவர்கள் அனைவர்க்கும் தலைமை ஸ்ரீமன் நாராயணன் ஆவார். அவரே சர்வோத்தமன். அனைத்து கடவுளர்களும், தங்கள் பொறுப்பைச் செய்வதற்கு ஹரியே காரணம். அவரே அவர்களை வழிநடத்துகிறார்.



இந்த கருத்தை வெளிப்படுத்துவதே இன்றைய பாடல்.

***

சதத கணநாத சித்திய நீவ கார்யதலி
மதி ப்ரேரிசுவளு பார்வதி தேவியு

நிரந்தரமானவன், கணங்களின் தலைவன் (கணபதி) நாம் செய்யும் அனைத்து செயல்களிலும் கூட இருந்து அருள் புரிவான்
நல்ல புத்தியைக் கொடுப்பாள் பார்வதி தேவி

முகுதி பதக்கே மனவீவ மஹா ருத்ர தேவரு
ஹரி பகுதி தாயகளு பாரதி தேவி

முக்தி பெறுவதற்கான வழியைக் காட்டுவார் சிவபெருமான்
ஹரி பக்தி செய்வதற்கான வழியைக் காட்டுவாள் பாரதி தேவி

யுக்தி சாஸ்திரகளல்லி வனஜா சம்ப்ஹவனரசி
சத்கர்மகள நடெசி சுஞான மதி இத்து

புத்திகூர்மை, எதையும் அடைவதற்கான செயல்திறனை கொடுப்பாள் தாமரையில் அமர்ந்திருப்பவள் (சரஸ்வதி)
நற்செயல்களை நம்மை செய்ய வைத்து, நல்ல புத்தியைக் கொடுப்பான் (பவமானன்=அனுமான்)

கதி பாலிசுவ நம்ம பவமானனு
சித்ததல்லி ஆனந்த சுகவ நீவளு ரமா

உதவி புரிவான் நம்ம பவமானன் (அனுமான்)
எப்பொழுதும் அமைதியாக இருக்க ஆனந்தத்தைத் தருவான் இலக்குமி தேவி

பகுத ஜனரொடெய நம்ம புரந்தர விட்டலனு
சதத இவரளு நிந்து ஈ க்ருதிய நடெசுவனு

பக்தர்களின் பாதுகாவலன் நம் புரந்தர விட்டலன்
எப்பொழுதும் இந்த எல்லாக் கடவுளர்களின் உள்ளேயும் இருந்து, அவரவர்களின் செயல்களை செய்ய உதவி புரிவான்.

***