
புரந்தரதாஸரைப் பற்றிய ஒரு அருமையான காணொளியை - 1 மணி நேரம் ஓடக்கூடியது - கண்டேன். ஒரே பிரச்சினை அது கன்னடத்தில் இருப்பதே அதுவும் no subtitles. அந்தப் படத்திற்கு subtitle எழுதணும்னா அது ஒரு தனி ப்ராஜெக்டா போயிடுமென்பதால், காணொளியில் காட்டப்பட்டும் சம்பவங்களை இங்கு சிறுகுறிப்பாக தந்துள்ளேன்.
***
இதே தளத்தில் உள்ள இந்த முந்தைய பதிவை படித்து பிறகு - கீழே இருக்கும் சம்பவங்களையும் பார்த்துவிட்டு காணொளியை பாருங்கள். அட, கன்னடம் சுலபம்தாங்க.. பால் = ஹால், மக்கள் = மக்களு. அவ்வளவே.. :-)
***
ஒரு சமயம், தாஸரைப் பற்றி கேள்விப்பட்ட கிருஷ்ணதேவராயர் அவரைப் பார்க்க ஸ்ரீவியாஸராயர் மடத்திற்கு வந்தார்.
அப்போது தாஸர் பாடிய பாடல்.
நிம்ம பாக்ய தொட்டதோ
நம்ம பாக்ய தொட்டதோ
(உன்கிட்டே இருப்பது மஹாலட்சுமி. என்கிட்டே இருப்பது அவளின் தலைவன் ஸ்ரீஹரி. அதனால், உன் பாக்யம் பெரிதா.. என் பாக்யம் பெரிதா).
***
ஒரு நாள் பிஷைக்கு போயிருக்கும்போது, செல்வந்தர் ஒருவர் தாஸருக்கு தெரியாமல் அவரது பையில், முத்துக்களை போட்டுவிட்டார். அதைக் கண்ட தாஸர், அவைகளை எடுத்து
நீரில் போட, பதறிப்போன செல்வந்தர், ஏன் அப்படி செய்தீர் என்று வினவினார்.
அதற்கு தாஸர் சொன்னது - எனக்கு இந்த முத்துக்கள் தேவையில்லை. எனக்கு இதை விட அபாரமான முத்துக்கள் கிடைத்துள்ளன. அவை பகவானின் நாமங்கள். அதை நான்
உங்களுக்கு தருகிறேன். அதை வைத்துக்கொண்டு சந்தோஷமடையுங்கள் என்று கூறி
முத்து கொள்ளீரோ ஜனரு
முத்து கொள்ளீரோ
என்று பாடினார்.
***
ஒரு முறை தாஸர், தன் சிஷ்யர் அப்பண்ணனிடம் கைகால் கழுவ நீர் கொண்டுவா என்று சொன்னார். தூக்கத்தில் இருந்த சிஷ்யர் நீர் கொண்டு வராததால், விட்டலனே சொம்பில் நீர் கொண்டு வர, நேரம் ஆகிவிட்ட காரணத்தால், கோபமுற்ற தாஸர் அந்த சிஷ்யரை கடிந்துகொண்டு, அந்த சொம்பினால், அவர் தலையில் இடித்தார்.
மறு நாள் கோயிலுக்கு சென்று பார்க்கையில், விட்டலனின் தலையில் காயம் இருந்தது. மேலும் கண்களின் கண்ணீர் வந்துகொண்டிருந்தது.
அப்போது அனைத்தும் புரிந்துகொண்ட தாஸர், விட்டலனிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு, அந்த காயத்தை தொட்டவுடன், அது சட்டென்று மறைந்தது.
***
மற்றொரு முறை விட்டலன், தாஸர் வேடமிட்டுக் கொண்டு ஒரு தாசியின் வீட்டிற்கு சென்று, தன் ஒரு கை வளையைக் கொடுத்துவிட்டான்.
இங்கே கோயிலில் விட்டலனின் வளையைக் காணாமல், ஊரெல்லாம் தேட ஆரம்பித்தனர்.
அப்போது அங்கு வந்த தாசி, நேற்றிரவு தாஸரே என் வீட்டிற்கு வந்து இந்த வளையைக் கொடுத்தார் என்று கூற, தாஸரை கட்டிவைத்து அடித்துவிட்டனர் அதிகாரிகள்.
அப்போது தாஸர் பாடிய பாடல் -
முய்யக்கே முய்ய தீரிது
(பழிக்குப் பழி தீர்ந்தது - நான் உன்னை தலையில் இடித்தேன். அதுக்கு பழியாக எனக்கு அடி கிடைத்தது)
பிறகு விட்டலன் அசரீரியாக பிரச்சினையை விளக்கியதால், தாஸரை விடுவித்தனர்.
***
மேலும் காணொளியில் உள்ள பாடல்கள்:
ஆச்சார இல்லத நாலிகே
தாரக்கே பிந்திகெ நா நீரிகோகுவே தாரே பிந்திகெயா
ராகி தந்தீரா
ஈஸ பேகு இத்து ஜெயிஸ பேகு
எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக - குருவே சிஷ்யரைப் புகழ்ந்து பாடும் பாடல் - ஸ்ரீ வியாஸராயர், ஸ்ரீ புரந்தரதாஸரைப் புகழ்ந்து பாடும் இந்தப் பாடலோடும், இன்னும் சில
விவரங்களோடும், இந்த காணொளி முடிகிறது.
தாஸரெந்தரே புரந்தர தாஸரய்யா
(தாஸரென்றால் அது புரந்தர தாஸர்தான்).
**இங்கு குறிப்பிடப் பட்டிருக்கும் பாடல்கள் எல்லாம் இந்த தாஸர் பாடல்கள் தளத்தில் தொடர்ந்து வரும் என்று தனியாக சொல்லவும் வேண்டுமா.
***
இனி காணொளி.
Watch Shri Purandara Daasaru in Animation View More Free Videos Online at Veoh.com
***
தாஸரெந்தரே புரந்தர தாஸரய்யா.







